search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தர பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
    X

    உத்தர பிரதேசத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி

    • உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர்.
    • பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த பிரசாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜன.22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பாஜக-வினர் முடிவு செய்துள்ளனர். மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக, பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். இதற்காக கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. அதை விட கூடுதல் வெற்றி இனி வரும் தேர்தலில் பெற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்த பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என பாஜக தெரிவித்துள்ளது.

    Next Story
    ×