search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காபி இயந்திரத்தில் மறைத்து கடத்த முயன்ற 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
    X

    காபி இயந்திரத்தில் மறைத்து கடத்த முயன்ற 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

    • காபி இயந்திரத்தை அதிகாரிகள் சுத்தியலால் அடித்து உடைத்தனர்.
    • சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், காபி இயந்திரத்தில் மறைத்து வைத்து கடத்த செல்ல முயன்ற 3.497 கிலோ தங்க சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சுங்க தறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பயணி ஒருவரின் காபி இயந்திரம் மீது சந்தேக பார்வை விழுந்தது.

    தொடர்ந்து, காபி இயந்திரத்தை அதிகாரிகள் சுத்தியலால் அடித்து உடைத்தனர். அப்போது, அதனுள் இருந்த சிலிண்டர் வடிவிலான இரண்டு தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்ற சம்பவம் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது, சுங்க அதிகாரிகள் காபி இயந்திரத்தில் இருந்து ரூ. 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×