என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மகேஸ்வரன், ஜெயக்குமார் மீது கட்டுப்பாடற்ற லாரி மோதியது.
    • 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

    கோவை,

    கோவை புலியகுளம் அருகே உள்ள வி.சி.காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது46). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (38) என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டு இருந்த மகேஸ்வரன், ஜெயக்குமார் ஆகியோர் மீது மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேருநகரை சேர்ந்தவர் பெருமாள்சாமி (78), தர்மபுரியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (26). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் காளப்பட்டி ரோட்டை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் 2 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பெருமாள்சாமி சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    உயிருக்கு போராடிய ராஜலட்சுமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    இருகூர் அருகே உள்ள எல்.அன்டு.டி. பைபாஸ் ரோட்டில் 25 வயது மதிக்க தக்க வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    கோவை:

    கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.

    அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

    • பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் பள்ளியின் சுவர் ஏறி குதித்து மாணவர் விடுதிக்குள் புகுந்தார்.
    • தொடர்ந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை:

    கோவை மாவட்டம் நவக்கரை அடுத்த மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே விடுதியும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் பள்ளியின் சுவர் ஏறி குதித்து மாணவர் விடுதிக்குள் புகுந்தார்.

    பின்னர் அங்கிருந்த மாணவர்கள் சிலரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசினார்.

    இதை அங்கு பணியில் இருந்த ஆசிரியை ஒருவர் பார்த்து தட்டி கேட்டார். அதற்கு அந்த சிறுவன், அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த சிறுவன் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். மாணவர் விடுதி மட்டுமின்றி, மாணவிகள் விடுதிக்குள்ளும் சென்று, அவர்களையும் தாக்கி, அவர்களை பயமுறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

    எனவே தொடர்ந்து மாணவ, மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
    • மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்குட்பட்ட நாதேகவுண்டன் புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 11-ந் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது.

    அங்குள்ள காய்ந்த புற்கள், சருகுகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இருந்த போதிலும் தீ வனம் முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    இன்று 5-வது நாளாக வனத்தில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

    தீயை கட்டுப்படுத்தும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த வன பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனசரக பணியாளர்கள் என மொத்தம் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், அவர்களில் சிலருக்கு கண், கால்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதற்கு உடனடியாக சிகிச்சையும் எடுத்து கொண்டு, தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே 5 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்தவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் விமானப்படையின் உதவியை கோரியுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறியதாவது:-

    தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகளில் தீ பரவி வருகிறது. வனத்தில் உள்ள சில மூங்கில் மரங்கள் தீயில் எரிந்துள்ளன.

    குறிப்பிட்ட இடங்களில் தீ தடுப்பு கோடுகளை அமைத்து, எதிர் தீ வைத்து தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

    காட்டுத்தீ காரணமாக வனவிலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை.

    தற்போது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமான படைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ஹெலிகாப்டர் வந்தால் பக்கெட் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல வசதியாக அருகிலேயே ஒரு குட்டையும், நீச்சல் குளமும் உள்ளது. நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம்.

    அனுமதி கிடைத்தால் இன்று அல்லது நாளைக்குள் தீயை அணைக்கும் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்படலாம். வன எல்லைப்பகுதியை தாண்டி தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயண சீட்டு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
    • ரெயில் வரும் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 11 முறை இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில் பசுமையான காடுகள், நீர்வீழ்ச்சிகள், அரியவகை வனவிலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட மலை ரெயில் குகைகள், அந்தரத்தில் தொங்கும் ரெயில் பாலங்களை கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரெயிலில் பயண சீட்டு கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

    இதையொட்டி ஆண்டுதோறும் சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டுமென ரெயில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதன்படி இந்தாண்டுக்கான சிறப்பு ரெயில்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இன்று முதல் தொடங்கப்பட்டது.

    இந்த ரெயில் வரும் ஜூன் மாதம் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் 11 முறை இயக்கப்படுகிறது.

    இதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. ரெயிலில் பயணித்த அனைவருக்கும் சாக்லேட், ஜூஸ், 2 பிஸ்கட், கீ ஜெயின் உள்ளிட்ட பரிசுகளும் இலவசமாக வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையத்தில் புறப்பட்ட ரெயில் மதியம் 2.25 மணிக்கு சென்றடைந்தது.

    இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்தனர். அவர்கள், செல்லும் வழியில் காடுகளின் இயற்கை அழகையும், வனவிலங்குகளை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நாளை முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதில் பயணம் செய்ய முதல் வகுப்பிற்கு ரூ.1,575, 2ஆம் வகுப்பிற்கு ரூ.1,065 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    • பாகுபலி காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும், மனித-வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜக்கனாரி வனப்பகுதியில் பாகுபலி யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.

    அதிகாலை நேரங்களில் மேட்டுப்பாளையம் அடர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பாகுபலி யானை பகல் நேரங்களில் குரும்பனூர், சமயபுரம், கிட்டம்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பின்னர், மாலை அல்லது இரவு நேரங்களில் சமயபுரம் பகுதி வழியாக மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் சென்று விடுகிறது.

    வனத்துறையினரும் தொடர்ந்து அந்த யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் தொடர்ந்து பாகுபலி காட்டு யானையின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதுவரை இந்த பாகுபலி யானை மனிதர்கள் எவரையும் தாக்கியதில்லை என்றாலும், மனித-வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பாகுபலி யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த வண்ணமாகவே உள்ளனர்.

    • ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை.
    • அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை.

    கோவை :

    அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்று கொள்ளமாட்டார்கள். இந்த எக்ஸ்.எல். சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது?. எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் தான் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.

    அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3¾ லட்சம் ஆகும். மாதம், மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகிறதா? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

    அண்ணாமலை கூறிய நபர் வாட்ச் வாங்கினது ரூ.4½ லட்சம் எனவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தனக்கு கொடுத்ததாகவும் அண்ணாமலை கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. பரிசாக கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?

    அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை. தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழ்கிறீர்கள்.

    என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஈஷாவில் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    • அங்குள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பலவகை பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர்.

    கோவை:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஈஷாவில் உள்ள லிங்கபைரவி தேவிக்கு பக்தர்கள் பல வகையான பழங்களை அர்ப்பணித்து வழிபட்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அவளின் அருளைப் பெற்றனர்.

    சுற்றுவட்டார கிராம மக்களால் கனிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியை பக்தர்கள் ஆதியோகியில் இருந்து ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து மாலை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா மற்றும் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் பக்திப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், லிங்கபைரவியில் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    இதுதவிர, பக்தி நயம் ததும்பும் தேவாரப் பாடல்களை தமிழக கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கவேண்டும் என கடந்த மகாசிவராத்திரி அன்று சத்குரு கூறினார். அதன் ஒருபகுதியாக, ஆதியோகி முன் தேவாரப் பாடல்களை அர்ப்பணிக்கும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதன் தொடக்கமாக, சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுவன் சூரிய நாராயணன் தோடுடைய செவியன், பித்தா பிறைசூடி, வானனை மதி சூடிய போன்ற தேவாரப் பாடல்களை ஆதி யோகிக்கு அர்ப்பணித்து அவரின் திருமேனியை பரிசாகப் பெற்றார். வெறும் 9 வயதே ஆன இச்சிறுவன் தனது தந்தை ஹரிஹரன் சிவராமனிடம் இருந்து 5 வயது முதல் கர்நாடக சங்கீதம் கற்று வருகிறார். இவர் தூர்தர்ஷன் பொதிகை டிவி, மலேசியா சர்வதேச கர்நாடக இசை திருவிழா, கிருஷ்ண கான சபை மற்றும் பல்வேறு கோவில் திருவிழாக்களிலும் பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். அவருடன் சேர்ந்து ஏராளமான குழந்தைகள் தேவாரம் பாடி பரிசுகள் பெற்றனர். முன்னதாக, சிவனுக்கு உகந்த கைலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

    • குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூர் மீனாட்சி புரம் வீதி வண்டி காளியம்மன் கோவில் திருவிழா நேற்று இரவு நடந்தது. கோவிலுக்கு திருவிழாவை காண அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பெண்களிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்ட அங்கு இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்து வடக்கிப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் வேட்டைக்காரன் புதூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    பொதுமக்கள் தாக்கிய தில் பன்னீர் செல்வம் காயடைந்ததால் அவை போலீசார் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகி றார்கள்.

    • மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
    • தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்- ஊட்டி, குன்னூர்- ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ெரயில் சேவை இயக்கப்படுவது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இதில் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ெரயில் பாதையில் பசுமையான காடுகள், அருவிகள், வன விலங்குகள், பாறைகளால் குடையப்பட்ட ெரயில் குகைகள் உள்பட இயற்கைக் காட்சிகளைக் கண்டு ரசிக்க உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரைச் சேர்ந்த பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ெரயிலில் பயணச் சீட்டு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். இதனால் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம்-ஊட்டி, குன்னூர்-ஊட்டி, ஊட்டி-கேத்தி இடையே சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறப்பு ெரயில்கள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) முதல் ஜூன் 25-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இந்த ெரயில்கள் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றன. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டி ரயில் நிலையத்துக்கு காலை 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ெரயில் நிலையத்திலிருந்து மாலை 4.45 மணிக்கு சிறப்பு மலை ெரயில் புறப்பட்டு குன்னூர் ெரயில் நிலையத்துக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 24-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ெரயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம் ெரயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு சிறப்பு ெரயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 16 முதல் ஜூன் 25-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சிறப்பு மலை ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில் ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து பகல் 11.25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும்.

    மேலும், ஏப்ரல் 14 முதல் ஜூன் 25-ந் தேதி வரை ஊட்டி -கேத்தி இடையே சிறப்பு மலை ெரயில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மின்கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு பகுதியில் உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் குடிநீர் குழாய்கள் உடைந்து 3 மாதங்களாகிறது.

    பொதுமக்கள் சரி செய்ய கோரிக்கை விடுத்த பின்னர் சீரமைப்பு பணி நடந்தது. ஆனாலும் இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிகிறது.மேலும் அந்த வார்டில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட்டு வந்தன. இந்த பணியும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கியது. அந்த பணியும் இதுவரை முடியவில்லை.

    இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் ஏ.ஜி நகர், ஆர்.வி நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் இந்த வார்டில் உள்ளது. இது தொடர்பாக இந்த வார்டின் கவுன்சிலர் வனிதா சஞ்ஜீவ்காந்தி பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் பணிகள் முடிவடையாமலேயே உள்ளன.

    இந்த நிலையில், 27-வது வார்டு உறுப்பினர் வனிதா சஞ்ஜீவ்காந்தி தலைமையில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள், உடனடியாக சம்மந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் கூறுகையில், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் 27-வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் இந்த வார்டுக்கு தேவையான குடிநீர் குழாய், தெரு விளக்குகள் சீரமைப்பது தடை ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் விரைவில் பணிகளை முடித்து தர வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

    • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 2 டன் பழங்களை கொண்டு, விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    கோவை

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பான ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் தமிழ்புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி கோ வை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்க ளிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ் புத்தாண்டை யொட்டி கோவை புலிய குளம் முந்தி விநாயகர் கோவில் நடை அதிகாலையி லேயே திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷே கங்களும், தீபாராதனையும் நடைபெற்றது.

    பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு உள்பட 2 டன் பழங்களை கொண்டு, விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    புத்தாண்டையொட்டி காலையிலேயே முந்தி விநாயகர் கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்த னர். அவர்கள் நீண்ட வரி சையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    மருதமலை முருகன் கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக் கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் மற்றும் ஆராதா னைகள் நடை பெற்றது.

    புத்தாண்டு என்பதால், மருதமலை முருகன் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை, ெபாள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அவர்கள் மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் கோவிலுக்கு சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மலையடிவாரத்திலும் எங்கு பார்த்தாலும் பக் தர்கள் கூட்டமாகவே கா ணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி, அம்மனுக்கு ரூ.6 கோடி மதிப்பில் பணம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தியாகி குமரன் மார்க்கெட் பிளேக் மாரியம்மன் கோவிலிலும் அம்மன் தங்க அங்கி அலங்காரத்திலும், பெரிய கடைவீதி மாகாளியம்மன் மலர் அலங்காரத்திலும், பொன்னையராஜபுரம் விக்னராஜ கணபதி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதேபோல் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ள மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    ×