என் மலர்tooltip icon

    சென்னை

    • தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.
    • பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர்.

    நாட்டின் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 15) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.

    வழக்கப்படி அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த விருந்தை காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி கடைசி நேரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலினும் விருந்தை புறக்கணித்தார்.

    இந்நிலையில் இன்று மாலை தொடங்கிய தீநீர் விருந்தில் பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பங்கேற்றனர்.

    பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் எம்.பி இன்பதுரை பங்கேற்றுள்ளார்.

    அன்புமணி ஆதரவு பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஷ், சதாசிவம் ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்றுள்ளனர்.

    மேலும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோருக்கும் பங்கேற்றனர். 

    • உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும்!
    • மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும்!

    மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு என்ற உறுதியுடன் - முத்தமிழறிஞர் கலைஞர் பெற்று தந்த உரிமையுடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணங்கினேன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் பேரணி சென்றனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உணவு பரிமாறினார்.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே, தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு, பணியின்போது மரணமடைந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது

    இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர். பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.

    இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

    தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்:

    * தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

    * தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

    * தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

    * தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

    * தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

    * பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

    * தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்

    • சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
    • அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

     

    பெசன்ட் நகர் எலைட் பீச்சில் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கண் மருத்துவமனை (Chennai Eye Care Hospital) மருத்துவ இயக்குநர் டாக்டர் மனோகர் பாபு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

    அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    • உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.
    • தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.

    சென்னை:

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    டெல்லியில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் சாதனைகளையும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இந்தியாவை உலகின் மிகப்பெரிய 4-வது பொருளாதார நாடாக அவர் மாற்றி காட்டி இருக்கிறார்.

    பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே நாம் அனைவரும் தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும்.

    தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் வரை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் நிரூபித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும் மத்திய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் மாபெரும் இயக்கமாக முன்னெடுப்பதற்கான முதல்கட்டமாக வாக்குத்திருடரே பதவி விலகு என்னும் பிரசார இயக்கத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு முழுவதும் முன்னெடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது

    இதனைத் தொடர்ந்து இந்த பிரசாரத்தில் முதல்கட்டமாக நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் வரை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது

     

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில அமைப்புச் செயலாளர் ராம்மோகன் மாநில பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ்,

    அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிந்துஜா, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் தினேஷ், கிருத்திகா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுமதி அன்பரசன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசினா சையத், மாவட்ட தலைவர்கள் முத்தழகன் டெல்லி பாபு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் ஊர்வலமாக சென்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • நேற்று விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.74,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6-ந் தேதி ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியது. கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதிக்கு பிறகு விலை சரிவடைந்து வந்த நிலையில் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை குறைந்தபாடில்லை. மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணித்தது. இதனால் கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

    இதனைத் தொடர்ந்து விலை சற்று குறையத் தொடங்கியது. வார தொடக்க நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.75,000-க்கும், செவ்வாய் கிழமை ரூ.640 குறைந்து 74,360-க்கும், புதன்கிழமை ரூ.40 குறைந்து ரூ.74,320-க்கும், நேற்று விலையில் மாற்றம் இல்லாமல் சவரன் ரூ.74,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.74 ஆயிரத்து 240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை 127 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    13-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    12-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

    11-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,000

    10-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-08-2025- ஒரு கிராம் ரூ.127

    13-08-2025- ஒரு கிராம் ரூ.126

    12-08-2025- ஒரு கிராம் ரூ.126

    11-08-2025- ஒரு கிராம் ரூ.127

    10-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்திய பின்னர் உரையாற்றிய அவர் 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    இதையடுத்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

    தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு வழங்கினார். தகைசால் தமிழர் விருது பெற்ற காதர் மொகிதீனுக்கு ரூ.10 லட்சம், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

    தமிழ்நாடு அரசின் சார்பில் இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருதை முதலமைச்சர் வழங்கினார்.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் இறகுப் பந்தாட்ட வீராங்கனையான துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

    டி.எஸ்.பி. பிரசன்னகுமார், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் யமுனாவுக்கு நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

    காகர்லா உஷா, கணேசன், லட்சுமி பிரியா, ஆனந்த், அண்ணாதுரைக்கு நல்லாளுமை விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    • 2-ம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.
    • ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் 1 மையம், மண்டல அளவில் 2 மையம், மாவட்டத்திற்கு 1 பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    * விடுதலை போராட்ட தியாகிளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    * விடுதலை போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    * 2-ம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதியுதவி ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

    * தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்காக மாதவத்தில் ரூ.22 கோடியில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

    * 2-ம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படும்.

    * தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு செய்யப்படும்.

    * ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் 1 மையம், மண்டல அளவில் 2 மையம், மாவட்டத்திற்கு 1 பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.

    * கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்லூரியில் பயிலும்போது திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற புதிய திட்டம் அறிவிப்பு

    * கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகள் 10,000 பேருக்கு ரூ.15 கோடியில் இணைய வழியில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
    • காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

    அதன்பின்பு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருதை வழங்கினார்.

    காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.

    • சுதந்திர போராட்டத்தில் தமிழகர்கள் பங்கு அளப்பரியது.
    • விடுதலை போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

    இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * விடுதலை காற்றை சுவாசிக்க காரணமான தியாகிகளை போற்றுவோம்.

    * சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.

    * 5-வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

    * 5-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைக்க வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    * அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் கனவு கண்டனர்.

    * சுதந்திர போராட்டத்தில் தமிழகர்கள் பங்கு அளப்பரியது.

    * அனைத்து தேசிய இன மக்களும் போராடி பெற்றதே இந்த சுதந்திரம்.

    * தமிழ்நாட்டில் தியாகிகளுக்கு மணி மண்டபங்கள் அமைத்தது தி.மு.க. ஆட்சி.

    * விடுதலை போராட்ட தியாகிளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    * விடுதலை போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    * 2-ம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதியுதவி ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு வழங்கப்படும்
    • தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்புத் திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.

    பேரணி முடிவில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு, மாநகர மேயர் பிரியா ஆகியோர் உணவு பரிமாறினர்.

    தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள்:

    * தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு

    * தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை

    * தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி

    * தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு

    * தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்

    * பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி

    * தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்

    ×