13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

சப்- கலெக்டர் உத்தரவு உடனடியாக புதிய பணியிடத்தில் சென்று சேர வேண்டும்
13 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்
Published on

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி பீஞ்சமந்தையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த குணராஜ் அணைக்கட்டுக்கும், நந்திவர்மன் கீழ்கிருஷ்ணா புரத்தில் இருந்து வெட்டுவா னத்திற்கும், முனிரத்தினம் பொய்கையில் இருந்து பள்ளிகொண்டாவுக்கும், தமிழ்அரசு பூதூரில் இருந்து கீழாச்சூருக்கும், அபிலாஸ் சின்னபள்ளிக்குப்பத்தில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் பீஞ்சமந்தைக்கு கூடுதல் பொறுப்பு, கார்த்தி கீழாச்சூரிலிருந்து செதுவாலைக்கும், சிவமூர்த்தி ஒடுக்கத்தூரிலிருந்து கருங்காலிக்கும், தமிழழகன் அணைக்கட்டில் இருந்து திப்பசமுத்திரத்திற்கும், ஞானசுந்தரி பள்ளி கொண்டாவில் இருந்து பொய்கைக்கும், தங்கமுத்து வெட்டு வாணத்தில் இருந்து பூதூருக்கும், கிருஷ்ணவேணி கருங்காலியிலிருந்து கீழ்கிருஷ்ணாபுரத்திற்கும், குமரேசன் மேல்அர சம்பட்டில் இருந்து சின்ன பள்ளிக்குப்பத்திற்கும், அன்பு செதுவாலை யிலிருந்து மேல்அரசம்பட்டுக்கும் பணியிடமாற்றம் செய்து வேலூர் சப்-கலெக்டர் கவிதா உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் பணியிட மாற்றம் செய்யப்ப ட்டவர்கள் உடனடியாக புதிய பணியி டத்தில் சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com