என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டன ஊர்வலம்"

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் வரை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது
    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் பங்கேற்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் நிரூபித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும் மத்திய பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் மாபெரும் இயக்கமாக முன்னெடுப்பதற்கான முதல்கட்டமாக வாக்குத்திருடரே பதவி விலகு என்னும் பிரசார இயக்கத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாடு முழுவதும் முன்னெடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்துள்ளது

    இதனைத் தொடர்ந்து இந்த பிரசாரத்தில் முதல்கட்டமாக நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்யமூர்த்தி பவன் வரை மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடைபெற்றது

     

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடைபெற்ற இந்த கண்டன ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கிராம கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பீட்டர் அல்போன்ஸ், பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், ராபர்ட் ப்ரூஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில அமைப்புச் செயலாளர் ராம்மோகன் மாநில பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், தளபதி பாஸ்கர், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ்,

    அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சிந்துஜா, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர்கள் தினேஷ், கிருத்திகா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுமதி அன்பரசன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசினா சையத், மாவட்ட தலைவர்கள் முத்தழகன் டெல்லி பாபு உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியும் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை கைகளில் ஏந்தியும் ஊர்வலமாக சென்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    சிவகங்கையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும். கூடுதல் பணிக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ப் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட அளவில் கண்டன ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநிலப் பொதுச்செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் முக்கிய விதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு தங்களின் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் வழங்கினர்.
    ×