என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அயோத்தி ரெயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறுகிறது.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கிடையே, புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. பிளாட்பாரங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்.
ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி சாலையின் வழியாக பேரணி செல்கிறார்.
இந்நிலையில், அயோத்தி ரெயில் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அயோத்யா தாம் ரெயில் நிலையம் உலகத்தரத்தில் கட்டப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தின் இரு புறங்களிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
- மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கு முன்பாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை அயோத்தி வருகிறார்.
பிரதமர் மோடி காலை 11.15 மணியளவில் அயோத்தி ரெயில் நிலையத்தையும், மதியம் 12.15 மணியளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து, 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்படும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்க நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1400 கலைஞர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமான நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் ராம் பாத் வரை அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 40 மேடைகளில் 1,400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாட்டுப்புற கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை அளிக்க உள்ளனர்.
இதில், அயோத்தியைச் சேர்ந்த வைபவ் மிஸ்ரா, காசியைச் சேர்ந்த மோகித் மிஸ்ரா டமாரம் அடித்து, சங்கு ஊதி பிரதமரை வரவேற்கின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
- ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள்.
அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், நாளை அயோத்தியாவில் வால்மீகி விமான நிலையம் திறக்கப்படுகிறது.
ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, ஜனவரி 16ம் தேதி முதல் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 16 : கோயில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.
ஜனவரி 17: ராம்லாலா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும், பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள்.
ஜனவரி 18: கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 19: அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன்.
ஜனவரி 20: கோயிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.
ஜனவரி 21: 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும்.
ஜனவரி 22: காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசிர நட்சத்திரத்தில் ரமலாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வருகை தர உள்ளதால், அயோத்தி நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அயோத்தி பயணத்தின் போது பிரதமர் மோடி 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
- 4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது.
- எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி சேர்மன் முன்னிலையில் கவுன்சிலர்கள் மோதிக் கொண்டனர்.
WWE மல்யுத்தம் போட்டியை பார்த்தீர்கள் என்றால் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வார்கள். பின்னர் சேர், பெஞ்ச் போன்றவற்றால் தாக்கிக் கொள்வார்கள். அதுபோன்ற சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உள்ளது.
4 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடத்த கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் நகராட்சி சேர்மன் மற்றும் எம்.எல்.ஏ. பிரசான் சவுத்ரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென் அங்கிருந்தவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
மோதல் ஒரு கட்டத்தில கைகலப்பாக மாறி ஒருவருக்கு ஒரவர் சேர்களை கொண்டு தாக்க தொடங்கினர். ஒருவர் சேர் மீது ஏறி மற்றொருவரை தாக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோவை உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பா.ஜனதாவை கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.
"இந்த நிகழ்வு மாநில உள்ளூர் நிர்வாகத்தை பற்றி மட்டும் கேள்வி எழுப்பவில்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் உள்ள பிளவுகளை எடுத்துக்காட்டுகிறது.
எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படாத நிலையில், ஆய்வுக் கூட்டத்தில் வேறு என்ன நடந்திருக்கும். அதனால்தான் ஷாம்லியில் உள்ள கவுன்சிலர்களிடையே அடிதடி நடைபெற்றுள்ளது. பா.ஜனதா ஆட்சி கற்பிப்பது சொந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொண்டு ஆய்வு கூட்டத்திற்கு வாருங்கள் என்பதுதான்" என்றார்.
- கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
- உ.பி.யில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும்.
மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரியாக ஜோதி ராதித்யா சிந்தியா கூறியதாவது:-
உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னதாக 6 விமான நிலையங்கள் இருந்தது. தற்போது 9 விமான நிலையங்கள் உள்ளன. நாளை 10-வது விமான நிலையம் தொடங்கப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு மேலும் 9 விமான நிலையங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் 19 விமான நிலையங்களாக உயரும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு அஜாம்கார், அலிகார், மொராதாபாத், ஷ்ரவஸ்தி, சத்ரகூட் ஆகிய இடங்களில் தலா என்று என ஐந்து விமான நிலையங்கள் திறக்கப்படும்.
கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2030-க்குள் விமான நிலையங்களின் எண்ணிக்கை 200-ஐத் தொடும்.
இவ்வாறு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையல், நாளை சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி விமான நிலையத்தை திறந்த வைக்க இருக்கிறார். இந்த விமான நிலையத்திற்கு வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தி தாம் எனப் பெயரிடப்பட இருக்கிறது.
- அயோத்தியில் அடுத்த மாதம் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அயோத்தி:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி ராமர் கோவில் திறப்புவிழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ராமர் கோவில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என ஏற்கனவே அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள், மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது. இதுவரை விழாவில் பங்கேற்க அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.
- டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.
- உத்தர பிரதேச மாநிலத்தில் பனியால் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.
லக்னோ:
வடஇந்தியாவில் கடுங்குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம் போன்று காட்சியளிக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் தரைப்பகுதியில் படர்ந்துள்ளது.
டெல்லி மட்டுமின்றி ராஜஸ்தான், பஞ்சாப், அரியானாவிலும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது. பஞ்சாப்பின் அமிர்சரஸில் எதிரே உள்ளவர்களைப் பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
டெல்லியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்கள் காலதாமதமாகின. டெல்லி விமான நிலையத்திற்கு வந்து சேரும், புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஆக்ரா- லக்னோ எக்ஸ்பிரஸ்வே சாலையில் பல வானங்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கிதில் ஒருவர் பலியானார்.
இந்நிலையில், உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்க சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுக்கும்போது பின்னணியில் தெரியும் தாஜ்மகால் பனிமூட்டத்தால் மறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் அங்கு புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
- உ.பி.யின் அயோத்தி ரெயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு உள்ளது.
- ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக பல லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஜனவரி 22-ம் தேதி பிரமாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார். கும்பாபிஷேக நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து பல லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதற்கிடையே, அயோத்தி ரெயில் நிலையம் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரெயில் நிலையத்தில் ஷாப்பிங் மால்கள், காபி ஷாப்கள், புத்துணர்வூட்டும் வசதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன. பிளாட்பாரங்கள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

வெயிலால் பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் பிரத்யேக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற சிறப்பை பெறவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 30-ம் தேதி புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.
ரெயில் நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி சாலையின் வழியாக பேரணி செல்கிறார். விமான நிலையம் அருகே நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார் என அயோத்தி நகர ஆணையர் கவுரவ் தயாள் தெரிவித்தார்.
- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது.
- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது.
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோமபுரா என்பவர் தான் செய்து இருக்கிறார். அவருக்கு 80 வயது ஆகிறது. அவரது மகன்கள் நிகில் மற்றும் ஆசிஷ் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த் சோமபுரா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?
பதில்:- எங்களது சோமபுரா குடும்பம் பல ஆண்டுகளாக கோவில் கட்டும் பணியை செய்து வருகிறோம். நான் அதில் 15-வது தலைமுறை. எனது தந்தை தான் சோம்நாத் கோவிலை கட்டினார். பிர்லா மந்திர் கோவில்கள் எல்லாம் எங்களால் கட்டப்பட்டவை தான். எனவே தொழில் அதிபர் பிர்லா தான், அப்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்லால் சிங்காவிடம் என்னை பரிந்துரை செய்தார்.
கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வரைபடம் தயாரித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
பதில்:- ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும், அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989-ம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள். அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்து சென்றார்கள். அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதனால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில், பேப்பர் என எந்த பொருட்களையும் எடுத்து வர முடியவில்லை. இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன். ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பு எடுத்து வைத்து கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு 3 வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாக கொண்டு, மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின்போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.
கேள்வி:- பல நாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து இருக்கும் தென்னகத்து கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில்களுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை ஒப்பிட முடியுமா?
பதில்:- மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவிலுக்கு எல்லாம் நானும் வந்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் கோவில்கள் என்பது வெறும் கட்டிட கலை அல்ல. அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்றால் நமக்கு ஒரு அதிர்வலைகளை அது ஏற்படுத்த வேண்டும். மன நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை தர வேண்டும். இவற்றை மீனாட்சி அம்மன் கோவில்போல் அயோத்தி ராமர் கோவிலும் பக்தர்களுக்கு தரும் என்பதில் நீங்கள் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டாம். அதே நேரத்தில் அயோத்தி கோவில் கட்டுமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பழங்கால முறைப்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கோவில் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் பழங்கால முறைப்படியான கட்டுமானம் என்பது எது?
பதில்:- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது. இந்த கோவிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. கற்களின் ராஜாவான ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கற்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும். கோவில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு போன்று எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை. பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. இந்த கோவில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். அதனை தற்போது உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். நிலநடுக்கம், வெள்ளம்-மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிக வலுவாக கட்டப்பட்டு வருகிறது. பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவிலிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
கேள்வி:- சனாதன தர்மத்திற்கான கோவில் என்பதனை எப்படி புரிந்து கொள்வது?
பதில்:- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் அதனை கடைபிடிக்க வேண்டும். அது மதத்திற்கானது அல்ல, மனிதனுக்கு ஆனது என்ற பார்வையில் அதனை அணுக வேண்டும். அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெறும் ராமர் கோவில் மட்டுமின்றி இதர தெய்வங்கள் கோவிலும் கட்டப்பட உள்ளது.
கேள்வி:- இந்த கோவிலின் சிறப்பம்சமாக எதனை நீங்கள் சொல்வீர்கள்?
பதில்:- அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்டுவதே மாபெரும் சிறப்பானது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில், 58 ஆயிரம் சதுரடியில் 3 தளங்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. அதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், புதிய விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி அதற்கு முன்பு வருகிற 30-ந் தேதி, அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ரெயில் நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி 15 கி.மீ. தூரம் ரோடுஷோ நடத்தி ரெயில் நிலையத்துக்கு செல்கிறார். என்.எச்.27, தரம் பாதை, லதா மங்கேஷ்கர் சவுக், ராம் பாதை, டெதி பஜார், மொகாப்ரா சந்திப்பு வழியாக அவர் ரோடுஷோ நடத்துகிறார். ரோடுஷோ நிகழ்ச்சியையொட்டி பிரதமர் மோடியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வர உள்ளனர்.
- ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- முக்கிய தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் 1800 கோடி ரூபாய் செலவில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து, ஜனவரி 16-ந்தேதியில் இருந்து ஜனவரி 22-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் முக்கிய தலைவர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் இரு அவைகளின் கூட்டுத் தலைவருமான சோனியா காந்தி அழைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுக்க இருக்கிறது.
மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, டி ராஜா ஆகியோரும் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கும்பாபிஷேக விழாவில கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோவில கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்திய முக்கிய தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் வயது மூப்பு காரணத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களும் அதையும் ஏற்றுக்கொண்டதாக ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
ஆனால் விஷ்வ இந்து பரிசத், இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.
துறவிகள், விஞ்ஞானிகள், ராணுவ அதிகாரிகள், பத்ம விருது பெற்றவர்கள், தொழில் அதிபர்கள், தலாய் லாமா மற்றும் பல்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேகத்திற்கான வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து விடும்.
- ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. வேலைகள் அனைத்தும் ஜனவரி 15-ந்தேதிக்குள் முடிவடைந்து கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் முடிவடைந்து விடும். ஜனவரி 16-ந்தேதி கும்பாபிஷேகம் தொடங்கி ஜனவரி 22-ந்தேதி வரை நடைபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இருவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இருவரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குடும்பத்தின் மூத்தவர்கள். அவர்களின் வயதை கருத்தில் கொண்டு, அயோத்திக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இருவரும் அதை ஏற்றுக் கொண்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.






