search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ram Lalla"

    • மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.
    • ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல்.

    நாட்டில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

    அந்த வகையில், 2024 குடியரசு தின அணிவகுப்பில் உத்தர பிரதேச மாநிலம் சார்பில் குழந்தை ராமர் சிலை கொண்ட அலங்கார ஊர்தி இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே அலங்கார ஊர்தியுடன் அம்மாநிலத்தில் நடைபெறும் மெட்ரோ பணிகளை எடுத்துரைக்கும் வகையில், மெட்ரோ ரெயில் பெட்டி ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

     


    இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில்- ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், அரியாணா, ஜார்க்கண்ட், லடாக், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகலயா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும் என தெரிகிறது. 

    • கடவுள் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
    • அயோத்தியில் அதிநவீன விமான நிலையம், ரெயில் நிலையம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

    மும்பை:

    அயோத்தியில் மிக பிரமாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா அடுத்த மாதம் 22-ம் தேதி மிக மிக கோலாகலமாக நடத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

    எதிர்காலத்தில் அயோத்திக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் அதை கருத்தில் கொண்டு அந்த நகரத்தின் உள் கட்டமைப்பை பிரதமர் மோடி மேம்படுத்தி வருகிறார். அதன் முதல் கட்டமாக அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமான விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதேபோல், அயோத்தி ரெயில் நிலையமும் சீரமைக்கப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே கூறுகையில், எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அங்கு செல்ல எனக்கு அழைப்பும் தேவையில்லை. கடவுள் ராமர் ஒரு கட்சியின் சொத்து அல்ல, அனைவருக்கும் சொந்தமானவர். இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டாம் என விரும்புகிறேன். இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது, அரசாங்கம் அல்ல என தெரிவித்தார்.

    ×