search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டில் தனியாக இருந்த நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி
    X

    வீட்டில் தனியாக இருந்த நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி

    • கோவை சரவணம்பட்டி போலீசில் இளம்பெண் பரபரப்பு புகார்
    • வீட்டில் தனியாக இருந்த போது அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றார்

    கோவை,

    கோவை பீளமேடு அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:

    நான் சாய்பாபா காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளாராக பணியாற்றி வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவரின் நண்பரான ஹட்கோ காலனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் உன்னி என்ற மதுசூதனன் (36) என்பவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்.

    எனது கணவரின் நண்பர் தானே என்ற அடிப்படையில் நான் சகஜமாக பழகி வந்தேன். சம்பவத்தன்று நான் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தேன்.

    வீட்டில் நான் தனியாக இருந்த போது உன்னி என்ற மதுசூதனன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். தனியாக இருந்த என்னை அவர் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்து நான் சத்தம் போட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் என்னை தாக்கினார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    எனவே வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த என்னை பலாத்காரம் செய்ய முயன்ற எனது கணவரின் நண்பர் உன்னி என்ற மதுசூதனன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் தனியாக இருந்த நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற உன்னி என்ற மதுசூதனன் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×