search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "village administrative officers"

    • சப்- கலெக்டர் உத்தரவு
    • உடனடியாக புதிய பணியிடத்தில் சென்று சேர வேண்டும்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி பீஞ்சமந்தையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த குணராஜ் அணைக்கட்டுக்கும், நந்திவர்மன் கீழ்கிருஷ்ணா புரத்தில் இருந்து வெட்டுவா னத்திற்கும், முனிரத்தினம் பொய்கையில் இருந்து பள்ளிகொண்டாவுக்கும், தமிழ்அரசு பூதூரில் இருந்து கீழாச்சூருக்கும், அபிலாஸ் சின்னபள்ளிக்குப்பத்தில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் பீஞ்சமந்தைக்கு கூடுதல் பொறுப்பு, கார்த்தி கீழாச்சூரிலிருந்து செதுவாலைக்கும், சிவமூர்த்தி ஒடுக்கத்தூரிலிருந்து கருங்காலிக்கும், தமிழழகன் அணைக்கட்டில் இருந்து திப்பசமுத்திரத்திற்கும், ஞானசுந்தரி பள்ளி கொண்டாவில் இருந்து பொய்கைக்கும், தங்கமுத்து வெட்டு வாணத்தில் இருந்து பூதூருக்கும், கிருஷ்ணவேணி கருங்காலியிலிருந்து கீழ்கிருஷ்ணாபுரத்திற்கும், குமரேசன் மேல்அர சம்பட்டில் இருந்து சின்ன பள்ளிக்குப்பத்திற்கும், அன்பு செதுவாலை யிலிருந்து மேல்அரசம்பட்டுக்கும் பணியிடமாற்றம் செய்து வேலூர் சப்-கலெக்டர் கவிதா உத்தரவிட்டு உள்ளார்.

    மேலும் பணியிட மாற்றம் செய்யப்ப ட்டவர்கள் உடனடியாக புதிய பணியி டத்தில் சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். இதில் வட்ட பொருளாளர் பர்க்கத்துன்னிஷா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, தீபா, ஜெயலட்சுமி, சண்முகபிரியா, பாரதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மேலூர் தாலுகா அலுவலக முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

     மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைபடுத்தவும், கருணைப் பணி நியமனங்களை கருணையோடு காலதாமதமின்றி வரன்முறை செய்யவும், தகுதிகாண் பருவத்திற்கான விதிமுறைகளை தளர்வு செய்யவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளை 3 ஆண்டுகளாக குறைத்திடவும், மக்கள் தொகை பரப்பளவு அடிப்படையில் கிராமங்களை பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், பயணப் படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரியும், நகர நிலவரி திட்ட கணக்குகளை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அளித்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோ ணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த விஏஓகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    நெமிலி வட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். அரக் கோணம் வட்ட தலைவர் ராஜேஷ் பழைய திட்டத்தை வரவேற்றார். பென்ஷன் மீண்டும் கொண்டு வரவேண்டும்.

    ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும். மேலும் பட்டம் முடித்த விஏஓ க்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    இதில் விஏஓகள் கொய்யாமணி, லட்சுமணன், டோமேசன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விஏஓ க்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன.
    • கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாமக்கல்:

    ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். 

    வட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். வட்டத்தலைவர் செந்தில்கண்ணன், மகளிர் அணி செயலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பழிவாங்கும் எண்ணத்துடன் குறிப்பாணை வழங்கியதாக கூறி தாசில்தாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். முடிவில் பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.

    இதேபோல சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகத்தில் அரிய வகை மரங்களை வெட்டியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ’ வெட்டாதே, வெட்டாதே தாலுகா அலுவலத்தில் இருக்கும் பச்சை மரங்களை வெட்டாதே’, ‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் நாமக்கல் தாசில்தாரை கண்டிக்கிறோம்’, ‘நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு’, ‘ரத்துசெய் ரத்துசெய் தவறாக வழங்கிய குறிப்பாணையை ரத்துசெய்’ என கோஷம் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    முசிறி அருகே மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக முசிறி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

    இதைத் தொடர்ந்து முசிறி வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் வெள்ளூர் கிராம நிர்வாக அதிகாரி தேவராஜ், முசிறி கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகன் மற்றும் பலர் முசிறி வெள்ளாற்றில் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது மொபட்டில் 5  பேர் மணலை மூட்டையில் கடத்தி சென்றனர். உடனே கிராம நிர்வாக அதிகாரிகள் தேவராஜ் மற்றும் வள்ளிநாயகன் ஆகிய 2 பேரும் மடக்கி பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரும் சரமாரியாக கிராம அதிகாரிகளை தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர். 

    இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரிகள் முசிறி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்கிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

    இந்நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்கியது வெள்ளுர் பகுதியை சேர்ந்த சரவணன்(34),அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார்(19), மற்றும் 3 பேர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  முசிறி போலீசார் சரவணன், வசந்தகுமார் ஆகிய 2 பேரை  கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள். 
    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
    நாமக்கல்:

    நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

    கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயணப்படியை அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அம்மா திட்ட செலவின நிலுவைத்தொகை மற்றும் இணையதள செலவின நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மடிக் கணினி வழங்க வேண்டும். பொங்கல் வேட்டி-சேலைகளை ரேஷன்கடைகள் மூலமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பழனியப்பன், நடராஜன், சிவஞானம் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

    முன்னாள் வட்ட தலைவர்கள் சுப்பிரமணியம், தர்மலிங்கம் ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

    இதேபோல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சாரம், கழிப்பறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது.

    இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி, பொருளாளர் சதீஷ்கமல், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்பட திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    கோவையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 65 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கோவை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் ஆன்லைன் பணியை புறக்கணித்தனர். பின்னர் கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 12 -வது நாளாக போராட்டம் நடைபெற்றது.

    இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் பிரஸ் நேவ், செயலாளர் சரவணன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விளக்கி பேசினார். முற்றுகையில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர். 65 பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews
    சிவகங்கையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர், தமிழகம் முழுவதும் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அனைத்து வருவாய் கிராமங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தர வேண்டும். கூடுதல் பணிக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ப் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதையொட்டி ஏற்கனவே ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து மாவட்ட அளவில் கண்டன ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தொடங்கிய ஊர்வலத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் முத்துவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநிலப் பொதுச்செயலாளர் செல்வன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நகர, வட்டார நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் முக்கிய விதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு தங்களின் கோரிக்கை மனுவை கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் கலெக்டர் ஜெயகாந்தனிடம் வழங்கினர்.
    கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 6-ந் தேதி காத்திருப்பு பேராட்டம், 7-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தொடர்ந்து 10, 11, 12-ந் தேதிகளில் மக்களை தேடி உரிமை போராட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் எதிரில் உரிமை தேடி நடந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் செந்தில்குமார் பேசினார். வட்ட செயலாளர் முத்துராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் மாவட்ட துணை தலைவர் அறிவழகன் நன்றி கூறினார். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்ட மாறுதலை ஒரே சமயத்தில் தமிழகம் முழுவதும் நடத்திட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களில் 50 சதவீதம் பெண்கள் இருப்பதால், அவர்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வாடகை கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்திற்கு வாடகை வழங்க வேண்டும். கணினி சான்றுகள் வழங்க இதுவரை செய்த செலவினத்தொகையை உடனே வழங்கிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். புதிய கிராம நிர்வாகத்துறையை அரசு உருவாக்கித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். 
    ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான கல்வித்தகுதியை உயர்த்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவது, ஆன்லைன் பணிகளுக்கு ஊதியம் வழங்குவது, மாவட்டத்திற்குள் மட்டும் பணி மாறுதல் கொடுக்க வேண்டும் உள்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ந்தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் ஆன்லைன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம், இருப்பிடம், சாதி, விதவை உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் ஸ்தம்பித்துவிட்டது.

    இந்த போராட்டத்தால் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி. கமுதி, திருவாடானை உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போராட்டம் குறித்து வி.ஏ.ஓ. சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜெகராயன் கூறியதாவது:-

    எங்கள் நியாயமான 21 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். நேற்று பரமக்குடியில் எங்களின் வேலை நிறுத்தம் குறித்து மக்களை தேடி பிரசாரம் நடந்தது. இன்று பார்த்திபனூரில் மக்களை தேடி பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். என்றார். #tamilnews
    ×