என் மலர்
கோயம்புத்தூர்
- தமிழ்செல்வி அரவிந்தன் கைப்பையில் இருந்த வைர மோதிரத்தை திருடியுள்ளார்.
- அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அரவிந்தன் . டாக்டர். இவரது வீட்டில் கோவையை சேர்ந்த தமிழ்செல்வி ( வயது45) என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், அரவிந்தன் தனது கைப்பையில் வைத்திருந்த வைர மோதிரம் காணாமல் போனது.
இதுகுறித்து அவர் சந்தேகத்தின் பேரில், தமிழ் செல்வியிடம் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து அதனை எடுக்க வில்லை என கூறி மறுத்தார். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் அவர் தமிழ் செல்வியை வேலையை விட்டு நீக்கி விட்டார். பின்னர் அவரது வீட்டில் சரோஜா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.
சரோஜா, தமிழ்செல்வியிடம் சென்று காணாமல் போன வைர மோதிரம் குறித்து கேட்ட போது, அவர் தான் வைர மோதிரத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து தமிழ்செல்வி அந்த மோதிரத்தை திருப்பி கொடுத்து விட்டார். தொடர்ந்து அரவிந்தன் தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை, 2 வைர மூக்குத்தி, 4 வாட்சுகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். இதுகுறித்து அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் வேலைக்கார பெண் தமிழ்செல்வி மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது காக்காபாளையம் குட்டையில் சகோதரர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.
- குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அன்னூர்:
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த காக்காபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக்குமார் (வயது 10), வெற்றிவேல் (8) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக்குமார் 5-வது வகுப்பும், வெற்றிவேல் 3-வது வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் அண்ணனும், தம்பியும் அங்குள்ள ஒரு குட்டையில் குளிப்பதற்காக, சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. எனவே பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது காக்காபாளையம் குட்டையில் சகோதரர்களின் சைக்கிள் மற்றும் உடைகள் கிடந்தன.
எனவே சந்தோஷ்குமார் உறவினர்களுடன் குட்டைக்குள் இறங்கி தேடி பார்த்தார். அப்போது தீபக்குமார், வெற்றிவேல் தண்ணீருக்குள் மூழ்கி மயங்கி கிடப்பது தெரியவந்தது. எனவே 2 பேரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாகடர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து தீபக்குமார், வெற்றிவேல் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. குட்டையில் குளிக்க சென்ற அண்ணன்- தம்பி ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
- கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி செல்கிறது.
இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் ஈரோடு மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள்.
மேலும் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொது மக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. மேலும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் கொடிவேரி உள்பட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதே போல் கொடிவேரியில் கடந்த 2 மாதமாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதி வருகிறது.
இந்நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கொடிவேரிக்கு அணைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். இதே போல் நேற்று (சனிக்கிழமை) கொடிவேரி தடுப்பணைக்கு அதிகளவில் பொதுமக்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரி தடுப்பணைக்கு வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட பொது மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கொடிவேரி தடுப்பணைக்கு சுற்றுலா பயணிகள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களின் கூட்டம் அலை மோதியது.
தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு கொட்டும் தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களாக கொடிவேரி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக காணப்பட்டது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த பொது மக்கள் தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர்.
இதையொட்டி கொடிவேரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- சக ஊழியர்கள் மீட்டு சரவணம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணம்பட்டி,
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுபாஷ் யாதவ். இவரது சகோதரர் போலோகுமார் யாதவ்.
இவர்கள் 2 பேரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேட்டில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனியில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றனர்.சம்பவத்தன்று சுபாஷ் யாதவ் (வயது27) கன்வேயர் பெல்ட்டிலிருந்து தண்ணீர் கேன் பாட்டில்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சுபாஷ் யாதவை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு சரவணம் பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுபாஷ் யாதவ் சகோதரர் போலோ குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அரசு அனுமதி இன்றி ஆழ்குழாய் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வரும் நிறுவனத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
- பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.
கோவை,
தூத்துக்குடி-கோவை இடையே ெரயில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து, இரவு நேர இணைப்பு ெரயில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
ெகாரோனாவுக்கு முன்பு வரை தூத்துக்குடியில் இருந்து 7 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ெரயில், வாஞ்சி மணியாச்சி ெரயில்நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ெரயிலுடன் இணைத்து இயக்கப்பட்டு வந்தது.ெகாரோனா தொற்று பரவல் காரணமாக 2020-ல் நாடு முழுவதும் பல்வேறு ெரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதில், இந்த ெரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
ஆனால், நிலைமை சீரானபிறகு இந்த ெரயில் மீண்டும் இயக்கப்படவில்லை. எனவே, இந்த ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போத்தனூர் ெரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் என்.சுப்பிரமணியனுக்கு சேலம் கோட்ட ெரயில்வே அலுவலகம் கடந்த 23-ம் தேதி பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாரம் மும்முறை ெரயில் இயக்க ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ெரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கூறியதாவது: துறைமுக நகரமான தூத்துக்குடியில் இருந்து நிறைய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோவை, திருப்பூர், பொள்ளாட்சி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் பல பொருட்கள் ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, சரக்குகளை ஏற்றிச்செல்ல இந்த ெரயில் பயனுள்ளதாக இருக்கும், கடல் மீனுக்கான சந்தை வாய்ப்பு இங்கு உள்ளது.
தூத்துக்குடியில் இருந்து இரவில் மீன்களை ெரயிலில் ஏற்றி அனுப்பினால், காலையில் அவை இங்கு வந்து சேர்ந்து விடும். இதனால் வியாபாரிகள் பயன்பெறுவர். நீலகிரியில் விளையும் பல்வேறு காய்கறிகளை தூத்துக்குடிக்கு கொண்டு செல்லவும் இந்த ெரயில் பயன்படும். பயணிகளைப் பொருத்தவரை, திருச்செந்தூர், பழநி முருகன் கோவில்கள் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று வரமுடியும்.
தென் மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கானோர் கோவையில் தங்கி பணிபுரிகின்றனர். அவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பஸ்களையே அதிகம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கும் இந்த ெரயில் பயன்தரும். மேட்டுப்பாளையத்துக்கு நேரடியாக இந்த ெரயிலை இயக்கும்போது, தென் மாவட்ட மக்கள் சுற்றுலாவுக்காக நீலகிரி வந்து செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- 17 பார்கள் புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை
- போலீஸ் சோதனையில் 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகளில் டாஸ்மாக் பாரும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த டாஸ்மாக் பார்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடபட்ட நிலையில் காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம் என 17 பார்கள் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பாரை ஒப்பந்தம் எடுத்தவர்கள் சிலர் முறையாக புதுப்பிக்காமல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு பணம் கட்டவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 25-ந் தேதி மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உரிய பணம் செலுத்தாமல் செயல்பட்ட 10 பார்களுக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெள்ளியங்காடு பகுதியில் சீல் வைக்கபட்ட டாஸ்மாக் பாரில் உள்ளவர்கள் கள்ளத்தனமாக டாஸ்மாக் பாரின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தனர்.
இது தொடர்பாக காரமடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு மது விற்பனை செய்தவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை இதுபோன்று விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர்.
- இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- 3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
பொள்ளாச்சி,
கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் 3-ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ந் தேதி திருத்தேர் முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் தேரோட்டம் நடந்தது. இதையடுத்து நேற்று மாலை 2-ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள் முன்னிலையில் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தினர், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், செ.தாமோ தரன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
வாண வேடிக்கைகள் முழங்க விநாயகர் சப்பரம் முன்னால் செல்ல பின்னால் சூலக்கல் மாரியம்மன் தேர் பக்தர் வெள்ளத்தில் தவழ்ந்து வந்தது.
3-ம் நாள் தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.
- 3 பேரும் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.
- மாயமான முத்தம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
கோவை ஆனைமலை அருகே தர்மராஜ் காலனியை சேர்ந்தவர் கமலம் (வயது 70). இவரது மகள் செல்வி (47). செல்வி மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் செல்விக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செல்வி கடந்த சில மாதங்களாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கோவையை சேர்ந்த முத்தம்மாள் (50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
கமலம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோர் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். நேற்று இவர்களது வீட்டிற்கு முத்தமாள் வந்தார்.
அப்போது அவர் நானும், இன்று உங்களுடன் மொட்டை மாடியில் படுத்து கொள்கிறேன் என தெரிவிக்கவே 3 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர்.அங்கு நேரம் போவது தெரியாமலும், தூங்காமலும் வெகுநேரமாக பேசி கொண்டே இருந்தனர். இவர்கள் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது முத்தம்மாள் நான் டீ போட்டு எடுத்து வருகிறேன் என கூறி விட்டு சென்று மீண்டும் டீயுடன் வந்தார்.
அதனை கமலம் மற்றும் அவரது மகளுக்கு கொடுத்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து டீ குடித்து விட்டு தூங்கி விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை கமலம் வீட்டிற்கு அருகே வசிக்கும் முத்துராஜா என்பவர் தேங்காய்களை போடுவதற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.
இதையடுத்து மொட்டை மாடியில் சென்று பார்த்தார்.அப்போது செல்வியும், கமல மும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து, செல்வியின் கணவருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் உடனடியாக இங்கு வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கமலம், செல்வி ஆகியோர் கழுத்து மற்றும் வீட்டில் வைத்திருந்த 24 பவுன் நகைகள் மாயமாகி உள்ளதாக செல்வியின் கணவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்த முத்தம்மாள் திடீரென மாயமாகி விட்டார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இவர் கொடுத்த டீயை குடித்த பின்பு தான் தாயும், மகளும் மயங்கி உள்ளனர். இதனால் அவர் டீயில் ஏதாவது மயக்க மாத்திரை அல்லது வேறு ஏதாவது கலந்து கொடுத்தாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
- 18 தேர்வு மையங்களுக்கு 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- தேர்வு மையங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
கோவை,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வு கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7,742 நபர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் மிகுந்த கவனத்துடனும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுகிறது.
இத்தேர்வினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 18 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறைகண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் மொத்தம் 682 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
மேலும், தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குநர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடை பெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண் டம்பாளைம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் காந்திபுரம் போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வர்களுக்கும் பேருந்து வசதிகள் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
- இறந்த வாலிபர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார்.
- சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை ,
கோவை போத்தனூரில் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்திற்கு இன்று காலை பயணிகள் வந்திருந்தனர்.
அப்போது பயணிகள் நடைமேடை அருகே உள்ள மின் கம்பத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.இதை பார்த்ததும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக சம்பவம் குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது இறந்த வாலிபருக்கு 45 வயது இருக்கும். அவர் நீல நிற சட்டை அணிந்து இருந்தார். இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன.
- நாளை மறுநாள் முதல் கலந்தாய்வு தொடங்குகிறது
கோவை,
கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணை யவழி விண்ணப்பப்பதிவு தொடங்கியது. கோவை அரசு கலைக் கல்லூரியில் 23 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தமுள்ள 1433 இடங்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கலந்தாய்வு நடை முறை நாளை மறுநாள் (29-ந் தேதி) தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்பு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 1-ந் தேதி வணிகப்பிரிவு பாடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.
ஜூன் 2-ந் தேதி கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிதம், அறிவியல் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வும், ஜூன் 3 -ந் தேதி பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகம் உள்ளிட்ட பாடங்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. இறுதியாக ஜூன் 5 -ந் தேதி தமிழ், ஆங்கில இலக்கிய பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடர்பான மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் இணையதளத்தைக் காணலாம் என்று முதல்வர் உலகி தெரிவித்துள்ளார்.
- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
- பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பாரதிய ஜனதா அரசு கட்டியுள்ளது. இந்த விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றன. இதனை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
பல கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் கவர்னர்களை அழைத்தது கிடையாது. பெரும்பான்மையுடன் இருக்கும் பிரதமர் பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதில் எந்த தவறும் இல்லை. தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்ற அறிக்கை வருத்தமளிக்கிறது.
வருமான வரித்துறை சோதனை என்பது பொதுவானது. வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனங்கள் மீதும், கார்கள் மீதும் தாக்குதல் நடத்துவது சட்டத்துக்கு புறம்பானது.
இவ்வாறு அவர் கூறினார்.






