

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
பெசன்ட் நகர் எலைட் பீச்சில் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கண் மருத்துவமனை (Chennai Eye Care Hospital) மருத்துவ இயக்குநர் டாக்டர் மனோகர் பாபு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.