வாய்க்காலில் நீந்தியபடி சடலத்தை கொண்டு சென்று அடக்கம்- பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு

கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
வாய்க்காலில் நீந்தியபடி சடலத்தை கொண்டு சென்று அடக்கம்- பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு
Published on

கடலூர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை வாய்க்காலில் நீந்தி கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலை நிலையில் உள்ளனர்.

இது மக்களுக்கு பெறும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.

இதன் எதிரொலியால், வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வாய்க்காலை கடந்து செல்ல ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும் அவர், மயானத்திற்கு செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com