என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என கேட்டதால் ஆத்திரம்
    • கவுன்சிலர்கள் வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைக்க மேயர் வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் திருக்குறள் வாசிக்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாட மறந்தனர். இதனையடுத்து கவுன்சிலர்கள் சுட்டி காட்டிய நிலையில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. கூட்டம் தொடங்கிய உடன் மாநகர பகுதிகளில் நடைபெறும் பணிகள் மந்த கதியில் நடப்பதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் குற்றம் சாட்டினர். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர் பிரபாகரனுக்கும், மேயர் கல்பனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மிச்சர் சாப்பிடுவதற்காக மன்றத்திற்கு வருகிறீர்களா என காட்டமாக அ.தி.மு.க கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பினார். 10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா என மேயர் கல்பனா பதிலுக்கு பேசினார். இருவரும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    தொடர்ந்து கூட்டத்தில்பொறியியல் பிரிவு மேம்பாட்டு பணி, பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணி, ஆழ்குழாய் கிணறுகளை இயக்கி பராமரிக்கும் பணி, வீடுகளுக்கு புதிய பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணி, வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதிகளில் புதிதாக பாதாள சாக்கடை மேற்கொள்ளும் பணி, தார்ச்சாலை, தெருவிளக்கு பராமரிப்பு பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மொத்தம் 47 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், பேசியதாவது:-

    மாநகராட்சி சார்பில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொ கை படிப்படியாக செலுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில்கூட ரூ.100 கோடி செலுத்தப்பட்டது. இன்னும் ரூ.240 கோடி பாக்கி உள்ளது. அதுவும், விரைவில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேயர் கல்பனா பேசுகையில், மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி பணி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து முடிக்க அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஓணம் கொண்டாட சென்ற நேரத்தில் துணிகர சம்பவம்
    • பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    குனியமுத்தூர்,

    கேரள மாநிலம் திரு ச்சூரை சேர்ந்தவர் வேணு கோபால். இவரது மனைவி ஸ்ரீ கலா (வயது 49). இவர்கள் குடும்பத்துடன் போத்தனூர் அருகே உள்ள குறிச்சியில் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் ஓணம் பண்டிகை முன்னிட்டு கடந்த 27ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தங்களது சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றனர். அப்போது இவர்கள் வீட்டில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், டாலர், கம்மல் ,வளையல் உள்பட 15 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய ஸ்ரீ கலா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது .

    இது குறித்து அவர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று விசாரணை நடத்தினர் கைரேகை நிபு ணர்கள் வரவழைக்கப்பட்ட னர். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஓணம் பண்டிகை கொண்டாட சென்றவரின் வீட்டில் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பீளமேடு அருகே உள்ள தொட்டிபா ளையம் பிரிவை சேர்ந்தவர் ராணி (46 ).சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் வீட்டிலிருந்த நெக்லஸ், வளையல், கை செயின் மோதிரம் உட்பட 7 முக்கால் பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி சென்றனர் .இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பருவமழை சரியாக பெய்யாததால் இக்கட்டான சூழ்நிலை
    • தமிழக அரசு பயிர்களுக்கு உரிய நிவாரணம் தர கோரிக்கை

    வடவள்ளி,

    கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    தற்போது பூலுவபட்டி, வடிவேலம்பாளையம், ஆலாந்துறை, நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி பயிரான நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது.

    தென் மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால், தண்ணீர் இன்றி நிலக்கடலை செடிகள் முற்றிலும் கருகி உள்ளது.

    இது குறித்து வடிவேலாம்பாளையம் பகுதியில் நிலக்கடலை பயிர் செய்துள்ள நாகராஜ் என்ற விவசாயி கூறியதாவது:-

    தனக்கு 2 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பருவமழையை நம்பி நிலக்கடலை பயிர் செய்து உள்ளோம்.

    பருவமழை பெய்யாததால், வெப்பம் காரணமாக பயிர்கள் கருகி விட்டன. நிலக்கடலை பயிர் செய்ய ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளேன். நிலக்கடலை காய் செடியில் பிடிக்காமல் உள்ளது. அதே போல் கால்நடைகளுக்கு தீவனங்களாக கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே தமிழக அரசு பயிர்களுக்கு உரிய நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 10 அரசு பஸ்களில் உடனடியாக அமலுக்கு வந்தது
    • விரைவு பஸ்களில் செய்வோர் ரூ.64 செலுத்த வேண்டும்

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை போக்குவரத்துக் கழக கிளையில் சுமார் 36 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து சேலம், திருப்பூர், கோவை, பழனி, பொள்ளாச்சி பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு பஸ் கட்டணமாக ரூ.64 வசூலிக்கப்பட்டது. அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்ப டும் நிலையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் வால் பாறை-பொள்ளாச்சி இடையே இயக்கப்பட்டு வந்த பஸ்களில் 10 பஸ்கள் கடந்த 24-ந் தேதி முதல் சாதரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டன.

    இந்த பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து, பயணக் கட்டணமாக ரூ.64க்கு பதிலாக ரூ.48 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விரைவு பஸ்களில் பயணம் செய்வோர் கட்டணமாக ரூ.64 செலுத்த வேண்டும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடன் கொடுக்க மறுத்ததால் ரவுடிகள் என கூறி அட்டகாசம்
    • அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்

    கோவை,

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் மஜித்(வயது51).

    இவர் அன்னூர் சத்தி ரோட்டில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அப்துல் ரகீம் (40) என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    மஜித்தின் கடை அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான வேலை நடந்து வருகிறது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சிலர் பேக்கரிக்கு வந்து கடனுக்கு சாப்பிட்டு விட்டு சென்றனர்.

    சம்பவத்தன்று இதே போல இவர்கள் பேக்கரிக்கு வந்தனர். அவர்களிடம் காசாளர் அப்துல் ரகீம் உரிமையாளர் கடன் கொடுக்க கூடாது என கூறி உள்ளார். எனவே நீங்கள் பணத்தை கொடுத்து விட்டு சாப்பிட்டு செல்லுங்கள் என கூறினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் நாங்கள் யார் தெரியுமா நாங்கள் அன்னூர் ரவுடிகள் எங்களிடமே நீ பணம் கேட்கிறாயா என கூறி கடையில் இருந்த டேபிள் சேர் ஆகியவறை எட்டி உதைத்தனர். பின்னர் சேரால் காசாளர் அப்துல் ரகீமின் தலையில் தாக்கினர்.

    இதனை பார்த்த கடையில் உரிமையாளர் மஜித் தடுப்பதற்காக சென்றார். அவரையும் தொழிலாளர்கள் தாக்கினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற அப்துல்லா என்பவர் தட்டிக்கேட்டார். அவரையும் அந்த கும்பல் தாக்கி விட்டு சென்றனர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரவுடிகள் என கூறி கடன் கொடுக்க மறுத்த பேக்கரி உரிமையாளர் உள்பட 3 பேரை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.

    • கோவை சரவணம்பட்டி போலீசில் இளம்பெண் பரபரப்பு புகார்
    • வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றார்

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

    நான் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளாராக பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவரின் நண்பரான ஹட்கோ காலனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உன்னி என்ற மதுசூதனன் (36) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்.

    எனது கணவரின் நண்பர் தானே என்ற அடிப்படையில் நான் சகஜமாக பழகி வந்தேன். சம்பவத்தன்று நான் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

    வீட்டில் நான் தனியாக இருந்த போது உன்னி என்ற மதுசூதனன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். தனியாக இருந்த என்னை அவர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து நான் சத்தம் போட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கினார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    எனவே வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த என்னை பலாத்காரம் செய்ய முயன்ற எனது கணவரின் நண்பர் உன்னி என்ற மதுசூதனன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் தனியாக இருந்த நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற உன்னி என்ற மதுசூதனன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • விசைத்தறி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் எடுத்து வந்தார்
    • கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை- வாகன தணிக்கை சோதனை

    கருமத்தம்பட்டி,

    கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (வயது55). இவர் அந்த பகுதியில் விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார்.

    இவர் தனது விசைத்தறி கூடத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, நேற்று தனது மோட்டார் சைக்கி ளில் கருமத்தம்பட்டியில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்றார்.பின்னர் அங்கு ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு, தனது வாகனத்தின் சீட்டுக்கு அடியில் உள்ள பாக்சில் வைத்து விட்டு விசைத்தறி கூடத்தி ற்கு புறப்பட்டார்.

    வரும் வழியில் கருமத்தம்பட்டி-சோமனூர் ரோட்டில் உள்ள காபி கடை வாசலில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்த போது பெட்டி திறந்திருந்தது. மேலும் உள்ளே வைத்திருந்த பணமும் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளுடன் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடித்து சிறை யில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வைத்த பணம் கொள்ளை போய் இருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தீவிர ஆலோசனை
    • வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்குழு கூட்டம், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட அளவில் நடக்கும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் பேசியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

    கோவையில் கலைஞர் மகளிர் உரிம தொகைக்காக 3 கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு, அங்கு 7 லட்சத்து 41 ஆயிரத்து 799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் 2,80,837 மனுக்கள் தொடர்பாக களஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, தோட்டக்கலைத்துறை மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் நேரடியாக களஆய்வு செய்யப்பட்டு உள்ளன.

    ேகாவை மாநகராட்சியில் கடந்த 2 நிதியாண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு, எஸ்.எப்.சி, என்.எஸ்.எம்.டி ஆகிய திட்டங்கள் மூலம் ரூ.278.74 கோடி மதிப்பீட்டில் 3743 சாலைப்பணிகள் நடந்து வருகின்றன. அவற்றில் 942 பணிகள் முடிந்து விட்டன.

    உக்கடம் ஆத்துப்பாலம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை மேம்பால நீட்டிப்பு பணிகள் நடக்கிறது.

    கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேற்கு புறவழிச்சாலை திட்டத்தில் முதல்கட்டமாக மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி செலவில் 11.80 கி.மீ. தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மதுக்கரை முதல் நரசிம்ம நாயக்கன்பாளையம் வரை 32.43 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை, தென்ச ங்கம்பாளையம், கிணத்துக்கடவு, வடசித்தூர், மதுக்கரை, செட்டிபாளையம், எஸ்.எஸ்.குளம், வெள்ளைமடை ஆகிய வட்டார பகுதிகளில் ரூ.1.58 கோடி செலவில் 317 வீடுகள் புனரமைக்கப்பட்டு உள்ளன.

    தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத் தின்கீழ் கோவை மாவட் டத்தில் ஒட்டுமொத்தமாக 995 அரசு மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை படிக்கும் 62, 209 மாணவர்கள் பலன்பெற்று வருகின்றனர். காலை உணவு தரமாகவும், சுவையாகவும் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக்அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோகிலா (பொது), கமலக்கண்ணன் (வளர்ச்சி), வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் துவராகநாத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கிழங்கு வியாபாரியை வழிமறித்து தாக்கி தூக்கி வீசியது
    • கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    கோவை,

    கோவை தடாகம் அருகே உள்ள திப்பனூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 72).

    கிழங்கு வியாபாரி. சம்பவத்தன்று இவர் அதிகாலை 3.30 மணியளவில் வியாபாரத்துக்கு செல்வதற்காக கிழங்கை எடுத்துக்கொண்டு மொபட்டில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை யானை கருப்பசாமியை வழிமறித்து தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சத்தம் எழுப்பி யானையை காட்டுக்குள் விரட்டினர். யானை தாக்கியதில் கருப்பசாமி தலை மற்றும் இடது கையில் காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் முழக்கம்
    • ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமலர் தலைமை தாங்கினார்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை வட்டார தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காரமடை வட்டாரக் கல்வி அலுவலக வளாகத்தில் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் மணிமலர் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் நாராயணசாமி வரவேற்றார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் மகேஷ்குமார், செயலாளர் கனகராஜ் , தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி, வட்டார பொருளாளர் தண்டபாணி, எஸ்.புங்கம்பாளையம் தலைமை ஆசிரியர் கிரிஸ்டோபர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஒளியழகன், ரங்கநாதன் நாகராஜ், பழனிமுத்து, தங்கராஜ், கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • பெற்றோர் வேறு கல்லூரியில் சேர்க்காததால் வேதனை
    • வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள டி.காளிபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.

    இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை.

    எனவே அவர் தனது பெற்றோரிடம் வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். ஐ.டி. சேர்க்குமாறு கடந்த 2 மாதங்களாக கூறி வந்தார்.

    பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வந்ததால் மாணவி சேர நினைக்கும் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருந்ததால் அதே கல்லூரியிலேயே படிக்குமாறு மாணவியிடம் கூறி வந்தனர்.

    இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவே தனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை.
    • ராஜீவ் காந்தி தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார்.

    கோவை:

    ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கவுமார மடாலயம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பின்னர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு காலம் காலமாக ஒன்றைத்தான் செய்து வருகிறது. தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதும், தவறான முன்னுதாரணங்களை உதாரணமாக காட்டி மேலும் மேலும் தவறுகளை செய்வதும் தான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.

    கலைஞர் காலத்தில் நடைபெறாததெல்லாம் ஸ்டாலின் காலத்தில் நடைபெறுவதன் மூலம் தமிழகம் இனி அமைதி பூங்காவாக இருக்கப் போவதில்லை. அராஜகம் செய்பவர்களின் கைகளில் அடங்கிப் போகிற மாநிலமாக ஆகிவிடுமோ என்ற அச்சம் நல்லுணர்வு படைத்த அத்தனை தமிழ் நெஞ்சங்களிலும் இருக்கிறது.

    ராஜீவ் காந்தியை கொன்றவர்களை கட்டி அணைத்தார். அப்போது அவர் ஒரு செய்தி சொல்கிறார். எந்தத் தவறு இன்றைக்கு நாம் செய்கிறோமோ, அந்த தவறு மீண்டும் நம்மை வந்து தாக்கும். அதுதான் கர்மா. இன்றைக்கு ஸ்டாலின் எந்த தவறுகளை செய்கின்றாரோ அந்த தவறுகளுக்குரிய விலையை அவர் நிச்சயமாக கொடுக்க வேண்டியது இருக்கும்.

    ராஜீவ் காந்தி என்பவரை காங்கிரஸ் தலைவராக பார்க்க கூடாது. அவர் தேசிய தலைவராக தான் இந்த மண்ணில் இறந்தார். காலை உணவு திட்டத்தால் பள்ளிகளில் உணவுகள் வீணாவதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு குழந்தைகளுக்கு என்ன வேண்டுமோ அதை தருவதற்கு அரசு முயல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    ×