என் மலர்
உத்தரப் பிரதேசம்
- வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
- மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி ஆகும்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (ஜனவரி 22ம் தேதி) மிக விமரிசையாக நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஏராளமோனோர் அழைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சுமார் 100 உயரதிகாரிகள் ராமர் கோவில் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
பிரான் பிரதிஷ்டை என்று கூறப்படும் இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப அயோத்தியில் உள்ள சரயு காட்டில் இந்தியாவின் மிகப்பெரிய ஒளி-உமிழும் டையோட்கள் (எல்இடி) மிதக்கும் திரை நிறுவப்பட்டுள்ளது.

மிதக்கும் எல்இடி திரையின் முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி ஆகும். பக்தர்கள், பிரதிஷ்டை விழாவை நேரடியாக ஒளிபரப்ப குஜராத் நிறுவனம் திரையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து மிதக்கும் எல்இடி திரையின் எம்டி அக்ஷய் ஆனந்த் கூறியதாவது:-
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் எல்இடி திரையை குஜராத் நிறுவனம் ஒன்று ஜனவரி 22ம் தேதி நடைபெறும் வரலாற்று நிகழ்வுக்காக தயாரித்துள்ளது. இதில், பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி நேரடியாக சரயு காட்டில் இருந்து நேரடியாக காண்பிக்கப்படும்.
இந்த முழு திரையின் நீளம் 69 அடி மற்றும் உயரம் 16 அடி., இது முழு மிதக்கும் எல்இடி திரை தோராயமாக 1100 சதுர அடியாக உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை நடத்த உள்ளார்.
- முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 3 அடுக்குகளுடன் மிக பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
அந்த ஆலயத்தின் தரைதளத்தில் நாளை மறுநாள் (22-ந்தேதி) 5 வயது பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மைசூருவை சேர்ந்த சிற்பி செய்துள்ள அந்த சிலை தற்போது கருவறையில் பீடத்தில் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன.
முக்கிய நிகழ்ச்சியான சிலை பிரதிஷ்டை 22-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12.20 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை நடத்த உள்ளார். இந்த விழாவில் பங்கேற்குமாறு 7 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சுமார் 2 ஆயிரம் பேர் சாதுக்கள் ஆவார்கள். மீதமுள்ள சுமார் 5 ஆயிரம் பேர் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆவார்கள். இதனால் 22-ந்தேதி அயோத்தி மாநகரம் மிகப் பெரிய விழா கோலத்தை எதிர்நோக்கி உள்ளது.
பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் ஒரே இடத்தில் பங்கேற்க இருப்பதால் அயோத்தியில் அதிநவீன கருவிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அயோத்தி ராமர் கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலய கருவறைப் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.
அவர்களுக்கு பிறகு 2-வது அடுக்கில் மத்திய துணைநிலை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 3-வது அடுக்கில் உத்தரபிரதேச மாநில போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.
முதல் அடுக்கில் இருக்கும் சிறப்பு பாதுகாப்பு படையில் 100 கமாண்டோ வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நன்கு குறிபார்த்து சுடும் வல்லமை பெற்றவர்கள். மேலும் அனைத்து வகையான நவீன கருவிகளையும் கையாள பயிற்சி பெற்றவர்கள்.
ஆலயத்தின் நுழைவு வாயில் பகுதியில் துணைநிலை ராணுவ வீரர்கள் 1,400 பேர் நிறுத்தப்பட்டு இருப்பார்கள். அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆலய வளாகம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை தொடர்ந்து ஆலயத்துக்கு வெளியே உத்தரபிரதேச மாநில உள்ளூர் போலீசார் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் ஈடுபடுவார்கள். அயோத்தி நகரம் முழுக்க உள்ளூர் போலீசார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும்.
முக்கிய பிரமுகர்கள் வருகை காரணமாக அயோத்தி முழுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர பேரிடர் மீட்பு குழுவினரும் உத்தரபிரதேசம் முழுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அயோத்தியில் சிறப்பு பேரிடர் மீட்பு குழு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த குழு இயற்கை சீற்றங்களின்போது எத்தகைய ஆபத்து ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அவர்களும் நவீன கருவிகளுடன் அயோத்தியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

ராமர் சிலையின் உயரம்
4.25 அடி
அகலம்
3 அடி
மொத்த எடை
1.5 டன்
மூலவர் சிலை ராமரின் வயது
5
மூலவரின் தோற்றம்
பரந்த நெற்றி, வசீகரமான கண்கள், நீண்ட கைகள்.
சிலை வடிவமைக்கப்பட்ட கல்
கர்நாடகத்தின் கருப்பு பாறைகளில் இருந்து செதுக்கப்பட்டது.
அடித்தளம்
தாமரையில் ராமர் நிற்பது போன்ற வடிவம்.
ராமர் சிலையைச் சுற்றியுள்ள பிரபையில் அமைந்துள்ளவை
தசாவதாரம், ஸ்வஸ்திக் சின்னத்துடன் ஓம், சுதர்சன சக்ரம், கதாயுதம், சூரியன், சந்திரன்.
சிலையைச் செதுக்கியவர்
மைசூருவைச் சேர்ந்த அருண் யோகிராஜ்.
- அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன.
- 6 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான 7 நாட்கள் பூஜையானது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்கள், நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அலிகாரில் இருந்து 400 கிலோ எடையுள்ள பூட்டு மற்றும் சாவி அயோத்திக்கு வந்தடைந்தன. இந்த பூட்டு இந்து மகா சபா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 6 மாத காலமாக தயாரிக்கப்பட்ட இந்த பூட்டு 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. இது உலகின் மிக பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த பூட்டை உருவாக்கிய அலிகாரை சேர்ந்த கைவினைக் கலைஞர் சத்யா பிரகாஷ் ஷர்மா சமீபத்தில் காலமானார். அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்த பூட்டை பரிசாக வழங்கவேண்டும் என்பதே அவரது கடைசி ஆசை என அவரது மனைவி ருக்மணி ஷர்மா தெரிவித்தார்.
#WATCH | Uttar Pradesh: Lock and Key weighing around 400 kg, made in 6 months arrives at Ayodhya from Aligarh, ahead of the Pran Pratishtha ceremony on 22nd January. pic.twitter.com/Agl4I1nThK
— ANI (@ANI) January 20, 2024
- சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
- ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா வரும் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக, சிறப்பான ஏற்பாடுகளை கோவிலின் அறக்கட்டளை செய்து வருகிறது. திறப்பு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள், பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டில் மட்டுமல்ல சுமார் 55 நாடுகளில் இருந்து நூறு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

சில மாநிலங்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 22ம் தேதி அன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏதுவாக அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தபால் தலையை வெளியிட்ட பிரதமர் மோடி ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ராமர் கோவில் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். தபால் தலைகளின் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
தொகுப்பு புத்தகம் வெளியிட்ட பிரதமர் மோடி பின்னர் ராம பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- விலை உயர்ந்த ஐபோனை பறிகொடுத்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.
- ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார்.
குறும்பு சேட்டைகளுக்கு பெயர் பெற்ற குரங்குகள் சுற்றுலா தலங்களில் பயணிகளின் பொருட்களை தூக்கி சென்ற சம்பவங்களை பார்த்திருப்போம். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரசேத மாநிலம் மதுராவில் அமைந்துள்ள பிருந்தாவனத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றி திரியும். அவை அடிக்கடி சுற்றுலா பயணிகளின் பொருட்களை தூக்கி செல்வது வாடிக்கையாக உள்ளது. சம்பவத்தன்று அங்கு சுற்றுலா சென்ற பயணி ஒருவரின் ஐ போனை குரங்கு ஒன்று பறித்து கொண்டு பிருந்தாவனம் மதில் சுவர் மீது அமர்ந்து கொண்டது. விலை உயர்ந்த ஐ போனை பறிகொடுத்த அந்த பயணி மிகுந்த கவலை அடைந்தார்.
இதை பார்த்த அங்கிருந்த சிலர் குரங்கிடம் இருந்து ஐ போனை மீட்பதற்காக முயற்சி செய்தனர். அப்போது ஒரு வாலிபர் தன்னிடம் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை குரங்கிற்கு தூக்கி போட்டார். அதை பிடித்த குரங்கு தன்னிடம் இருந்த ஐ போனை கீழே தூக்கி எறிந்தது. உடனே ஐ போனை பறிகொடுத்த நபர் அதனை வேகமாக பிடித்தார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
அந்த வீடியோ வைரலாகி ஏராளமான பயனர்களின் பார்வைகளை குவித்து வருகிறது.
- பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் நடந்தன.
- அயோத்தி ஆலயம் அருகே பிரமாண்டமான பந்தலில் யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
380 அடி நீளம், 250 அடி அகலம், 161 அடி உயரத்தில் 3 அடுக்குகளுடன் இந்த ஆலயம் அமைகிறது. 392 பிரமாண்டமான தூண்கள், 44 நுழைவாயில்களுடன் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது.
ஆலயத்தின் கீழ் தளத்தில் கருவறை அமைந்துள்ளது. அங்கு சுமார் 5 அடி உயரத்தில் ராமரின் சிலை அமைக்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்து, வளர்ந்த இடம் என்பதால் அங்கு 5 வயதுடைய பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
மைசூரை சேர்ந்த சிற்பி இந்த பால ராமர் சிலையை செதுக்கி உள்ளார். இந்த சிலை பிரதிஷ்டை வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி முன்னிலையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி 7 நாட்கள் பூர்வாங்க பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கின.
நேற்று பால ராமர் சிலையை அயோத்தி கோவிலுக்குள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக நேற்று காலை சரயு நதியில் இருந்து புனித நீர் சேகரித்து ஆலயத்துக்கு எடுத்துவரப்பட்டது. இதையடுத்து பால ராமர் போன்ற உருவம் கொண்ட வெள்ளியிலான ராமர் சிலை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு மைசூர் சிற்பி செதுக்கி இருக்கும் பால ராமர் சிலை ஆலயத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சுமார் 200 கிலோ எடையுள்ள அந்த சிலை கிருஷ்ணா எனும் வகை கருங்கல்லால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கிரேன் மூலம் அந்த சிலையை ஆலயத்துக்குள் எடுத்து சென்றனர்.
இன்று (வியாழக்கிழமை) பால ராமர் சிலையை கருவறைக்குள் பீடத்தில் நிலைநிறுத்தும் பணிகள் நடந்தன. அதற்கு முன்னதாக கருவறையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புனித நீர் மூலம் கருவறை சுத்தப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து பால ராமர் சிலைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று மதியம் அந்த சிலை கருவறை பீடத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து பால ராமர் சிலைக்கு அடுத்தடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து புண்ணிய நதிகளில் தீர்த்தங்கள் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த புனித நீர்கள் மூலம் பால ராமர் சிலை சுத்தப்படுத்தப்பட உள்ளது. இன்றும், நாளையும் இந்த பணிகள் நடைபெறும்.
இதற்கிடையே அயோத்தி ஆலயம் அருகே பிரமாண்டமான பந்தலில் யாகசாலை பூஜைகளும் நடந்து வருகின்றன. 1008 லிங்கங்கள் அமைத்து நடந்து வரும் பூஜைகளும் அயோத்தி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.
- தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
- நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வுக்கு முன்னதாக, கோரக்பூர் உயிரியல் பூங்காவில் 'ராம்' என்று பெயரிடப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்களின் நுழைவு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று பூங்கா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தள்ளுபடி பெறும் பார்வையாளர்கள் அடையாள ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்று மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஷாஹீத் அஷ்ஃபாக் உல்லா கான் பிரானி உத்யானின் இயக்குனர் மனோஜ் குமார் சுக்லா," இந்த சலுகை ஜனவரி 21ம் தேதி அன்று ஒரு நாள் மட்டுமே கிடைக்கும்" என்றார்.
மிருகக்காட்சிசாலைக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டாலும், மிருகக்காட்சிசாலையின் நுழைவு மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய சுக்லா முடிவு செய்துள்ளார்.
நுழைவு பிளாசாவில் உள்ள நிகழ்ச்சி மண்டபத்தின் நுழைவு அன்றைய தினம் பொது மக்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று ஆகமவிதிகள்படி தொடங்கியது.
- குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 71 ஏக்கரில் அமையும் இந்த ஆலயம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
3 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்துள்ளனர்.
51 இஞ்ச் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை கருவறையில் வருகிற 22-ந்தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கான சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளார். விழாவில் சுமார் 7 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை ராமர் சிலைக்காக 3 சிற்பிகள் செய்த சிலைகளில் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகமவிதிகள்படி தொடங்கியது. இதையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு ஐதீகப்படி பூஜைகள் நடைபெறும்.
இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு என்னென்ன பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன. அங்கு முதல் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
இதையடுத்து புனித நீராடல் மேற்கொள்ளப்படும். இதற்காக அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பசுக்கள் தானம் செய்யப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு பிராயசித்த பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டது.
நாளை (புதன்கிழமை) குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதே சமயத்தில் சரயு நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு அயோத்தி ஆலயத்துக்கு வருவார்கள்.
அந்த புனித நீர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பயன்படுத்தப்படும்.
18-ந்தேதி (வியாழக்கிழமை) யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. விநாயகர் பூஜையுடன் யாக சாலைகளில் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் செய்யப்படும். வருண பூஜை, வாஸ்து பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும்.
அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படும். நவக்கிரக பூஜைகள் ஆகமவிதிகளின்படி மேற்கொள்ளப்படும். இதில் ஆயிரக்கணக்கான வேத விற்பன்னர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக அயோத்தி ராமர் கோவில் அருகே மிக பிரமாண்டமாக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
20-ந்தேதி (சனிக்கிழமை) அயோத்தி ராமர் கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். யாக சாலை பூஜைகளில் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். சரயு நதியில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் ஆலயம் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.
அதன் பிறகு வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை (21-ந்தேதி) முழுக்க முழுக்க குழந்தை ராமர் சிலை 125 வகை அபிஷேகங்களால் புனித நீராடல் செய்யப்படும்.
இதையடுத்து அயோத்தி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். அன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்வார்கள். இந்த பூஜையை வாரணாசியில் இருந்து வரும் வேதவிற்பன்னர்கள் கண்காணிப்பார்கள்.
குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது 121 ஆச்சார்யார்கள் வேத மந்திரங்களை முழங்குவார்கள்.
பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலைக்கு முக்கிய பூஜைகள் செய்வார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருப்பார்கள்.
விழாவில் 150 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ள சுமார் 7 ஆயிரம் பேரில் சுமார் 3 ஆயிரம் பேர் சாதுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 21 மற்றும் 22-ந்தேதிகளில் பக்தர்கள் யாரும் ராமர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்கள் அயோத்தி கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.
- ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து உலக இந்து அறக்கட்டளை அமைப்பின் தலைவர் சுவாமி விக்யானந்த் கூறியதாவது,
தூதர்கள் உட்பட 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். பிரபு ராம்வம்சத்தை சேர்ந்த கொரிய ராணிக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, ரொமினிகா, எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்கள் லக்னோவிற்கு ஜன.20 - ஆம் தேதி வரவுள்ளனர். 21-ஆம் தேதி மாலை அவர்கள் அயோத்தி வந்தடைவர். உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் இடம் சிறியதாக இருப்பதால் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
- விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள்.
- உயரதிகாரிகள் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வரும் 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. உலக இந்து அறக்கட்டளையின் நிறுவனரும், உலகளாவிய தலைவருமான சுவாமி விக்யானானந்த், "தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 55 நாடுகளைச் சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
அழைக்கப்பட்ட நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெலாரஸ், போட்ஸ்வானா, கனடா, கொலம்பியா, டென்மார்க், டொமினிகா, காங்கோ ஜனநாயக குடியரசு (டிஆர்சி), எகிப்து, எத்தியோப்பியா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கானா, கயானா, ஹாங் ஆகியவை அடங்கும்.
காங், ஹங்கேரி, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, ஜமைக்கா, ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, மலாவி, மொரீஷியஸ், மெக்சிகோ, மியான்மர், நெதர்லாந்து, நியூசிலாந்து, நைஜீரியா, நார்வே, சியரா லியோன், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், இலங்கை , சுரினாம், ஸ்வீடன், தைவான், தான்சானியா, தாய்லாந்து, டிரினிடாட் & டொபாகோ, வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா, யுகே, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் ஜாம்பியா இடம்பெறுகிறது.
ராமர் கோவில் நிகழ்ச்சியில் நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
மேலும், அனைத்து விவிஐபி வெளிநாட்டு பிரதிநிதிகளும் ஜனவரி 20ம் தேதி லக்னோவுக்கு வருவார்கள் என்றும் 21ம் தேதி மாலைக்குள் அயோத்தியை அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடுபனி மற்றும் வானிலை காரணமாக, பிரதிநிதிகள் நிகழ்வுக்கு முன்னதாக இந்தியாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு விருந்தினர்களை அழைக்க திட்டமிட்டிருப்பதாக சுவாமி விக்யானானந்த் முன்பு கூறியிருந்தார். ஆனால் இட பற்றாக்குறை காரணமாக விருந்தினர் பட்டியலைக் குறைக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது.
- ஆர்எஸ்எஸ், பாஜக நடத்தும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
- ராமர் கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பாராட்டு.
அயோத்தி ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதில்லை என காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் இமாச்சல பிரதேச தலைவர் பிரதீபா சிங், கோவில் கட்டும் முயற்சியை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது. எனது கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு ஆலயங்களை அவர் புதுப்பித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நானும் எனது மகன் விக்ரமாதித்ய சிங்கும் இணைந்து பெற்றுள்ளோம். ஆனால், வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என தெரிவித்தார். மேலும், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் ராமர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இமாச்சலப் பிரதேச பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் கூறுகையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க போவதாக தெரிவித்தார். மேலும் "அயோத்தி ராமர் கோவில் இயக்கத்துக்கு எனது தந்தை ஆதரவாக இருந்துள்ளார். எங்களை பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இந்து மதத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என கூறினார்.
தேர்தல் ஆதாயத்துக்காக முழுமையடையாத கோவிலை திறந்து வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, உள்ளிட்டோர் அழைப்பிதழை நிராகரித்தது குறிப்பிடதக்கது






