search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 மணிநேர மக்கள் சேவையில் திருமானூர் பார்கவி மெடிக்கல் -  பாராட்டுகள் குவிகிறது
    X

    24 மணிநேர மக்கள் சேவையில் திருமானூர் பார்கவி மெடிக்கல் - பாராட்டுகள் குவிகிறது

    • இந்த கடை பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
    • கொரனா நோய்த்தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.

    திருமானூர்

    திருமானூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பார்கவி மெடிக்கல். இந்த கடை பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    மழை, புயல் எந்த காலத்திலும், மக்களுக்கு சேவை அளிப்பதில் இந்த மருந்து கடை முதலிடம் வகிக்கிறது.

    எந்த நேரமாக இருந்தா லும் இந்த கடைக்கு சென்றால் நமக்கு தேவையான மருந்துகளை வாங்கலாம் என்று பொதுமக்கள் நம்பி வருவது பார்கவி மெடிக்கலைதான்.

    திருமானூர் ஒன்றியத்தில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அடித்தட்டு மக்களில் இருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ சேவை செய்து வருபவர் பார்க்கவி மெடிக்கல் நிறுவனத்தார்.

    கொரனா நோய்த்தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.

    வேளான் மக்கள் அதிகமாக வாழ்கின்ற திருமானூர் பகுதியில் நோய்த்தொற்று காலங்களில் சவாலான நாட்களை சந்தித்த பொதுமக்களுக்கு இரவு பகல் பாராமல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்தனர்.

    நல்ல சமூக சிந்தனை தொலைநோக்கு பார்வை இவற்றை தன்னகத்தே கொண்டு சேவையாற்றி வரும் பார்கவி மெடிக்கல் நிறுவனத்தாரை திருமானூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    மேலும் பார்க்கவே மெடிக்கல் கால்நடைகளுக்கு மருந்துகள் விற்பனை செய்து வருகிறது.

    Next Story
    ×