பட்டாசு கடை வைக்க தடை விதிக்க வேண்டும்

ஜெயங்கொண்டம் கடை வீதியில்பட்டாசு கடை வைக்க தடை விதிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வியாபாரிகள் கோரிக்கை
பட்டாசு கடை வைக்க தடை விதிக்க வேண்டும்
Published on

ஜெயங்கொ ண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் திருமானூர் அருகே சென்ற வாரம் நடைபெற்ற மிகப்பெரிய வெடி விபத்து 13 நபர்களை பலி வாங்கியது. அதிலிருந்து இன்னும் பட்டாசு மீது உள்ள அச்சம் போகாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடைவீ திகளில் அதிக கூட்டம் வருவதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பட்டாசு கடையை பொதுமக்கள் நடமாட்டமில்லாத இடமாக மாற்றி வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்க நேரிடும் என வியாபாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் அரியலூர் கடைவீதிகளில் பட்டாசு கடை வைப்பதற்கு தடை விதி த்துள்ளது குறிப்பிடத்தக்கது அதேபோல் ஜெயங்கொண்டதையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com