search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயரிங் மாணவர் பலி"

    வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    விருதுநகர்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பல்லவன்கோவிலைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 22). இவர் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    நேற்று விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு யோகேஸ்வரன் வந்தார். பின்னர் மாலையில் ரெயில் மூலம் திண்டுக்கல் செல்வதற்காக விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது திண்டுக்கல் செல்லும் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குருவாயூர் சென்ற ரெயிலில் யோகேஸ்வரன் தவறுதலாக ஏறிவிட்டார். இதையறிந்த யோகேஸ்வரன் சுதாரித்துக் கொண்டு வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கினார். இதில் அவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள், யோகேஸ்வரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே யோகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கீழக்கரையில் அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
    கீழக்கரை:

    கீழக்கரை அலவாக்கரையைச் சேர்ந்தவர் பொன்ராஜ். வயர்மேன். இவரது மகன் நாக அர்ஜூன் (வயது 19). கீழக்கரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக் கொண்டு தனியார் நிறுவனத்தில் பகுதிநேர பயிற்சி பெற்று வந்தார்.

    நேற்று இரவு இவர், பயிற்சியை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    ஏர்வாடி முக்கு ரோடு அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாக அர்ஜூன், படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கீழக்கரை போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பைக் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    சேலத்தில் மோட்டார் சைக்கிளும் லாரியும் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

    சேலம்:

    சேலம் பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்(வயது 20). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் வெங்கடேஷ் என்பவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு சேலத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவடைய திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்தனர். பின்னர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள். 

    நெய் காரப்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த லாரியும் பயங்கரமாக மோதியது. இதில் சதீஸ் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் வெங்கடேஷ் பலத்த காயம் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த வெங்கடேசை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் பலியான சதீஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயல்குடி அருகே நள்ளிரவில் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் உடல் நசுங்கி இறந்தார்.

    சாயல்குடி:

    திருச்செந்தூரில் இருந்து வேதாரண்யத்திற்கு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த வழியாக ராமேசுவரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற சுற்றுலா பஸ் எதிர்பாராதவிதமா அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதி பலத்த சேதமடைந்தன.

    இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 14 பேரும் சுற்றுலா பஸ்சில் பயணம் செய்த 15 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    விபத்து குறித்து கடலாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்தனர்.

    காயமடைந்தவர்களில் 11 பேரை சாயல்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், 4 பேரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கும், 15 பேரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பூபாலன் (21) என்பவர் பரிதாபமாக இறந்தார். இவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் ஆவார். விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×