என் மலர்
கோயம்புத்தூர்
- ஈரோட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் டெண்ட் அடித்து குடும்பமாக வசிப்பதாக தகவல்
- குப்பைகள் அதிகளவில் குவிவதால் சுகாதார சீர்கேடு
பீளமேடு,
கோவை காந்திமா நகர் பகுதி 25-வது வார்டுக்குட்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க கூடிய பகுதியாகும். இந்த பகுதி பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பொழுதை கழிக்கவும், நடைபயிற்சி செல்வதற்கு வசதியாகவும் இந்த வார்டில் ஒரு விளையாட்டு மைதானமும் உள்ளது.
இந்த நிலையில் இந்த மைதானத்தில் ஈரோட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கேயே டெண்ட் அடித்து, குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதியே குப்பைமேடாக காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு, தேங்கி அங்கேயே கிடப்பதால் அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்களுக்கு சுகாதார சீர்கேட்டால் நோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதா வது:-
வருடம் தோறும் இந்த மைதானத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கி செல்வது வாடிக்கையாக உள்ளது.
சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இவர்கள் இங்கே தங்குவதும், அதன்பிறகு செல்வதும் தொடர்கதையாக உள்ளது.
இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களை அங்கேயே போட்டுவிடுவதால் அந்த பகுதியே குப்பை மேடாக காட்சியளித்து, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.
- கோவை மாவட்டத்தை பொருத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் இருப்பதாக கலெக்டர் கிராந்திகுமார் பேட்டி
கோவை,
சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டருடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு திட்டங்களை செயல்ப–டுத்துவது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் உள்ளது.
குறிப்பாக போக்சோ வழக்குகள் பதிவாகி வருகிறது. இதனை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பது மற்றும் மாதம் ஒருமுறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
மனித-வனவிலங்கு மோதல் தடுக்க தனிகுழு அமைக்கப்பட உள்ளது. காட்டுப்பன்றி பிரச்சினை சட்ட ரீதியாக அணுக வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திட்டங்கள் செயல்படுத்துவதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு துறைகள் 5 முதல் 10-வது இடத்தில் உள்ளது. மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக உள்ளது. சுகாதாரத்துறையில் "ஸ்டெப் சர்வே" இலக்கு வைத்து உள்ளது. அந்த இலக்கு நோக்கி சென்று வருகிறோம். பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் தவிர்ப்பது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இந்த வருடம் 3 முதல் 4 இறப்பு பதிவாகி உள்ளது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் காப்பீடு அட்டையை 7 லட்சம் பேர் வைத்துள்ளனர். இதனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் பயன்படுத்தி கொள்ள முடியும். நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கோவை மாவட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 100 சதவீதம் எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட உள்ளது.
இதனை அனைத்து வகை யான பயனாளிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆலோசனை கூட்டம் பயனுள்ளதாக இருந்தது.
கோவைக்கான மாஸ்டர் பிளானை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். இதற்கு மிகப்பெரிய தீர்வு கிடைக்கும் என நினைக்கிறேன். மண்டல அளவிலான மாஸ்டர் பிளான் தயாரித்து வருகிறோம்.
மாவட்டத்தில் அரசு நிலம் மீட்பு அதிகளவில் நடந்து வருகிறது. விமான நிலையம் விரிவாக்கத்தில் தற்போது வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் விமான நிலையம் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மீதம் உள்ள 20 முதல் 30 ஏக்கர் வரையிலான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் ஒரு மாதத்தில் முடியும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பாதுகாக்க வேலி அமைக்கப்படும்.
கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் படிப்படியாக நடத்தப்படும். மேற்கு புறவழிச்சாலை பணிகளுக்கு 2ம் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணிகள் டிசம்பரில் முடியும். மெட்ரோ ரெயில் அவிநாசி ரோடு, சரவணம்பட்டி இடது புறத்தில் அமைய உள்ளது. இந்த பணிகளால் பாதிப்பு ஏற்படாது. யாரும் கவலைப்பட தேவையில்லை.
டெக்னாலஜி நிறைய இருக்கிறது. பிளான் செய்து பணிகள் நடத்தப்படும்.
மேலும், தொழில் துறையினருக்கு குறைதீர் கூட்டம் நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கங்கள் மூலம் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திட்ட சாலைக்கு என ரூ.144கோடி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில், ரூ. 20 கோடிக்கு திட்ட சாலைக்கு அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கல்வி கடனுக்கு 2,500 விண்ணப்பம் வாங்கி உள்ளோம். இதில், வங்கிகளில் உள்ள பிரச்சினை குறித்து தலைமை நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
இதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் குழு அமைத்து 2 வாரங்களில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
கோவைக்கு கல்வி கடன் வழங்க ரூ.400 கோடி இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் யாருக்கு தேவை என்பதை கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு 31 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளனர். மாவட்ட அளவில் 60 சதவீதம் பேர் பயன் அடைந்து உள்ளனர்.
பள்ளி, கல்லூரியில் போதை பொருள் பழக்கம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- போட்டோ எடுக்க முயன்றபோது ரவிபிரகாஷ் மீது கல்வீசி தாக்கினர்
- கோவையில் ரகளையில் ஈடுபட்ட 3 திருநங்கைகள் கைது
கோவை,
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவிபிரகாஷ் (வயது 31). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ரவிபிரகாஷ் சம்பவத்தன்று இரவு சாய்பாபாகாலனியில் உள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க சென்றார். அப்போது அவரது செல்போனை யாரோ சிலர் அபேஸ் செய்து விட்டனர்.
எனவே அதிர்ச்சி அடைந்த ரவிபிரகாஷ் உடனடியாக சாய்பாபா காலனி போலீசில் புகார் அளிக்க சென்றார்.
அங்கு போனின் ஐ.எம்.இ.ஐ நம்பர் வேண்டும் என்று போலீசார் கேட்டு உள்ளனர். எனவே ரவிபிரகாஷ் வேறு வழியின்றி வீடு திரும்பினார்.
இந்தநிலையில் அவர் தொலைந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அப்போது மறுமுனையில் பேசியவர், உன் போன் என்னிடம் தான் உள்ளது. ரூ.10 ஆயிரம் உடன் வா என்று நிபந்தனை விதித்து உள்ளார்.
தொடர்ந்து ரவிபிரகாஷ் பூ மார்கெட்டுக்கு சென்றார். அங்கு 3 திருநங்கைகள் இருந்தனர். அவர்கள் ரூ.10 ஆயிரம் கேட்டனர். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என ரவிபிரகாஷ் கூறினார்.
அப்போது ரூ.3000 கொடுத்து விட்டு போனை வாங்கி செல் என்று மிரட்டினார்கள். ரவிபிரகாஷ் ரூ.1500 தருவதாக கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை.
எனவே அவர் 3 பேரையும் போட்டோ எடுக்க முயன்றார். அப்போது அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை ரோட்டில் வீசியெறிந்து கல்வீசி தாக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ரவிபிரகாஷ் செல்போனை திருடி ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. தொடர்ந்து 3 திருநங்கைளையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஓடும் பஸ்சில் மர்மநபர்கள் கைவரிசை
- திருமணத்தின் போது அணிவதற்காக ஒரு பர்சில் வைத்திருந்த நகைகளை பறித்து சென்றனர்
கோவை,
கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி சகன் பீவி (54).
இவர் மேட்டுப்பாளையம் அடுத்த ஓடந்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.
இதற்காக இவர் கரும்புக்கடையில் இருந்து பஸ்சில் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ரெயில் மூலம் மேட்டு ப்பாளையம் சென்றார்.
திருமணத்தின் போது அணிந்து கொள்வதற்காக ஒரு பர்சில் 21 பவுன் தங்க நகைகளை எடுத்து, தனது பேக்கில் வைத்து எடுத்து சென்றிருந்தார்.
வீட்டிற்கு சென்றதும் பையை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைத்திருந்த நகை பர்சுடன் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர், உடனடியாக வீட்டிற்கு வந்தும் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவர் உக்கடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இவர் பஸ்சில் பயணித்த போது, யாரோ மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அந்த கோணத்தில் விசா ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி, யாராவது சந்தேகத்திற்கிடமாக இவரது பெட்டியில் பயணித்துள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யானைகள் தடுப்பு அகழி பகுதியில் பிணமாக மீட்பு
- காட்டெருமையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனச்சரகம் ஓடந்துறை காப்புக்காடு ஜக்கனரி டெப்போ பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. உடனடியாக வனத்துறையினர் துர்நாற்றம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள யானை தடுப்பு அகழி பகுதியில் ஆண் காட்டெருமை இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். தொடர்ந்து கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் பிரபு ஆகியோர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் சிறுத்தை தாக்கியதில் காட்டெருமை இறந்தது தெரியவந்தது.
- அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை
- வாலிபரை கொலை செய்து வீசினரா அல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் விசாரணை
கோவை,
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள பொள்ளாச்சி- கோவை மெயின் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தினர். பின்னர் அடையாளம் தெரியாத வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா அல்லது நடந்து செல்லும் போது இயற்கை மரணம் ஏற்பட்டு இறந்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாளுக்குள் நாள் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
- வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட பொதுமக்கள் கோரிக்கை
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளையொட்டி வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், காட்டெருமை, சிறுத்தை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து வருகிறது.
அண்மைக்காலங்களாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக காட்டு யானைகள், காட்டெருமை போன்றவை அடிக்கடி ஊருக்குள் வந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்து வருகின்றன. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் எஸ்டேட் பஜார் பகுதியில் பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது வனத்தை விட்டு வெளியேறிய காட்டெருைம ஒன்று நகர பகுதிக்குள் புகுந்தது. முடிஸ் பஜார் பகுதியில் சிறிது நேரம் அந்த காட்டெருமை சுற்றி திரிந்தது. காட்டெருமை வருவதை பார்த்ததும் பொதுமக்கள் வீடுகளுக்குள் சென்று விட்டனர். சிலர் அங்கிருந்த கடைகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து கொண்டனர்.
சில மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டெருமை பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பிறகே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில காலங்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே ஊருக்குள் புகுந்து சுற்றி திரிந்து வருகிறது.
நாளுக்குள் நாள் வனவிலங்கு நடமாட்டம் அதிகரிப்பதால், வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பீளமேடு போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க சமூகஆர்வலர்கள் வலியுறுத்தல்
- நீலாம்பூர் பகுதியை மையப்படுத்தி புதிய போலீஸ் நிலையம் தொடங்க அரசுக்கு கருத்துரு
கோவை,
கோவை மாநகரில் 20 சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 20 விசாரணை பிரிவு போலீஸ்நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதுதவிர போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், மகளிர் போலீஸ் நிலையங்கள், சைபர் கிரைம் உள்ளிட்ட 10-க்கும் மேற் பட்ட சிறப்பு பிரிவுகளும் இயங்கி வருகின்றன.
இதில் பீளமேடு போலீஸ் நிலையம் அதிக எல்லை பரப்பை கொண்டுள்ளதால் ஹெவி காவல்நிலையமாக கருதப்படுகிறது. பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மத்திய, மாநில அலுவலகங்கள், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் உள்ளன.
சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் எல்லை பரப்பளவு அதிகமாக இருப்பதால் சுழற்சிமுறையில் போலீசார் ரோந்து சென்றாலும், அதிக முறை செல்ல முடிவதில்லை. சமீபத்தில் சேரன் மாநகர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து பீளமேடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் அல்லது பீளமேடு போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநகரில் சமீபத்தில் 3 புதிய போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. புறநகரில் இருந்து 2 போலீஸ்நிலையங்கள் இணைக்கப்பட்டன. அதேபோல பீளமேடு போலீஸ் நிலையத்தை பிரித்து, காளப்பட்டி பகுதியில் புதிய போலீஸ் நிலையம் ஏற்படுத்த அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
அதுதொடர்பாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
மாவட்ட போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் கருமத்தம்பட்டி உட்கோட்டத்தின் கீழ் இயங்கும் வகையில் சூலூர் போலீஸ் நிலைய எல்லையை பிரித்து நீலாம்பூர் பகுதியைமையப்படுத்தி புதிய போலீஸ் நிலையம் தொடங்க அரசு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிண்டு பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
- யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க ஏற்பாடு
- தண்டவாளத்தின் கீழ்பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. ரெயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க தண்டவாளத்தின் ஓரத்தில் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு கம்பிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை புறநகர் பகுதியான மதுக்கரை கேரளா -தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வனப்பகுதி. இந்த வனப்பகுதி வழியாக கேரளா- தமிழகத்தை இணைக்கும் ரெயில் தண்டவாளம் செல்கிறது.
மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் ரெயில்வே தண்டவாளங்கள் உயரமாக இருப்பதால் வனப்பகுதியில் இருந்து வரும் யானைகள் தண்டவாளங்கள் மீது ஏறி கடந்து செல்கிறது. ரெயில் வரும் நேரங்களில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
யானைகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மதுக்கரை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் யானைகள் எளிதாக கடக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. இதன் வழியாக யானைகள் எளிதாக கடந்து செல்கின்றன.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் மற்றொரு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மதுக்கரையில் இருந்து எட்டிமடை வரை காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களை நாசம் செய்து வருகின்றது. இதற்கு யானைகள் தண்டவாளத்தை கடந்து வர வேண்டியது உள்ளது. எனவே யானைகள் தண்டவாளத்தை கடந்து வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இது குறித்து வன அதிகாரிகள் கூறியதாவது:-
மதுக்கரை அருகே உள்ள குடோன் பகுதியில் இருந்து எட்டிமடை வரை 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தை ஒட்டி பழைய தண்டவாள இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்து வருகிறது.
ஏற்கனவே மதுக்கரை பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது.
எனவே புதிதாக மேலும் தடுப்புகள் அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என அறிக்கை அரசுக்கு சமர்ப்பித்து உள்ளோம். தமிழக அரசின் உத்தரவு வந்த உடன் நிதி ஒதுக்கப்பட்டதும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போலீசார், அ.தி.மு.க. பிரமுகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
- வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண்குமார்.
இவர் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து, பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான ஷானவாஸ் என்பவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், அ.தி.மு.க. பிரமுகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டது அறிந்ததும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமான அ.தி.மு.கவினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் அ.தி.முக.வினர், அருண்குமாரை விடுவிக்கும் வரை போலீஸ் நிலையத்தை விட்டு செல்லமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அ.தி.மு.கவினர் கலைந்து சென்றனர். இதையடுத்து, அ.தி.மு.க. பிரமுகர் அருண்குமாரை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அருண்குமாரை போலீசார் பொள்ளாச்சி சப்-ஜெயிலில் அடைத்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
கைது செய்யப்பட்ட அருண்குமார் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப செயலாளராக உள்ளார்.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை மறுபதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் மீது வழக்குப்பதியாமல், அருண்குமார் மீது பொய் வழக்கு போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது.
- 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதி உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர்.
இன்று காலை 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 2 கரடிகள் வெளியே வந்தது. அந்த கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது.
அப்போது தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் சுமதி (வயது 25), ஹித்தினி குமாரி (26 ) ஆகியோரை கரடிகள் திடீரென தாக்கியது.
இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அவர்கள் பெண்களை தாக்கிய கரடிகளை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர்.
கரடி தாக்கியதில் 2 பெண்களுக்கும் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
கரடி தாக்கியதில் அவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து டாக்டர்கள் 2 பெண்களையும் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . அங்கு 2 பெண்களுக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் மானாம்பள்ளி வனசரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் 2 பெண்களுக்கும் ரூ. 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்.
- நகல் எடுக்க மட்டும் ரூ.14 லட்சம் செலவு
கோவை.
சேலத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வின்ஸ்டார் இந்தியா மற்றும் சவுபாக்கியா புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம் குறைந்த முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறினார். மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
இதை நம்பி கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய உறுப்பினர்கள், புரோக்கர்கள் என 28 பேர் பணம் கட்டிய பொதுமக்களுக்கு தவணை முடிந்தும் எவ்விதமான பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்களில் 1686 பேர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ.175 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் குற்றப்பத்திரிகை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 29 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை நகல்கள் தயார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் இன்று கோவையில் உள்ள கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கப்பட்டது.
2 நபர்கள் வராததால் இன்று மாலை 5.30 மணிக்குள் இரண்டு நபர்களும் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து குற்ற நகல்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
29 பேருக்கு வழங்க க்கூடிய குற்றப்ப த்திரிக்கை நகல்களுக்கு ஜெராக்ஸ் எடுக்க அரசு 14 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்ப ட்டு ள்ளது. ஒரு குற்ற வழக்கிற்காக அரசு அதிகபட்ச தொகையான 14 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது இதுவே முதல்முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.






