என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்பு இருந்தது.
- காசி புத்துயிர் பெற அரசு, சமூகம் மற்றும் துறவிகள் இணைந்து பணியாற்றி வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மகாமந்திரை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
ஸ்வர்வேட் மகாமந்திர் திறப்பு விழாவைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்யக்கூடிய மையத்தை பார்வையிட்டார். மகாமந்திரத்தின் சுவர்களில் ஸ்வர்வேதத்தின் வசனங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அடிமை மனநிலையில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளதாகவும், அதன் பாரம்பரியத்தை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:-
அடிமைத்தன காலத்தில், இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அடக்குமுறையாளர்கள் முதலில் நமது சின்னங்களை குறிவைத்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, கலாச்சார சின்னங்களை மீண்டும் உருவாக்குவது அவசியமானது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சோம்நாத் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு எதிர்ப்பு இருந்தது. பல சதாப்தங்களாக இந்த சிந்தனை ஆதிக்கம் செலுத்தியது. இதன் விளைவாக நாடு தாழ்வு மனப்பான்மையின் குழிக்குள் தள்ளப்பட்டது.
சுதந்திரம் கிடைத்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, காலச் சக்கரம் மீண்டும் ஒருமுறை சுழன்றது. அடிமை மனப்பான்மையிலிருந்தும், பாரம்பரியத்தைப் பற்றிய பெருமித உணர்விலிருந்தும் நாடு விடுதலையை அறிவித்தது.
சோம்நாத்தில் இருந்து தொடங்கிய பணி தற்போது பிரச்சாரமாக மாறியுள்ளது. இன்று விஸ்வநாத்தின் மகத்துவம் இந்தியாவின் பெருமையை பாடி வருகிறது.
பல நூற்றாண்டுகளாக, பொருளாதார வளம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு இந்தியா எடுத்துக்காட்டாக விளங்குகிறது. காசி புத்துயிர் பெற அரசு, சமூகம் மற்றும் துறவிகள் இணைந்து பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாரணாசியின் நமோ கட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- கன்னியாகுமரி, வாரணாசி இடையிலான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நமோ கட் பகுதியில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய மீன்வள துறை இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் கன்னியாகுமரி மற்றும் வாரணாசி இடையேயான காசி தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) வழியே புதிய தொழில்நுட்ப பயன்பாடு இன்று நடைபெறுகிறது. இது ஒரு புதிய தொடக்கம். இதனால், உங்களை என்னால் எளிதில் அடைய முடிகிறது.
விருந்தினர்கள் என்றளவில் இல்லாமல், நீங்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் என்றளவில் வந்திருக்கின்றீர்கள். காசி தமிழ் சங்கமத்திற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.
தமிழகத்தில் இருந்து காசிக்கு வருவது என்றால் அதற்கு மகாதேவரின் ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டுக்கு வருவது என பொருள். அதனாலேயே தமிழகம் மற்றும் காசிக்கு இடையேயான பிணைப்பு என்பது சிறப்பானது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பார்வையாளர்களுக்கு தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.
- ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது.
- ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. ராமர் கோயில் வரும் ஜனவரி 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், கருவறையில் வைக்கப்பட்டுள்ள ராமர் சிலையை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ராம் மந்திர் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய் கூறியதாவது:-
ஜனவரி 22-ம் தேதி மதியம் 12 மணிக்கு விழா நடைபெறுகிறது. கருவறை தயாராக உள்ளது. சிலை தயாராக உள்ளது. ஆனால் கோயிலில் நிறைய வேலைகள் உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டுமானப் பணிகள் தொடரலாம்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அயோத்தி திறப்புக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். நகரத்தில் நெரிசலைத் தவிர்க்க, ஜனவரி 22-ம் தேதி அயோத்திக்கு வர வேண்டாம். அருகில் உள்ள சிறிய, பெரிய கோயிலில் ஒன்று கூடுங்கள். வேறு கடவுள் அல்லது தெய்வத்திற்கு உரியதாக இருந்தாலும் உங்களால் சாத்தியமான கோவிலுக்குச் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
- எம்.பி., எம்.எல்.ஏ. வழக்க விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கில் விசாரணை முடிந்ததும், நீதிமன்றம் இவரை குற்றவாளி என அறிவித்தது. எனினும், இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ராம்துலாருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்து சோன்பத்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், ராம்துலார் கோந்த் மக்கள் பிரதிநிதகள் சட்டப்படி எம்.ஏ.எல். பதவியை இழந்துவிட்டார்.
- வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- பிரதமர் மோடி சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் தேசியக்கட்சிகள் தற்போது முதலே அதற்கான நடவடிக்கைகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்ற மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் இருந்து புனித தலத்துக்குச் சென்று 'மிஷன் -2024' என்ற ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தையும் தொடங்க இருக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாரணாசியில் சுற்றுப்பயணம் செய்கிறார். வருகிற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காசிக்கு வரக்கூடிய அவர், தனது பாராளுமன்றத் தொகுதியில் இரவு தங்குகிறார். மறுநாள் திங்கட்கிழமை கட்சி மற்றும் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார்.
வாரணாசி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் மோடி ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து வாரணாசி கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா கூறுகையில், பிரதமர் மோடி காசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன் தொடர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார் என்றார்.
அதேபோல் காசி தமிழ் சங்கமம், உலகின் மிகப் பழமையான கலாச்சார பாரம்பரியத்தின் வாழ்க்கைப் பிணைப்புகளை புதுப்பிக்க மத்திய கல்வி அமைச்சகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. மத்திய கல்வி அமைச்சகம், கலாச்சாரம், ஜவுளி, ரெயில்வே போன்ற பிற துறைகளுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த காசி தமிழ்ச் சங்கமத்தில், இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கிடையேயான வரலாற்று மற்றும் குடிமைத் தொடர்பின் பல பகுதிகள் கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு, பகிர்வு பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகின்றன.
காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள பழமையான தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் இரண்டாம் கட்ட விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. அதிலும் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்றார்.
மேலும் பிரதமர் மோடி இந்த சுற்றுப் பயணத்தின் போது, கங்கை நதியில் நடைபெறும் பிரமாண்ட கங்கா ஆரத்தியையும் காண இருப்பதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளில், கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு சின்னங்களுக்கு இடையேயான விக்சி பாரத் சங்கல்ப் யாத்ரா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.
மோடி வருகையையொட்டி வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- 2014-ம் ஆண்டு சிறுமி பலாத்காரம் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
- பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர் ராம்துலார் கோண்ட். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கற்பழிப்பு உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டது.
சம்பவம் நடைபெற்றபோது அவர் எம்.எல்.ஏ.-வாக இல்லை. தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் வழக்கு எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில்தான் நேற்று விசாரணை முடிவில் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், நாளை மறுதினம் (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடைபெற்றபோது ராம்துலார் கோண்ட் மனைவி பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டால் ராம்துலார் பதவி விலக நேரிடும்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
- கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் அதிக முன்பதிவுகள் செய்து பக்தர்கள் வழிபட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
வாரணாசி:
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் பிரதமர் மோடியின் கனவு திட்டமாக ரூ.630 கோடியில் கோவில் வளாகம் புதுப்பிக்கப்பட்டது. அதனை பிரதமர் மோடி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திறந்து வைத்தார்.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
கடந்த 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டில் அதிக முன்பதிவுகள் செய்து பக்தர்கள் வழிபட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2021 டிசம்பர் 13-ந்தேதி முதல் இந்த ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி வரை கடந்த 2 ஆண்டுகளில் 15,930 வெளிநாட்டு பக்தர்கள் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 12 கோடியே 92 லட்சத்து 24 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
- பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது.
- இதில் மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்துள்ளார்.
லக்னோ:
உத்தரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியான மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் லக்னோவில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாயாவதி தனது அரசியல் வாரிசை அறிவித்தார்.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய்வீர் சிங் கூறுகையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை அவர் அரசியல் வாரிசாக அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.
- மோதிய வேகத்தில் கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
- இதில் காரில் பயணித்த ஒரு குழந்தை உள்பட 8 பேர் தீயில் கருகி பலியாகினர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் குழந்தை உள்பட 8 பேர் பயணம் செய்தனர்.
துபவுரா கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று டயர் பஞ்சர் ஆனது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
சாலையின் நடுப்பகுதியில் இருந்த தடுப்பை தாண்டி மறுபுறத்தில் இருந்த சாலையில் கார் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. வேகமாக மோதியதில் கார் நொறுங்கி தீப்பிடித்தது.
இதில் காருக்குள் இருந்த குழந்தை உள்பட 8 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். காரில் எரிந்த தீயை அணைத்தனர். காருக்குள் 8 பேரும் கரிக்கட்டைகளாகி கிடந்தனர்.
கார் தீப்பிடித்து எரிந்தபோது அதிலிருந்து வெளியேற முயற்சி செய்தனர் என்றும், ஆனால் காரின் கதவுகளை அவர்களால் திறக்க முடியாததால் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் பலியான 8 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சி யில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தனர் என்றும் தெரிவித்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை பரிசோதித்தபோது எதிர்பாராத விதமாக பெண் மீது குண்டு பாய்ந்தது.
- சக போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் இஷ்ரத். புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கிடையே, அலிகாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இஷ்ரத்தின் பாஸ்போர்ட்டு சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக இஷ்ரத் நேற்று அலிகார் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் மனோஜ் வைத்திருந்த துப்பாக்கி திடீரென சுட்டது. இதில் பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்கு வந்த இஷ்ரத் தலைமீது குண்டுபாய்ந்தது. உடனடியாக அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் இஷ்ரத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இன்ஸ்பெக்டரை தேடி வருகின்றனர்.
- சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு என்னை கட்டாயப்படுத்துகிறார்.
- பெண்ணின் 2 சகோதரிகளும் அரியானாவில் திருமணம் செய்துள்ளனர்.
கோரக்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் மகேஷ்ராவ் பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் சிலுவால் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், எனது தாய் அரியானாவை சேர்ந்த ஒருவருக்கு என்னை திருமணம் செய்து கொள்வதற்காக ரூ.4 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டார்.
அந்த வாலிபருடன் எனக்கு கடந்த நவம்பர் 23-ந் தேதி திருமணம் நடந்தது. தற்போது அந்த வாலிபர் என்னை தாக்கி கொடுமைப்படுத்துகிறார். மேலும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு என்னை கட்டாயப்படுத்துகிறார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
பெண்ணின் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அந்த பெண்ணின் 2 சகோதரிகளும் அரியானாவில் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண்ணின் புகாரை அவர்கள் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் அவஸ்தி, சிலுவால் போலீஸ் நிலைய அதிகாரி சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் கூறுகையில், ரூ. 4 லட்சத்திற்கு விற்கப்பட்டதாக பெண் கூறிய புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
அவரது தாயும், குடும்ப உறுப்பினர்களும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். இருப்பினும் புகாரின் அனைத்து அம்சங்களையும், நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
- அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ப பூமியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ந்தேதி பிரதமர் மோடி கோவில் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது முதலே கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தொழில் அதிபர்கள் கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நடிகர்கள் அமிதாப்பச்சன், அக்சய் குமார், பாடகி ஆஷா போன்ஸ்லே, நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி , பிரபல டி.வி. தொடரான ராமாயணாவில் ராமர் மற்றும் சீதாவாக நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா மற்றும் 3 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் 1990-ல் இருவேறு போலீஸ் துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்த 50 கர சேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களை அழைத்து வருவது, உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை விஸ்வ இந்து பரிஷத் மேற்கொண்டுள்ளது.
இது தவிர 50 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள முக்கிய குருமார்கள், மத தலைவர்கள் மற்றும் மிக முக்கிய பிரபலங்கள், எழுத்தாளர்கள், நாட்டின் பல்வேறு துறை நிபுணர்கள், ஓய்வுபெற்ற முக்கிய ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள், இசையமைப்பாளர்கள், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது பெற்றவர்கள் என முக்கிய பிரமுகர்களுக்கும் கோவில் டிரஸ்ட் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






