என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார்.
    • காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.

    புதுச்சேரி:

    மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் காசியில் நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், புதுவை கவர்னர் தமிழிசைக்கு அழைப்பு விடுத்தார்.

    இதையேற்று காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கவர்னர் தமிழிசை இன்று வாரணாசி புறப்பட்டார். நாளை 25-ந் தேதி வாரணாசியில் தங்கி அங்கு நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிக்கிறார்.

    • அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார்.
    • விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை முதலமைச்சர் ரங்கசாமி முருக பக்தர். அவர் அடிக்கடி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம்.

    அமாவாசையையொட்டி திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டு விருந்தினர் தங்குமிடத்திற்கு வந்தார். மேல் சட்டையின்றி துண்டு மட்டும் அணிந்து இருந்த நிலையில் விடுதிக்கு வெளியே துப்பாக்கி ஏந்தி நின்றிருந்த தமிழக போலீசார் முதலமைச்சர் ரங்கசாமிக்கு துப்பாக்கியுடன் மரியாதை செலுத்தினர்.

    இதை ஏற்கும் வகையில் அவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் வணக்கம் செலுத்தினார். மேல் சட்டையின்றி துண்டு-வேட்டியுடன் முதல்வர் போலீஸ் மரியாதை ஏற்ற வீடியோ எளிமையான போலீஸ் மரியாதை என குறிப்பிட்டு வைரலாகி வருகிறது.

    • சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
    • எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார்பேட்டை பிரபல தாதா கருணா. ஆயுள் தண்டனை கைதியாக உள்ள இவரது தம்பி பாஸ்கர் (வயது 48) ரவுடி. இவர் ஒரு கொலை வழக்கில் கடந்த 2009-ம் ஆண்டு கைதாகி தண்டனை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். பாஸ்கர் மனைவி எழிலரசி. இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானார். அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதுகுறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து எழிலரசியை தேடி வந்தனர். ஆனால் அவரை பற்றி கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

    இந்த நிலையில் முதலியார் பேட்டை உழந்தை ஏரியில் எலும்பு கூட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவர் வீசி சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த எலும்பு கூட்டை வீசியது ரவுடி பாஸ்கர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    சிறையில் இருந்த பாஸ்கருக்கு தனது மனைவி எழிலரசியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 2013-ம் ஆண்டு பாஸ்கர் பரோலில் வெளியே வந்தார். அப்போது மனைவி எழிலரசி கிருமாம்பாக்கத்தில் உள்ள அவரது தங்கை வீட்டில் இருந்தார். அங்கு தனது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகியோருடன் பாஸ்கர் சென்றார்.

    பின்னர் மனைவி எழிலரசியை காரில் ஏற்றி வந்துள்ளார். அதன்பிறகு காரிலேயே சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் உழந்தை ஏரி அருகே ஏற்கனவே தயாராக தோண்டி வைத்துள்ள குழியில் எழிலரசி உடலை புதைத்துள்ளார். உடல் சீக்கிரம் மக்குவதற்காக யூரியா உரம் தெளித்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக உழந்தை ஏரியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இதை அறிந்த பாஸ்கர் பள்ளம் தோண்டினால் எலும்பு கூடு கிடைத்து சிக்கிக்கொள்வோம் என பீதி அடைந்தார்.

    இதனால் எழிலரசியின் உடலை புதைத்த இடத்துக்கு சென்று எலும்பு கூட்டை தோண்டி எடுத்து உழந்தை ஏரியில் வீசியுள்ளார். ஆனால் எலும்பு கூட்டின் ஒரு சில பகுதிகளை மட்டும் அவசரத்தில் எடுத்து தூக்கி வீசியுள்ளார். மீதி உள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அப்புறப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் போலீசாரின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து பாஸ்கர் அவரது கூட்டாளிகளான ரவுடிகள் மனோகர், சரவணன் என்ற கருப்பு சரவணன், வேல் முருகன் என்ற தடிவேலு ஆகிய 4 பேரையும் முதலியார் பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

    மேலும் எழிலரசி புதைத்த இடத்தில் மீதமுள்ள எலும்பு கூட்டை தேடிவருகின்றனர். புதுவையில் 9 ஆண்டுகளுக்கு முன் பரோலில் வந்து மனைவியை கொன்று புதைத்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதும், இது தொடர்பாக ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காரைக்கால்:

    கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து, பெங்களூருவில் குக்கர் வெடிவிபத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அம்மாநிலத்தில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியவர்கள், அண்டை மாநிலமான தமிழகம், புதுச்சேரியில் அடைக்கலமாகலாம் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள காரைக்கால் மாவட்ட எல்லைகளில், சாலைகளில், காரைக்கால் திரு.பட்டினம் போலீசார், போலீஸ் சூப்பிரண்ட் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல், காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவிச்செல்வன், நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், லாட்ஜ்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், பான்மசாலா, போதை சிகரெட் உள்ளிட்ட ரூ.7 ஆயிரம் மதிப்பிலான 70 பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர் பகுதியான பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பொருட்களை விற்கப்ப டுவதாக, காரைக்கால் நகர காவல்நிலையத்திற்கு ரகசியத்தகவல் வந்தது.

    அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, குறிப்பிட்ட பெட்டி க்கடையில் சோதனை செய்தனர். , பெட்டிக்க டையின் உள்ளே இருந்த கம்யூட்டர் யு.பிஎஸ் பெட்டி உள்ளே, அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், பான்மசாலா, போதை சிகரெட் உள்ளிட்ட ரூ.7 ஆயிரம் மதிப்பிலான 70 பாக்கெட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். . தொடர்ந்து, அக்டையை நடத்திய, காரைக்கோவில்பத்து அக்ரஹாரத்தைச்சேர்ந்த ராஜ்குமார்(வயது30) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    • 3 மர்ம நபர்கள், வீட்டு அலமாரியை திறந்து, பொருட்களை திருடிகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
    • 2 பேர் மீதும் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் சிங்காரவேலர் சாலை ஏ.எச்.எம் காம்ப்ளக்கில் வசிப்பவர் ஆரிபு மரைக்காயர். இவர், தனது வீட்டு அருகில் உள்ள பசும்பொன் நகரில் வசிக்கும் தங்கை சித்திபர்வீன் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்று, மாடியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கீழ் பகுதியில், ஏதோ சப்தம் கேட்டு, வீட்டின் கீழ் பகுதிக்கு சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள், வீட்டு அலமாரியை திறந்து, பொருட்களை திருடிகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆள் வருவதை பார்த்த 3 பேரும் வீட்டிலிருந்து தப்பியோடினர். அதில், உறவினர்கள் உதவியுடன் ஒரு நபர் மட்டும் கையும் களவுமாக பிடிபட்டான். பின்னர், அவரை, காரைக்கால் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பிடிப்பட்ட நபரை பிடித்து விசாரித்தபோது, கேரளா மாநிலம் எர்ணாகுளம் மல்லுடுத்தி பகுதியை ச்சேர்ந்த சவுகத்(வயது23) என்றும், இவர் மீது பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதென்று தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரித்தபோது, காரைக்கால் நகர் பகுதியை ச்சேர்ந்த நவாஸ்கான்(39), காரை க்கால் நிரவியை ச்சேர்ந்த அப்துல் அலீம்(40) என்றும், 2 பேர் மீதும் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளது தெரிவந்தது. பின்னர், காரைக்கால் கலங்கரை விளக்கம் அருகே பதுங்கி இருந்த 2 பேரையும் நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து, திபர்வீன் வீட்டில் திருடிய 2 செல்போன் ரூ.2 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார்.
    • மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கீழகாசாக்குடி பகுதியில் வசித்து வருபவர் முத்துசின்னசாமி(வயது75). இவர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். காரைக்காலில் உள்ள தனது வீட்டில், மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவிக்கு உடல் நிலை சரி இல்லாத காரணத்தால், மனைவியை அழைத்து கொண்டு வெளியூர் மருத்துவமனை சென்றார். மருத்துவமனையில் மனைவிக்கான சிகிச்சை முடிந்தநிலையில், வீடு திரும்பிய முத்துசின்னசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    பின்னர், முத்துசின்னசாமி கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மோப்ப நாய் அர்ஜுனை வரவழைத்து ஓடவிட்டனர். நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களை வரழைத்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, வீடு, தெரு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவுஹால் ரமேஷ் மேற்பார்வையில், மர்ம நபர் குறித்து, தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது.
    • வழக்கு பதிந்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடிவந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே மேலகா சாக்குடி கிரா மத்தில், புதுச்சேரி இந்து அறநிலை த்துறைக்கு சொந்த மான நாகநா தசுவாமி தேவஸ்தானத்தைச்சேர்ந்த வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான இந்த பெருமாள் கோவிலில், கடந்த 1963-ம் ஆண்டு நடைபெற்ற திருட்டின் போது, விலை உயர்ந்த நரசிம்மர், பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகிய 2 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து, கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து திருடப்பட்ட சிலைகளை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில், திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள 2 சிலைகளையும் மீட்டுதருமாறு, கோவில் நிர்வாகத்தினர், புதுச்சேரி இந்து அறநிலைத்துறை மற்றும் காவல்துறை தலைமை யகத்திற்கு புகார் அளித்தனர். தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி, காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் லெனி ன்பாரதி, செந்தில்குமார், பிரவீன்குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம், சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை, இந்து அறநிலை யத்துறைக்கும், காவல்துறை தலைமை யகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மண்ணிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ராயல்டி தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
    • ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் ராஜகோ பால்ராஜா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் சுப்புராஜ், உலகநாதன், சந்தனசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில், நீர் நிலைகளிலிருந்து எடுத்த மண்ணிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ராயல்டி தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழியர்களின் ஊதிய த்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி உடனே வழங்கவேண்டும்.

    பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசு துறைகளில் வழங்கப்படுவது போல் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமியின் சட்டமன்ற வாக்கு றுதிபடி, உடனே கமிட்டி அமைக்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசா ணைப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதிவு உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. முடிவில் பொருளாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.

    • 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர்.
    • வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோ ட்டையைச்சேர்ந்தவர் மீனாட்சி(வயது35) இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு சில மாதங்களில் கணவன் விட்டு விலகிச் சென்றதால், சட்டரீதியாக விவாகரத்து பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து மீனாட்சியின் தாயார், மீனாட்சிக்கு 2-வது திருமணம் செய்து வைப்பதற்காக வரன் தேடினார். இதனை அறிந்த காரைக்காலை சேர்ந்த மரிய லூர்து ராஜ் என்பவர், தான் திருமணமாகாத நபர் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிஉள்ளார்.

    அதன்பின்னர் மரிய லூர்து ராஜ், மீனாட்சியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்ததார். சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக, தஞ்சையில் கணவன் மனைவி போல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துவந்தனர். அப்போது மீனாட்சி மரியலூர்துராஜிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய போதெல்லாம், ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்ததால், மீனாட்சி காரைக்காலில் விசாரித்தார்.

    அப்போது மரிய லூர்து ராஜ்க்கு ஏற்கனவே திருமணம் ஆன விபரம் தெரிய வந்துள்ளது. உடனே ஏமாற்றப்பட்டதை அறிந்த மீனாட்சி, காரைக்கால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய லூர்து ராஜ், புகாரை வாபஸ் வாங்கினால், திருமணம் செய்து கொள்வதாக கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து புகாரை மீனாட்சி வாபஸ் வாங்கியுள்ளார். மீண்டும் மீனாட்சி திருமணம் பேச்சை எடுத்தபோது, திருமணம் என்ற பேச்சை எடுத்தாலோ, காவல்நிலையத்தில் புகார் கொடுத்தாலோ, கொலை செய்து விடுவதாக, மரியலூர்துராஜ் வாட்ஸ் அப் வீடியோ காலில் துப்பாக்கி காட்டி மிரட்டினார்.

    அதனை தொடர்ந்து, காரைக்கால் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளிக்க சென்றார். ஆனால் புகாரை வாங்க அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தாமதப்படுத்தியதால், காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மீனாட்சி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அந்தப்பெண்ணை சமரசம் செய்த போலீசார், மீனாட்சியின் புகாரை பெற்றனர். புகாரில், மீனாட்சி, மரிலூர்துராஜ் பழகிய புகைப்படம், வீடியோ, வாட்ஸ் அப் கால் பதிவுகள், துப்பாக்கி காட்டி மிரட்டும் படம் போன்றவற்றை ஒப்படைத்துள்ளார்.

    • மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

    ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி.
    • வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதி. இது தொடர்பான புதுவை மக்களின் உணர்வை பாட்டாளி மக்கள் கட்சி அறவழிப் போராட்டத்தின் மூலம் அரசுக்கு உணர்த்தியிருக்கிறது.

    புதுவை மக்களின் உணர்வுகளை அம்மாநில அரசு உணர வேண்டும்; மதிக்க வேண்டும். புதுவையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து நிலைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தான் முழுமையான சமூகநீதி. வாக்களித்த மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.

    பா.ம.க.வின் சமூக நீதிக்கான போராட்டம் தொடக்கமாக இருக்க வேண்டுமா.... நிறைவாக இருக்க வேண்டுமா? என்பதை புதுவை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து நிலைகளிலும் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய அரசு தவறினால் நானே களமிறங்கி போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×