என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது.
    • விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் நீர்நிலைகளில் தண்ணீரின்றி வறண்டது.

    மேலும் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை பெய்வதாலும், அறுவடை தொடங்கி உள்ளதாலும் தண்ணீரின் தேவை குறைந்துள்ளது.

    இதனால் நேற்று 1333 கன அடியாக இருந்த நீர் திறப்பு 1300 கன அடியாக குறைக்கப்பட்டது. இன்று நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு தமிழக பகுதிக்கு 1267 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 260 கன அடிநீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 123.35 அடியாக உள்ளது. 3291 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    தமிழக பகுதிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி 117 மெகாவட்டாக குறைந்தது.

    வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 1181 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2828 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 112.56 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 15ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழைப்பொழிவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    • கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.
    • தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசை கண்டிக்கணும்

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம் கூறியிருப்பதாவது:-

    * மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்ததை மத்திய அரசையும், மாநில அரசையும் பாராட்டுகிறேன்.

    * கச்சத்தீவை மத்திய, மாநில அரசுகள் இணைந்து போராடி மீட்க வேண்டும்.

    * தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசை கண்டிக்கணும். மீனவர்களை சிறைபிடித்து ரூ.1 கோடி அபராதம் விதித்தார்கள்.

    * இலங்கையில் தற்போது பதவியேற்றுள்ள பிரதமர் நல்லவராக இருக்கிறார். இந்த நேரத்தில் இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார். 

    • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் மெரினா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண புறநகர் ரெயில்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக புறநகர் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    இதுவிர சென்னை மெட்ரோ ரெயில்களிலும் ஏராளமானோர் விமான சாகச நிகழ்ச்சியை காண செல்கின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் வழக்கத்திற்கு மாறாக கால தாமதமாக இயங்குகின்றன.

    முன்னதாக, வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது. இதேபோல் கூடுதல் சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர், 1500 ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் மெரினா நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

    இதன் காரணமாக மெரினாவை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் இருந்து திரளானவர்கள் மெரினாவில் குவிந்துள்ள நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை காண நேரில் செல்ல முடியாதவர்கள் அவரவர் இருந்த இடத்தில் நேரலையில், விமான சாகச நிகழ்சிசைய காண ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி மக்கள் இந்திய வான்படையின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் விமான சாகச நிகழ்ச்சியை நேரலையில் கண்டுகளிக்க முடியும். இதுதவிர தூர்தர்ஷன் நேஷனல் மற்றும் தூர்தர்ஷன் தமிழ் தொலைகாட்சிகளிலும் நேரலை செய்யப்படுகிறது.

    மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதுதவிர சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் வருகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர், 1500 ஊர்காவல் படையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

    சேலம்:

    கர்நாடக, தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நேற்று காலை முதல் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    நேற்று மாலை வினாடிக்கு 8 ஆயிரத்து 268 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 12 ஆயிரத்து 713 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 92.60 அடியாக உள்ளது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் தற்போது 55.67 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    • பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி.
    • சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாகவும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் மாலை 4 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் திடீரென பலத்த மழையாக கொட்டியது.

    தொடர்ந்து இடி-மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் கூட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஏற்காடு நகரம், நாகலூர், செம்மனத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, வாழவந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் கடுங்குளிரும் நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

    இதே போல் சேலம் மாநகர பகுதியில் இரவு 9 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.

    மேலும் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு சாலையில் மண், கற்கள் குவியலாக காட்சி அளிக்கிறது.


    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 10 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாள் இரவில் இவ்வளவு மழை பெய்ததால் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.

    பொதுமக்கள் விடிய, விடிய, வீட்டில் புகுந்த மழை தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதே போல் பிரபாத் சிக்னல் பகுதியிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் தண்ணீரை அகற்றினர்.

    புதிய பஸ் நிலையத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்ததால் தண்ணீர் இருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதே போல் வெண்ணங்கொடி முனிப்பன் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழையின் காரணமாக குளிரும் நிலவியது.

    மேட்டூர் மற்றும் நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது.


    இதன் காரணமாக கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதே போல் ஆத்தூர், கெங்கவல்லி, டேனிஷ் பேட்டை, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    சேலம் மாநகரம் - 108.5, ஏற்காடு - 63.3, வாழப்பாடி - 4, ஆனைமடுவு - 80, ஆத்தூர் - 43, கெங்கவல்லி - 5, தம்மம்பட்டி - 18, ஏத்தாப்பூர் - 19, கரியக்கோவில் - 30, வீரகனூர் - 24, சங்ககிரி - 7, எடப்பாடி - 6, மேட்டூர் - 7.2, ஓமலூர் - 14, டேனீஷ்பேட்டை - 47, என மொத்தம் மாவட்டம் முழுவதும் ஒரே நாள் இரவில் 478 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் இரவு 9 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. ராசிபுரத்தில் இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. அதிக பட்சமாக ராசிபுரத்தில் 12 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் மங்களபுரம், குமார

    பாளையம், கொல்லிமலை ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராசிபுரம் - 122, மங்களபுரம் - 50.20, எருமப்பட்டி - 40, புதுசத்திரம் - 26, நாமக்கல் - 21, கலெக்டர் அலுவலகம் - 19, குமாரபாளையம் - 9.60, சேந்தமங்கலம் - 9, கொல்லிமலை - 6 என மாவட்டம் முழுவதும் 331.80 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    • மாநாடு வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
    • கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி நடக்கிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெறுகிறது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.இதற்கான கொடி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.

    நேற்று முன்தினம் மாநாட்டிற்கு பந்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தினை சமன்படுத்தி அப்பகுதியில் உள்ள 6 கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணியும், மேடை அமைக்க அடித்தள பைப்புகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    மாநாடு பந்தல் அமைக்க இரும்பு பைப்புகள் ஏற்றிவந்த லாரி ,மாநாடு திடலில் சேற்றி சிக்கி நின்றது.பின்னர் லாரியை கிரேன் கொண்டு அப்புறப்படுத்தினர்.

    மாநாட்டிற்கு வருகின்ற தொண்டர்களுக்கு உணவு,குடிநீர் தடையின்றி கிடைக்கும் வகையில் தனியார் கம்பெனியிடம் ஒப்படைக்க பட்டுள்ளது .ஆண்கள் பெண்களுக்கு 250 கழிவறை வசதி,வாகனங்கள் நிறுத்த சாலையின் இரு புறங்களிலும்45 ஏக்கர் அளவில் இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மாநாடு மேடை அமைக்கும் பணி பிரத்யேகமாக சினிமா கலை அரங்க இயக்குனர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மேடை அமைக்கும் பணியை கலைஞர்கள் ஆய்வு செய்துள்ளனர் . மாநாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் உள்ள கிணறுகளுக்கு இரும்பு தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

    • குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக வழக்கு.
    • 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    சென்னை:

    மதுரவாயல், வி.ஜி.பி. அமுதா நகர் கூவம் கரையோரம் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 2019-ம் ஆண்டு முதல் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    அங்கு சென்னை மாநகராட்சி 144-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஏ.ஸ்டாலின், தனது ஆதரவாளர்களை வைத்து, இந்த இடத்தில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என நேரிலும், தொலைபேசியிலும் குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி மற்றும் உதவி பொறியாளர் கலைச் செல்வி ஆகியோர் கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த கோயம்பேடு போலீசார் தி.மு.க. கவுன்சிலர் ஸ்டாலின் உள்பட 3 பேர் மீது அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கவுன்சிலர் ஸ்டாலினை தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்குப்பகுதி, 144-வது வட்டச்செயலாளரான சென்னை மாநகராட்சி உறுப்பினர் ஏ.ஸ்டாலின் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். 

    • மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன.
    • திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.

    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சென்னையில் 250 இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் மானிய விலையில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கான அனுமதி வழங்கும் அரசாணை விரைவில் வெளியாகிறது.

    தமிழக சட்டசபையில் சமூகநலத்துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் கீதா ஜீவன், 'சென்னை மாநகரத்தில் ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் பெண்களால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட போலீஸ் துறை மூலம் கண்காணிக்கப்படும் வகையில் 'இளஞ்சிவப்பு' ஆட்டோ நடைமுறைப்படுத்தப்படும்.

    வாகனம் ஓட்டும் உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு ஆட்டோ மொத்த விலையில் ரூ.1 லட்சம் அரசால் மானியமாக வழங்கப்படும். கடன் உதவியாக தேசியமயமாக்கப்பட்ட அல்லது இதர வங்கிகளுடன் இணைக்கப்படுவார்கள்' என்று அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில் அதற்கான பணிகளை சமூக நலத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த திட்டத்தில் பெண்களை, குறிப்பாக கணவனை இழந்த பெண்களை இணைத்து அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஒப்புதல் கோரி தமிழக அரசுக்கு சமூக நலத்துறை சார்பில் கருத்துரு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் 200 பெண் பயனாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கையை 250 ஆக உயர்த்தவும் சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

    இந்த இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ திட்ட பயனாளிகளை, 'கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்' மூலம் தேர்வு செய்ய சமூக நலத்துறை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    எப்போது வேண்டுமென்றாலும் இதற்கான நிதி ஒப்புதல் வழங்கி தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியாக வாய்ப்பு உள்ளது. அரசாணை வெளியிடப்பட்டவுடன், மானிய விலையிலான 'இளஞ்சிவப்பு' ஆட்டோ பெறும் பயனாளிகள் தேர்வு தொடங்கும் என சமூகநலத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

    முதல்கட்டமாக தலைநகர் சென்னையில் 250 பெண்களுக்கு 'இளஞ்சிவப்பு' ஆட்டோ வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்க சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது.

    சென்னையில் வெற்றிகரமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, படிப்படியாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில், பெண்களுக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை விரிவுப்படுத்தப்படும் என்று சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் மின்சார தேவை, மின் வினியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை.
    • மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, நேற்று ஆய்வு மேற்கொண்டார். மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பாக பொதுமக்களின் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மின் தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர், மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், தமிழ்நாடு பசுமை எரிசக்தி மேலாண்மை இயக்குனர் அனீஷ்சேகர், இணை மேலாண்மை இயக்குனர் விஷூ மகாஜன் உள்பட பலர் இருந்தனர்.

    இதற்கிடையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்னகம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 28 லட்சத்து 69 ஆயிரத்து 876 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 28 லட்சத்து 64 ஆயிரத்து 215 புகார்கள் (99.80 சதவீதம்) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மின்சார தேவை, மின் வினியோகத்தில் எந்தவித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

    எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எடுத்துள்ளது. மின் வினியோகம் சார்ந்த குறைபாடுகளை சரி செய்ய 9498794987 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
    • கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள்.

    சென்னை:

    ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 8, 9 தேதிகளில் சென்னை சென்டிரல் நிலையத்தில் இருந்து நாகர்கோவில், தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * கோவையிலிருந்து இன்று (6-ந்தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06171), மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ந்தேதி) காலை 10.30 மணிக்கு புறப்பட்டு கோவை வழியாக போடனூர் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06172), அதேநாள் மாலை 6 மணிக்கு போடனூர் சென்றடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வரும் 9-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரெயில் (06178), மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து வரும் 10-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06179), மறுநாள் காலை 11.25 மணிக்கு வந்தடையும்.

    * சென்னை சென்டிரலில் இருந்து வரும் 8-ந்தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரெயில் (06186), மறுநாள் மதியம் 1.50 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.

    மறுமார்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து வரும் 9-ந்தேதி மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் சிறப்பு ரெயில் (06187), மறுநாள் காலை 8.55 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    * திருச்சியில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06190), அதேநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து வரும் 11-ந்தேதி முதல் 31-ந்தேி வரையில் (திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை தவிர்த்து) வாரத்தின் 5 நாட்கள் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), அதேநாள் இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விமானப்படை சாகச நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, விமானப் படையினரின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

    இதுதவிர சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். விமான சாகச நிகழ்ச்சியைக் காண சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் வருகையை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், வழக்கத்தை விட கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்து இருக்கிறது. விமானப்படை சாகச நிகழ்ச்சியை ஓட்டி 6 ஆயிரத்து 500 காவல் துறையினர் உள்பட மொத்தம் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    ×