என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharishi Valmiki International Airport"

    • பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.
    • பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    லக்னோ:

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    பிரதமர் மோடி அந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுயில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மொத்தம் 80 எம்.பி. தொகுதிகள் கொண்ட உத்தரபிர தேசத்தின் உள்கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி வியக்கத்தக்க வகையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி மாற்றி இருக்கிறார்.

    பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற வாரணாசி தொகுதி ஏற்கனவே சொர்க்கலோகம் போல் மாற்றப்பட்டு விட்டது. அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் சீரமைக்கப்பட்டது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பிரதமர் மோடி அயோத்தி நகரை தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வருகிறார்.

    இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையத்துக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்தார். பிறகு அயோத்தி ரெயில் நிலையத்தை பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைத்தார்.


    மேலும், கோவை-பெங்களூரு உள்பட 6 வந்தே பாரத் ரெயில்கள், தா்பங்கா-அயோத்தி-ஆனந்த் விஹாா் உள்பட இரு அம்ருத் பாரத் ரெயில்களின் சேவையையும் பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார்.

    • அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
    • ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதன்பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது

    உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ராம் லாலா கூடாரத்தில் இருந்தார், இன்று ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் வரலாற்றில் டிசம்பர் 30-ம் தேதி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1943-ம் ஆண்டு இதே நாளில், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.

    இங்கு ரூ.15,000 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள் மீண்டும் நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் பெருமையுடன் நிறுவும். இன்றைய இந்தியா தனது புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்துவதுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் மூழ்கியுள்ளது.

    அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.

    இந்தக் கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×