என் மலர்
உத்தரப் பிரதேசம்
- காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள்.
- ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உ.பி மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உத்தரப் பிரதேச காவல்துறை ஆளில்லா விமானங்கள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத ட்ரோனைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக எஸ்பி செக்யூரிட்டி கவுரவ் வான்ஸ்வால் தெரிவித்தார்.

மேலும், அயோத்தி மாவட்டத்தில் 10,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக டிஜி (சட்டம் ஒழுங்கு) பிரசாந்த் குமார் தெரிவித்தார். இது தவிர, காவல்துறைக்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும், கோவில் நகரத்திற்கு செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக டிஜி தெரிவித்தார். ஜனவரி 17 அல்லது 18 முதல் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. அதற்காக அவ்வப்போது போக்குவரத்து அறிவுரைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.
- ஜனவரி 19-ம் தேதி அறக்கட்டளைக்கு வில் நன்கொடையாக வழங்கப்படும்.
- வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநறிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 2.5 கிலோ எடையுள்ள வில்வம் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
இது அயோத்தியில் உள்ள அமாவா ராமர் கோயிலால் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு வழங்கப்படுகிறது.
ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து அவருக்கு வில்லும் அம்பும் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 19-ம் தேதி இவை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றும் அமாவா ராம் கோயிலின் அறங்காவலரான ஷயான் குணால் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வில் வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு அம்புகளைப் பற்றிய விளக்கங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 200 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த திறமையான கைவினைஞர்கள் வில்வத்தை தயாரித்துள்ளனர்.
2.5 கிலோ எடையுள்ள வில் தயாரிக்க 23 கேரட்டில் சுமார் 600-700 கிராம் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளாக கூறப்பட்டுள்ளது.
- சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
- சமூகத்தை பிளவுபடுத்துவது பாஜகவால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை.
லக்னோ:
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
"சமூகத்தை பிளவுபடுத்துவது பாஜகவால் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை. பாஜகவின் பாதை சகிப்புத்தன்மையும் அல்ல, உலகளாவிய அங்கீகாரமும் அல்ல.
இன்று சுவாமி விவேகானந்தரை நினைவுகூரும்போது, அவர் காட்டிய பாதையில் செல்ல உறுதியேற்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது.
- ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22-ம் தேதி நடைபெறவுள்ளது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பரிசுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
ராமர் கோவில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஆயிரக்கணக்கான பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.குறிப்பாக, சீதையின் பிறந்த மண்ணாக கருதப்படும் நேபாளத்தின் ஜனக்புரி ஜானகி கோயிலில் இருந்து 30 வாகனங்களில் 3,000 வகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்கம், வெள்ளியில் தயாரான பாதுகைகள், கண்கவர் துணிகள், ஆபரணங்கள் உள்ளன.
சீதை சிறை வைக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இலங்கையில் இருந்து பெரிய வடிவிலான பாறை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பாறையில் சீதை சிறை வைக்கப்பட்ட காட்சிகள் ஓவியமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் வதோதராவில் இருந்து 108 அடி நீளத்தில் தூபம் போடுவதற்கான குச்சிகள் வந்துள்ளன. தூபம் போடும்போது எழும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் இந்த குச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. குஜராத் பாஜக அரசு சார்பில் 44 அடி உயர பித்தளை கொடிக் கம்பம், 6 சிறிய கொடிக் கம்பங்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அலிகர் அருகிலுள்ள எட்டாவில் இருந்து 2 ஆயிரத்து 100 கிலோ எடைகொண்ட ராட்சத கோயில் மணி தயாரிக்கப்பட்டு, அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோவில் இருந்து அலோக்குமார் சாஹு என்ற காய்கறி வியாபாரி வித்தியாசமான கடிகாரம் அனுப்பி உள்ளார். அயோத்திக்காக 2018-ல்தயாரித்த இந்தக் கடிகாரத்திற்கு அலோக் குமார், இந்திய அரசின் காப்புரிமையை பெற்றுள்ளார். சூரத் வைர வியாபாரி ஒருவர் 5 ஆயிரம் அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட ராமர் கோவில் வடிவிலான வெள்ளி ஆபரணத்தை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
- டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது.
- ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறிவிப்பு.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு குஜராத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள மேளம் சிறப்பு ரதத்தில் இன்று வந்தடைந்தது.
குஜராத்தின் கர்னாவதியின் தர்யாபூர் விரிவாக்கத்தில் உள்ள டப்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேளம் உருவாக்கப்பட்டது என்று ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் வளாகத்தில் மேளம் நிறுவப்படும் என அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்தார்.
மேளத்தை இங்கு கொண்டு வந்த குழுவின் உறுப்பினர் சிராக் படேல் கூறுகையில், "இது தங்கம் மற்றும் வெள்ளி அடுக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேளம் அமைப்பு இரும்பு மற்றும் செப்பு தகடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்த இசைக்கருவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரி கோயில் அறக்கட்டளைக்கு கடிதம் அனுப்பியதாக குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் ராவல் தெரிவித்தார்.
- 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
- அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பலர் பலவிதமான ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ அளவுள்ள ரவையில் அல்வா தயாரிக்க உள்ளார்.
இதில் 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 100 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது.
ராம் அல்வா கிண்டுவதற்காக 12000 லிட்டர் கொள்ளளவில், 10 அடி அகலம் 10 அடி உயரத்தில் 1400 கிலோ எடையுள்ள சிறப்பு கடாயும் நாக்பூரில் தயாரிக்கப்படுகிறது.
இது எக்கு மற்றும் இரும்பால் செய்யப்பட்டுள்ளது. இதை தூக்குவற்கு கிரேன் பயன்படுத்தப்படும். அல்வா கிண்டுவதற்கான கரண்டியின் எடை 12 கிலோ என விஷ்ணு மனோகர் தெரிவித்துள்ளார்.
7000 கிலோ எடையில் தயாரிக்கப்படும் ராம் அல்வா குழந்தை ராமருக்கு படைக்கப்பட்ட பின்பு, ஒன்றரை லட்சம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில விஷ்ணு மனோகர் பல முறை இடம் பிடித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டில் இவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் 12-வது முறைாக இடம் பெற்றது. அப்போது 75 வகையான அரிசியில் 75 வகையான பலகாரங்களை 285 நிமிடங்களில் தயாரித்தார். இவற்றின் மொத்த எடை 375 கிலோ. ராம் அல்வா தயாரிப்பு மூலமும், தனது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என விஷ்ணு மனோகர் நம்புவதாக ராம் ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
- வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது.
- வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்குள் காளை மாடு ஒன்று புகுந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
அங்குள்ள ஷாகஞ்ச் பகுதியில் உள்ள வங்கி கிளைக்குள் காளை ஒன்று வழி தவறி சென்றுள்ளது. இதைப்பார்த்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கிக்குள் நுழைந்த காளை மாடு அங்குள்ள ஒரு மூலையில் அமைதியாக நிற்கிறது. இதைப்பார்த்த சில வாடிக்கையாளர்கள் பீதி அடைந்து சத்தம் போடுகின்றனர்.
உடனே வங்கி காவலாளி கையில் கம்புடன் வந்து காளையை வங்கியில் இருந்து வெளியே விரட்டும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
#SBI Bull enters SBI bank in Uttar Pradesh's Unnao, here's what happened next. Watch viral video#ShareMarket #SBIBull pic.twitter.com/0xckemJGOo
— Current Affairs Funda™ (@MCurrentAffairs) January 11, 2024
- இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது.
- உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும்.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக அயோத்தியில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த 30-ந்தேதி திறந்து வைத்தார்.
இந்நிலையில் அயோத்தி-அகமதாபாத் இடையேயான இண்டிகோ விமான சேவை தொடக்க விழா காணொலி மூலம் இன்று நடந்தது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் லக்னோவில் இருந்தும், மத்திய விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா டெல்லியில் இருந்தும் விழாவில் இணைந்தனர்.
அப்போது யோகி ஆதித்யநாத் பேசும்போது, வருகிற 22-ந்தேதி அயோத்தி விமான நிலையத்துக்கு 100 விமானங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, "உத்தரபிரதேசத்தில் 1 மாதத்துக்குள் 5 புதிய விமான நிலையங்கள் திறக்கப்படும். இதன்மூலம் அங்கு 19 விமான நிலையங்களாக உயரும்" என்றார்.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது.
- அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அயோத்தியில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் முதல் கட்ட பணிக்கு ரூ.1,450 கோடி செலவானது.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்யும் வகையில் விமான நிலைய முனைய கட்டிடம் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. முனையத்தின் முகப்பு கட்டிடம் அயோத்தி ராமர் கோவில் கட்டிடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி விமான நிலையத்திற்கு 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தியாதாம்' என பெயரிடும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் 22-ம் தேதி அன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட வேண்டும். 22-ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
- அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
- 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளார் ஜார்கண்டை சேர்ந்த மூதாட்டி
உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் ஜன.22 ஆம் தேதி பிரம்மாண்டமாக திறக்கப்படுகிறது. இந்நிகழ்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி 30 வருட மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த 85 வயதான மூதாட்டி முடிவுக்கு கொண்டு வர உள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வசிக்கும் 85 வயதான மூதாட்டி சரஸ்வதி தேவி. அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்கும் வரை மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக, 1992ம் ஆண்டு சபதம் எடுத்துள்ளார். 1986 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகு தனது வாழ்நாளை ராமருக்காக அற்பணித்துள்ள சரஸ்வதி தேவி, ராமர் கோவில் கட்ட வேண்டும் என நாளொன்றில் 23 மணி நேரம் மவுன விரதம் இருந்து வந்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு 24 மணி நேரமும் மவுன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார். இந்நிலையில், ஜன.22 ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி, தனது 30 வருட மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்..
ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக, சரஸ்வதிதேவி ரயில் மூலம் அயோத்தி சென்றுள்ளார். ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் அவரது மௌன விரதத்தை முடிவுக்கு கொண்டு வருவார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்
- அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது.
- அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிரமாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.
அயோத்தி:
அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி உள்பட நாட்டின் பிரபலங்கள் சுமார் 7 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.
அயோத்தி கோவில் எந்த அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறதோ அதே அளவுக்கு அங்குள்ள ஒவ்வொரு அமைப்பும் பிரமாண்டமானதாக அமைக்கப்படுகிறது. கோவில் நுழைவு வாயில் கதவுகள், மணிகள், சிலைகள் அனைத்தும் பல அடி உயரத்துக்கு பிரமிக்க தக்க வகையில் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் கொடி கம்பமும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் அதற்கான மரங்கள் தேடப்பட்டது. இறுதியில் குஜராத் மாநிலத்தில் அதற்கான மரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த கொடி கம்பம் தங்க முலாம் பூசப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்தது. 5 கிலோ எடையுடன் அந்த கொடி கம்பம் பிரமாண்டமானதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 5-ந்தேதி அந்த பிரமாண்ட கொடி கம்பத்தை குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பிரமாண்டமான லாரியில் அந்த கொடி கம்பம் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டது.
நேற்று அந்த கொடி கம்பம் அயோத்திக்கு வந்து சேர்ந்தது. அயோத்தியில் ஏற்கனவே குழுமி உள்ள ராம பக்தர்கள் கொடி கம்பத்தை தொட்டு வணங்கினார்கள். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு அந்த கொடி கம்பத்தை வரவேற்றனர்.
அந்த கொடி கம்பம் 44 அடி உயர வெண்கல கம்பத்தில் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அதன் மொத்த உயரம் 161 அடி உயரமாக இருக்கும். அயோத்தி கோவிலில் 205 அடி உயரத்தில் மிக பிர மாண்டமாக அந்த கொடி மரம் நிறுவப்படும்.
வருகிற 22-ந்தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் அதே நேரத்தில் இந்த கொடி மரமும் நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் 22-ந்தேதி நடைபெற இருக்கிறது.
- 17-ந்தேதி குழந்தை வடிவிலான ராமர் சிலை ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.
அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. 16-ந்தேதி முதல் அதற்கான வேலைகள் தொடங்க இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.
இதற்கு முன்னதாக 17-ந்தேதி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள், பொது மக்களும் அதிக அளவில் தரிசனம் செய்வதற்காக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
இதனால் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






