search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான்தான் அதிர்ஷ்டசாலி - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி
    X

    "நான்தான் அதிர்ஷ்டசாலி" - ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி

    • அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது.
    • கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த ராமர் சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.

    உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, பிரதமர் மோடி தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

    குழந்தை வடிவிலான ராமர் சிலையை மூன்று சிற்பிகள் வடிவமைத்திருந்த நிலையில், கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அருண் யோகிராஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது, "நான் இப்போது மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல உணர்கிறேன். இது எனக்கு மிகப் பெரிய நாள்" எனக் கூறினார்.

    Next Story
    ×