search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வரலாற்று சிறப்புமிக்க நாளில் விடுமுறை இல்லையா- பொங்கிய நபர் என்ன செய்தார் தெரியுமா?
    X

    வரலாற்று சிறப்புமிக்க நாளில் விடுமுறை இல்லையா- பொங்கிய நபர் என்ன செய்தார் தெரியுமா?

    • அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன.
    • விடுமுறை தராத விரக்தியில் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்தது அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    லக்னோ:

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. கோவில் திறப்பு விழா மற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வானது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநில அரசுகள் பொது விடுமுறை அறிவித்தன. ஒரு சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வேலை நேரத்தில் சலுகைகள் அறிவித்தன.

    இந்நிலையில், ராமர் கோவில் திறப்பு விழா நாளன்று விடுமுறை தராததால் வேதனை அடைந்த ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    வேலை பார்த்த நிறுவனத்தின் பொது மேலாளர் விடுப்பு அளிக்க மறுத்ததால் வேலையை விட்டுவிட்டேன் என அந்த நபர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் பலர் அவருக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டனர்.

    Next Story
    ×