என் மலர்
இந்தியா

அயோத்தியின் வளர்ச்சியால் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்: பிரதமர் மோடி
- அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். அதன்பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இன்று உலகம் முழுவதும் ஜனவரி 22-ம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது
உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்டவேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ராம் லாலா கூடாரத்தில் இருந்தார், இன்று ராம் லாலாவுக்கு மட்டுமல்ல, நாட்டின் 400 கோடி ஏழைகளுக்கும் வீடு கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரலாற்றில் டிசம்பர் 30-ம் தேதி மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1943-ம் ஆண்டு இதே நாளில், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றி இந்தியாவின் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார்.
இங்கு ரூ.15,000 கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு தொடர்பான பணிகள் மீண்டும் நவீன அயோத்தியை நாட்டின் வரைபடத்தில் பெருமையுடன் நிறுவும். இன்றைய இந்தியா தனது புனித யாத்திரை தலங்களை அழகுபடுத்துவதுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிலும் மூழ்கியுள்ளது.
அயோத்தியின் வளர்ச்சி இங்குள்ள மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Ayodhya, Uttar Pradesh: PM Narendra Modi says, "Whatever be the country in the world if it has to reach new heights of development, it will have to take care of its heritage. Ram Lala was there in a tent, today pucca house has been given to not only Ram Lala but also to… pic.twitter.com/IF5A972pFW
— ANI (@ANI) December 30, 2023






