என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சைக்கிள், கார் மீது மோட்டர்சைக்கிள் மோதி விபத்து: 2 பேர் பலி
- வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.
- விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியை ஒட்டிய ஆமணக்கதோண்டி என்ற இடத்தை சேர்ந்தவர் வீரப்பெருமாள்(வயது 75). இவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு சைக்கிளில் சென்றார்.
சாலையை கடக்க முயன்ற போது எதிரே ஜெயங்கொண்டம் அடுத்த கல்லேரி கிராமம் கோவில் தெருவை சேர்ந்த வசந்த் (35) என்பவர் இவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டாசைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க நின்று கொண்டிருந்த வீரபெருமாள் மீது மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரபெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
வசந்த் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில் வசந்த் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார், அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் வீரபெருமாள், வசந்த் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்