என் மலர்
அரியலூர்
- அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.
- இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.
அரியலூர்
அரியலூர் அடுத்த சிறு வளூர் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாசற்ற தீபாவளி விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல் வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு பேர ணியை கொடியசைத்து தொடக்கி வைத்து பேசினார்.
இந்த பேரணியானது கிராமத்தின் அனைத்து தெரு வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறை வடைந்தது.
பேரணியின் கலந்து கொண்ட மாணவ, மாணவி கள் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும் என்று முழக்கமிட்டனர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
பேரணியில் சுப்பராய புரம் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, செந் தில் குமரன், செவ்வேள்.தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண் ணகி, சரண்யா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
- இந்த கடை பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
- கொரனா நோய்த்தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.
திருமானூர்
திருமானூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பார்கவி மெடிக்கல். இந்த கடை பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
மழை, புயல் எந்த காலத்திலும், மக்களுக்கு சேவை அளிப்பதில் இந்த மருந்து கடை முதலிடம் வகிக்கிறது.
எந்த நேரமாக இருந்தா லும் இந்த கடைக்கு சென்றால் நமக்கு தேவையான மருந்துகளை வாங்கலாம் என்று பொதுமக்கள் நம்பி வருவது பார்கவி மெடிக்கலைதான்.
திருமானூர் ஒன்றியத்தில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அடித்தட்டு மக்களில் இருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ சேவை செய்து வருபவர் பார்க்கவி மெடிக்கல் நிறுவனத்தார்.
கொரனா நோய்த்தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.
வேளான் மக்கள் அதிகமாக வாழ்கின்ற திருமானூர் பகுதியில் நோய்த்தொற்று காலங்களில் சவாலான நாட்களை சந்தித்த பொதுமக்களுக்கு இரவு பகல் பாராமல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்தனர்.
நல்ல சமூக சிந்தனை தொலைநோக்கு பார்வை இவற்றை தன்னகத்தே கொண்டு சேவையாற்றி வரும் பார்கவி மெடிக்கல் நிறுவனத்தாரை திருமானூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும் பார்க்கவே மெடிக்கல் கால்நடைகளுக்கு மருந்துகள் விற்பனை செய்து வருகிறது.
- அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.
- பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அரியலூர்
அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் நகர்மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் சாந்தி கலைவா ணன் தலைமையில் நடை பெற்றது.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு), நகராட்சி பொறியாளர்விஜய்கார்த்திக், நகர்மன்ற துணைதலைவர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேசுமேரி, செல்வராணி, சத்தியன்,கண்ணன்,ரேவதி, மகாலெட்சுமி, இன்பவள்ளி,முகமது இஸ்மாயில், மலர்கொடி,வெங்கடாஜலபதி,ஜெயந்தி,ராணி,ராஜேஸ்,தீபா, புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் தர்மராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன்,நகராட்சி மேற்பார்வையாளர் காசிநாதன், இளநிலை உதவியாளர் நல்லதம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட இடங்களில் சரிவர குப்பைகள் அள்ளுவதில்லை. சாக்கடை நீர் தேங்கி நிற்கின்றது. கொள்ளிடம் கூட்டுகுடி நீர் சரிவர விநியோகிப்பதில்லை. பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இடையூராக சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு ஆணையர் விஜய கார்த்திக் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி பகுதியில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க உடனடியாக நட டிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
- வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
- விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய ஆமணக்கதோண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் வீரப்பெருமாள்(வயது 75). இவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார்.
சாலையை கடக்க முயன்ற போது எதிரே ஜெயங்கொண்டம் அடுத்த கல்லேரி கிராமம் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் (35) என்பவர் இவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டாசைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க நின்று கொண்டிருந்த வீரபெருமாள் மீது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் வசந்த் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார், அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் வீரபெருமாள், வசந்த் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அடுத்த மீரா மகளிர் கலைக் கல்லூரியில் , மாவட்ட சுகாதாரத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான மேடை நாடகப் போட்டி நடைபெற்றது.
இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டிக்கு கல்லூரி செயலர் எம்.ஆர்.கமல்பாபு தலைமை வகித்தார். மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, கல்லூரி முதல்வர் விஜி தொடக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் மேடை நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டது. பிற்பகலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட சுகாதாரப்
பணிகள் இயக்குநர் அஜிதா கலந்து கொண்டு பேசினார்.
அதன்பின்னர், போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணி விவரங்களை அறிவித்தார். அதில் மேடை நாடகப் போட்டியில் மீரா மகளிர் கல்லூரி முதல் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருள்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான இனிப்பு, பலகார பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளையோ, உபயோகிக்ககூடாது, ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது.
பண்டிகை காலத்தில் மட்டும் இனிப்பு பலகாரம் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்ய வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள்களுக்கு விபர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருள்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி சிறந்த பயன்பாட்டு காலம், காலாவதியாகும் காலம் சைவ மற்றும் அசைவ குறியீடு போன்றவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
மேலும் உணவு தயாரிப்பாளர்கள், உணவு பாதுகாப்பு பயிற்சிகளை பெற்றிருக்க வேண்டும். பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருள்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் .
எனவே, நுகர்வோர் உணவு பொருள்களை வாங்கும் போது அவற்றில் தயாரிப்பு தேதி, தயாரிப்பாளர் விபரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் உணவு பொருள்களின் தரம் தொடர்பான புகார்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 எண்ணிற்கு வாட்சாப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- ஜெயங்கொண்டம் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில்ரூ.1.50 லட்சம் செலவில் பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு
- ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் வழங்கினார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மீன்சுருட்டி அருகே உள்ள முத்துச்சேர்வார்மடம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்ற தலைவராக பாரதி ரமேஷ் உள்ளார். இவர் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், பம்பு ஆப்ரேட்டர்கள், புது வாழ்வு திட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு தனது சொந்த செலவில் புத்தாடை, இனிப்பு வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு ரெட்டிப்பாளையம், முக்குளம், நல்லிதோப்பு முத்துச்சேர்வார்மடம், சம்போடை, சுண்டிபள்ளம், கங்கவடங்கநல்லூர் உள்ளிட்ட 9 வார்டுகளில் பணிபுரிந்து வரும் 50 பணியாளர்களுக்கு அவர் தனது சொந்த செலவில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ரமேஷ் தனது சொந்த செலவில் 4வது ஆண்டாக புத்தாடை, இனிப்புகள், நலத்திட்ட உதவிகள் செய்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது சொந்த முயற்சியினால், வீடு வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் முத்துச்சேர்வார்மடம் ஊராட்சியில் வாழ்ந்து வரும் 3 பழங்குடி இனத்தவர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அவர் வழங்கினார்.
இந்த விழாவில் துணைத் தலைவர் அறிவழகன் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
- டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர்.
செந்துறை:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தன்வீர்(வயது 35). இவர் தற்போது அரியலூர் ஜெஜெ நகரில் வசித்து வருகிறார்.
இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து, அவர் அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு லாப தொகை எதுவும் வழங்கப்படவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது தன்வீர் இது குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்ம கும்பல் இணையம் வழியாக இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளது. இதை தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 56 யை போலீசார் முடக்கம் செய்தனர். வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
மாலிக் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3 ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் அதிகளவில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.
இதற்காக டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். இதற்காக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிலரை வேலைக்கு சேர்த்தனர்.
அவர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கினர். மேலும் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 15 சிம்கார்டுகள்,8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு காசோலை புத்தகம், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள மும்பையை சேர்ந்து க்ளோன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஜெயங்கொண்டம் கடை வீதியில்பட்டாசு கடை வைக்க தடை விதிக்க வேண்டும்
- சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை
ஜெயங்கொ ண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் திருமானூர் அருகே சென்ற வாரம் நடைபெற்ற மிகப்பெரிய வெடி விபத்து 13 நபர்களை பலி வாங்கியது. அதிலிருந்து இன்னும் பட்டாசு மீது உள்ள அச்சம் போகாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடைவீ திகளில் அதிக கூட்டம் வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பட்டாசு கடையை பொதுமக்கள் நடமாட்டமில்லாத இடமாக மாற்றி வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க நேரிடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் அரியலூர் கடைவீதிகளில் பட்டாசு கடை வைப்பதற்கு தடை விதி த்துள்ளது குறிப்பிடத்தக்கது அதேபோல் ஜெயங்கொண்டதையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
- அரியலூரில்வெளிமாநிலத்தை சேர்ந்தவரிடம் 12 லட்சம் மோசடி
- மோசடி நிறுவனத்தின் ரூ.78 லட்சம் முடக்கம்
செந்துறை,
அரியலூர் மாவட்டம், ஜெஜெ நகரில் வசிப்பவர் முகமது தன்வீர் (வயது 35). இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது வாட்ஸ் அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை பார்த்து, அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்ட போது, அந்த நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூபாய் 12,47,000/-பணத்தை செலுத்தி ஏமாந்து விட்டார் . இத குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இணைய வழி கொள்ளை யர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78,54,056/-முடக்கம் செய்தனர் . வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் வாணி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அதில் போதிய லாபம் கிடைக்கா ததால், ஆன்லைனில் டெலிகிராம் மூலம் அறிமுக மான மகாராஷ்டிராவை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சில நபர்களை வேலைக்கு சேர்த்ததாகவும், அந்த நபர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை துவங்கி மோசடி பண பரிவர்த்தனை களுக்கு பயன்படுத்தியதாக தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாலிக் இடமிருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்-04, சிம்கார்டுகள்-15, ஏடிஎம் கார்டுகள்-08, காசோலை புத்தகம் - 01, இருசக்கர வாகனம்-01 மற்றும் ரொக்கம் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது தலைமையாக செயல்பட்டுள்ள மும்பை குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்.
- அரியலூர் மணக்குடியில் கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்
- மணக்குடி ஊராட்சி மன்ற செயலர் தேசிங்கு நன்றி கூறினார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மணக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா தொடக்கி வைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் ரிச்சர்ட் ராஜ் முன்னிலை வகித்தார்.
முகாமில் பெரிய, சிறிய மணக்குடி மற்றும் நுரையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 445 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கமும், 350 பசு மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியும், 400 ஆட்டினங்களுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
உரிய நேரத்தில் பருவத்துக்கு வராத 19 கிடாரிகள், பலமுறை கருவூட்டல் செய்தும் சினையுறாத பசு மாடுகள் உள்ளிட்ட 61 மாடுகளுக்கு நுண்ணூட்ட சத்துக்கள் அடங்கிய தாது உப்பு கலவை பொட்டலங்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆடுகள் மற்றும் மடிவீக்க நோயால் பாதிக்கப்பட்ட 3 பசு மாடுகளில் இருந்து சாணம் மற்றும் பால் உள்ளிட்ட மாதிரி பொருள்கள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
முகாம் முடிவில் கன்று கள் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்து கொண்ட 22 கிடேரி கன்றுகளில் சிறந்த 10 கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் தலைமையில், ஓட்ட கோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், பொய்யாத நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் ராஜா, கால்நடை ஆய்வாளர் முருகானந்தம், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ராமலிங்கம், மாரிமுத்து, கலியமூர்த்தி, ஜெயக்குமாரி உள்ளிட்ட மருத்துவ குழுவி னர் முகாம் பணிகளை மேற்கொண்டனர். முடிவில், மணக்குடி ஊராட்சி மன்ற செயலர் தேசிங்கு நன்றி கூறினார்.
- சிதம்பரம் மக்களவை தொகுதிவாக்கு எண்ணும் மையம் அமைய உள்ள இடத்தில் அரியலூர் கலெக்டர் ஆய்வு
- தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி யில் அமைக்கப்படும்.
அரியலூர்,
சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலைக் கல்லூரி யில் அமைக்கப்படும்.
இங்கு சிதம்பரம் மக்கள வைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், ஜெயங் கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில்மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கவுள்ள பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணப்படவுள்ள மையங்கள், தேர்தல்மேற் பார்வையாளர்கள் அறைகள், ஊடக மையம் ஆகியவை அமையவுள்ள இடங்களையும், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள்ஏற்படுத்துவது குறித்தும் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பெரோஸ்கான் அப்துல்லா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உடையார்பா ளையம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், தேர்தல்பிரிவு வட்டாட்சியர் வேல்முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசி, அக்கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






