என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றனர்.
    • ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது.

    உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ளது காகரோல் என்ற நகரம். இங்கு செயல்பட்டு வந்த பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த கொள்ளையர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பெயர்த்து அங்கிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

    "ஆக்ரா மாவட்டத்தின் காகரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியின் அருகிலேயே இந்த ஏ.டி.எம். மையம் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை 2.30 முதல் 3.00 மணிக்குள் நான்கில் இருந்து ஐந்து பேர் அடங்கிய குழு வேனில் சம்பவ இடத்திற்கு வந்தது. அந்த குழு ஏ.டி.எம். இயந்திரத்தை வேறோடு பெயர்த்தெடுத்து சென்றது."

     


    "இது தொடர்பாக வங்கி மேலாளருடன் நடத்திய விசாரணையில் பெயர்த்தெடுத்து செல்லப்பட்ட ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ. 30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. ஏ.டி.எம். இயந்திரத்தை எடுத்து சென்ற கும்பலை பிடிக்க ஆக்ரா காவல் துறையின் சிறப்பு படை முடுக்கிவிடப்பட்டு இருக்கிறது," என ஆக்ரா காவல் துறை ஆணையர் பிரீத்திந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

    வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணையை துவங்கியுள்ளது. மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    • ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம்.
    • அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம்.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, "ஜனவரி 23 முதல் நாடு முழுவதும் உள்ள பக்தர்களை வரவேற்க தயாராக இருப்பதாக" தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்ட கோவின் கும்பாபிஷேகத்திற்காக பரபரப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கோயிலில் ராமரின் பழைய மற்றும் புதிய சிலைகள் வைக்கப்படும்.

    குறிப்பாக, தேவையான அனைத்து சடங்குகளையும் பின்பற்றி, கோவிலில் பழைய மற்றும் புதிய இரண்டு சிலைகளையும் வைத்திருக்கிறோம். மற்ற அனைத்து சிலைகளும் ஜனவரி 21 ஆம் தேதிக்குள் இங்கு கொண்டு வரப்படும். 

    ஜனவரி 23 முதல் கோயிலுக்கு மக்கள் வரலாம். எந்த இடையூறும் இருக்காது. இங்கு நீங்கள் காணும் அனைத்து கட்டுப்பாடுகளும் அகற்றப்படும்.

    அனைத்து பக்தர்களும் சிறந்த அனுபவத்தைப் பெற விரும்புகிறோம் மற்றும் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது. இதற்காக, நாங்கள் பல மணிநேரம் ஆலோசித்து பணியாற்றுகிறோம்.

    மகா கும்பாபிஷேக விழாவை நாடு முழுவதும் நேரடியாக ஒளிபரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் முடிவடைந்து வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

    கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை வைக்கப்பட இருக்கிறது. மேலும் கோவிலில் பல சிலைகள் நிறுவப்பட இருக்கிறது. கோவில் வளாகங்களில், சுவர்கள் அழகிய கலைநயத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ராமர் கோவில் இரவு நேரத்தில் ஜொலிக்கும் படத்தை ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

    ராமர் கோவில் தொடர்பான அனைத்து அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள் மூலம் பிரபலங்களுக்கு நேரடியாக அழைப்பிதழ் கொடுக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    எதிர்க்கட்சியின் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில தலைவர்கள் அயோத்தில் செல்வதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பல தலைவர்கள் இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளனர்.

    • விழாவை முன்னிறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருக்கிறது.
    • எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன.

    லக்னோ:

    அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது.

    பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருக்கிறது.

    இதையடுத்து அயோத்தியில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன.

    உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற இருக்கிறது. இதை இந்திய மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்வதற்காக நேரடி ஒளிபரப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக 6 கோடி பேரை பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு எம்.பி. தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டியினருடன் ஆலோசனை செய்து அயோத்தி நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர்.

    அயோத்தியில் விழா நடைபெறும் அதே சமயத்தில் தங்கள் ஊர்களில் இருந்தபடியே கிராம மக்கள் அந்த விழாவை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அகன்ற திரைகளில் அந்த நேரடி ஒளிபரப்பு காட்டப்படும். இதற்காக அகன்ற திரைகளை வாட கைக்கு எடுக்க பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.

    • உ.பி., சிறைகளில் 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
    • கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல.

    அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22, 2024 அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவை நாடு முழுவதும் உள்ள சாவடி மட்டத்தில் நேரடியாக ஒளிபரப்பும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

    கும்பாபிஷேகம் விழாவிற்கான வேத சடங்குகள் முக்கிய விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக ஜனவரி 16 அன்று தொடங்குகிறது. 

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அம்மாநில சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி தெரிவித்தார்.

    இதுகுறித்து உத்தரபிரதேச சிறைத்துறை அமைச்சர் தர்மவீர் பிரஜாபதி கூறுகையில், "தற்போது 1.05 லட்சத்திற்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள். அவர்கள் இந்த நிகழ்வில் இருந்து விலகி இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கைதிகள் அனைவரும் தொழில்முறை குற்றவாளிகள் அல்ல. சில சம்பவங்கள் நடக்கும் போது அவர்கள் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். புனிதமான அந்நேரத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க, இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது" என்றார்.

    • அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.
    • திறப்பு விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக தயாராகும் ‘தீர்த்த ஷேத்ரபுரம்’ குடியிருப்புகள்

    உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை மும்மரமாக செய்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் மற்றும் வெட்டி எடுக்கப்பட்ட கற்களை பயன்படுத்தி சிற்ப வேலைப்பாடுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஜனவரி 22-ம் தேதி கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர விஐபி-க்கள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16-ம் தேதியில் இருந்து நடைபெற உள்ளது.

    இந்நிகச்ழ்சியில் பங்கேற்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து செல்ல தயாராகி வருகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால், அவர்களின் வசதிக்கேற்ப பல்வேறு மொழிகளில் பெயர்ப் பலகை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் மட்டுமல்லாது, உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, வாரணாசி, கோரக்பூர், உள்ளிட்ட நகரங்களில் இருந்து அயோத்திக்கு வரும் சாலைகளிலும் பல மொழிகளில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட உள்ளது.

    மேலும், அயோத்திக்கு அருகில் உள்ள 6 ரயில் நிலையங்களில் இருந்து அயோத்தி செல்வதற்காக பேருந்து வசதிகளும், பக்தர்கள் தங்குவதற்கு குடியிருப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்க தயாராகும் குடியிருப்புகளுக்கு 'தீர்த்த ஷேத்ரபுரம்'என பெயரிடப்பட்டுள்ளது.

    • அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • இதில் பிரதமர் மோடி, உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ம் தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதற்கிடையே, மூலவர் ராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சமாஜவாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறுகையில், அது கடவுளின் விழா. கடவுளை விட முதல் மந்திரி பெரியவராக இருக்கமுடியாது. ராமரால் அழைக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக செல்வார்கள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
    • சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி:

    பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ந்தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    கருவறையில் 'பால ராமர்' (குழந்தை பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 'பிராண பிரதிஷ்டை' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    நாடு முழுவதும் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, ரெயில் சேவை உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக 300 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். அங்கு நடக்கும் தேர் திருவிழா, ஊர்வலம் போன்றவற்றில் இந்த சிலை பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை வடிப்பதற்கு பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரு அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சத்தியாநாராயண பாண்டே ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குலம் உயரம் கொண்ட 5 வயது குழந்தை ராமர் தனது கையில் வில்லுடன் காட்சி அளிக்கும் உருவம் வரைந்து கொடுக்கப்பட்டன. அதன்படி சிலை வடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் சிலை வடிக்கும் பணியினை தொடங்கினர். அதற்கான கற்களை கோவில் அறக்கட்டளையினர் வழங்கினர். அதில் 2 கற்கள், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெள்ளை கற்கள் ஆகும்.

    இந்த 3 சிற்பிகளும், முழுமையாக சிலை வடித்தனர். இதில் ஒன்றை தேர்வு செய்ய கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த சிலையை வடித்த அருண் யோகிராஜ் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வடித்த சிலைதான் அயோத்தி ராமர் கோவிலில் இடம்பெறப் போவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி நகரம் விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அயோத்தி முழுக்க ஆங்காங்கே அன்னதானம் நடந்து வருகிறது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் (17-ந்தேதி) அந்த ராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கோவிலில் மூலவர் சிலையாக பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நேரத்தையும் அறிவித்துள்ளார். கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் அட்ஷதை வழங்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சம்பத்ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் கருவறையில் பால ராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ந்தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

    அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திரமோடியும் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருந்து பறிக்கப்படும்.
    • பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ், ஜனநாயகத்தின் புனிதத்தை அழிக்க பா.ஜனதா சதி செய்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

    புத்தாண்டு தினத்தையொட்டி கட்சி தலைமையகத்தில கூடியவர்களுக்கு, இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தொண்டர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா அதிகாரத்திற்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பூத் அளவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். வாக்குகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    2024 மக்களவை தேர்தல் ஜனநாயகம் மற்றும் அரசியலைப்பை காப்பாற்றுவதற்கானது. ஜனநாயகம், அரசியலமைப்பு இல்லாதபோது வாக்குகள் நம்மிடம் இருநது பறிக்கப்படும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர் நீதியை பெற முடியாது.

    பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றைத் தவிர நாடு கடந்த 10 ஆண்டுகளில் எதையும் பெறவில்லை. பா.ஜனதா அவர்களின் வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு பலவீனம் அடைந்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் எந்த விலை கொடுத்தாவது பா.ஜனதாவை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • காபி இயந்திரத்தை அதிகாரிகள் சுத்தியலால் அடித்து உடைத்தனர்.
    • சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காபி இயந்திரத்தில் மறைத்து வைத்து கடத்த செல்ல முயன்ற 3.497 கிலோ தங்க சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சுங்க தறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பயணி ஒருவரின் காபி இயந்திரம் மீது சந்தேக பார்வை விழுந்தது.

    தொடர்ந்து, காபி இயந்திரத்தை அதிகாரிகள் சுத்தியலால் அடித்து உடைத்தனர். அப்போது, அதனுள் இருந்த சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்ற சம்பவம் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது, சுங்க அதிகாரிகள் காபி இயந்திரத்தில் இருந்து ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். 

    • கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அயோத்தியில் அதிநவீன விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    மும்பை:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

    எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே கூறுகையில், எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அங்கு செல்ல எனக்கு அழைப்பும் தேவையில்லை. கடவுள் ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர். இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என விரும்புகிறேன். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, அரசாங்கம் அல்ல என தெரிவித்தார்.

    • அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    • ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதன்பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது

    உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ராம் லாலா கூடாரத்தில் இருந்தார், இன்று ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வரலாற்றில் டிசம்பர் 30-ம் தேதி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1943-ம் ஆண்டு இதே நாளில், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.

    இங்கு ரூ.15,000 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள் மீண்டும் நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் பெருமையுடன் நிறுவும். இன்றைய இந்தியா தனது புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்துவதுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் மூழ்கியுள்ளது.

    அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×