என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
    • கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி குப்புசெட்டி ச்சாவடி தெருவை சேர்ந்த வர் முருகேசன். கூலி வேலை செய்துவரும் இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் வாணிஸ்ரீக்கு கும்பகோணத்தில் திருமண ஆகி, விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இதனால், வாணிஸ்ரீ, தாய் வீட்டுக்கு வந்துள்ளார். தாய் வீட்டு பீரோவில், தனது தாலி செயின், நெக்லஸ், தங்ககாசு உள்ளிட்ட சுமார் 6.50 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். சம்பவத்தன்று , சீதாலட்சுமி வீட்டை பூட்டி சாவியை தனது கணவர்வசம் ஒப்படைத்துவிட்டு, காரைக்கால் அருகே அம்பகரத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்து, கணவரிடம், சாவியை வாங்கி வீட்டை திறந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6.50 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் திருட்டு போய் இருப்பததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கணவரிடம் விசாரித்தபோது, அவரும் கடந்த 3 தினங்களாக வீட்டுக்கு வரவில்லை. இது குறித்து, சீதாலட்சுமி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தங்க நகைகளை திருடிசென்ற மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • காரைக்காலில் வீட்டில் மின்சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வீரபிரபுவை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவைச்சேர்ந்தவர் புவனேந்திரன். இவர், காரைக்கால் எஸ்.எஸ்.கார்டன் ஏவி.நகரில் புதிய வீடு கட்டும் சிவில் காண்டிராக்டர் எடிசன் என்பவரிடம் கட்டிட ஆசாரி மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். தினசரி வேலை முடிந்தவுடன், ஆசாரி வேலை தொடர்பான எலெக்டிரிக்கல்ஸ் பொருட்களை, கட்டிடத்தின் உள்ளேயே வைத்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கட்டர், கிரைண்டிங் மிஷன் உள்ளிட்ட எலெக்டி ரிக்கல்ஸ் பொருட்களை வைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது, அவை அனைத்தும் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர், எடிசனிடம் இதைபற்றி கூறினார். அவர் அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, காரைக்கால் அம்முகுட்டி சந்தில் வசிக்கும் வீரபிரபு(வயது33) என்பவர் மோட்டார் சைக்களில் வந்து மேற்கண்ட வீட்டில் எலெக்ட்ரிக்கல்ஸ் பொருட்களை திருடி ச்செல்வது தெரியவந்தது. தொடர்ந்து, இது குறித்து, புவனேந்திரன் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவுச் செய்து, வீரபிரபுவை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.

    • யானை லட்சுமி காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்
    • யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி இன்று மரணம் அடைந்தது. இன்று காலை 6.15 மணியளவில் வழக்கமான நடைபயிற்சிக்கு யானையை பாகன் அழைத்துச்சென்றார். கல்வே பள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது. இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது. அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர் யானை லட்சுமியின் உடல், கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின் யானை லட்சுமியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், லட்சுமி நாராயணன் மற்றும் எம்எல்ஏக்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கிற்கு பிறகு யானையின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு, பின்பு அடக்கம் செய்யப்பட்டது.



    இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது. 5 வயதாக இருந்தபோது, 1996ல் தொழிலதிபர் ஒருவர் கோவிலுக்கு யானையை பரிசாக அளித்தார். வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். இந்த யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது. இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பாக பழகிவந்தது. காலில் வெள்ளி கொலுசுடன் கோவில் வாயிலில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம். யானையைப் பார்க்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் வருவார்கள். யானை லட்சுமியின் மறைவு பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டியன் பால், சப்.இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், திருநள்ளாறு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக வெளி மாநில பதிவு எண் கொண்ட கிரேன் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. உடனே அதை நிறுத்தி டிரைவரிடம் வாகன ஆவணங்களை கேட்டபோது, அவர் மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில், மத்திய பிரதேசம், கந்த்வாணி மாவட்டம், ஜூவான் வெல் பெக்ல்யா மகன் ரமேஷ் முஜ்ஹஸ்டா சிங் (வயது39) என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று, மது போதையில் இருப்புதை உறுதி செய்து சான்றிதழ் பெற்றனர். பின்னர், அவரை, காரைக்கால் கேர்ட்டில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நீதிபதி லிசி, மது போதையில் கிரேன் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    • யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. மணக்குள விநாயகரை நாட்டின் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசிக்க வருவார்கள். இந்த கோவிலுக்கு 1996ல் தொழிலதிபர் ஒருவர் யானையை பரிசாக அளித்தார். 5 வயதான பெண் யானைக்கு லட்சுமி என பெயர் சூட்டப்பட்டது. வழக்கமாக ஆண் யானைக்கு தான் தந்தம் இருக்கும். ஆனால் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு ஆண் யானைபோல் தந்தம் இருந்தது.

    இந்த யானை கோவிலுக்கு வருகிற பக்தர்களிடம் அன்பை பெற்றது. கோவில் வாசலில் நிற்கும் யானை லட்சுமியுடன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு பிறகு போட்டோ எடுத்துக்கொள்வது, ஆசி பெறுவதும் வழக்கம். யானை லட்சுமிக்கு ஈஸ்வரன் கோவிலுக்கு பின்புறம் கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்குதான் இரவில் யானை லட்சுமி ஓய்வெடுக்கும். வழக்கம்போல் நேற்று இரவும் யானை லட்சுமி கொட்டிலில் ஓய்வெடுத்தது.

    இன்று காலை 6.15 மணியளவில் நடைபயிற்சிக்கு பாகன் அழைத்துச்சென்றார். கல்வேபள்ளி அருகே வந்தபோது திடீரென யானை லட்சுமி மயங்கி சரிந்தது.

    இதையடுத்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அப்போது யானை லட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் இறந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். யானை இறந்த தகவல் பொதுமக்களிடம் பரவ தொடங்கியது.

    அந்த சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அங்கேயே யானைக்கு மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். பக்தர்கள் பலரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

    பின்னர் யானை லட்சுமி பொதுமக்கள் அஞ்சலிக்காக மணக்குள விநாயகர் கோவில் முன்பு வைக்கப்பட்டது. அங்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கால்நடைத்துறை டாக்டர்கள் வந்து யானை லட்சுமியை உடற்கூராய் செய்கிறார்கள். அதன்பின்னர் யானை லட்சுமி குருசு குப்பத்தில் உள்ள அக்கா சாமி மடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்த யானை லட்சுமிக்கு 31 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, புதுச்சேரியில் உயிரிழந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிழை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"யானை லட்சுமியின் இழப்பு ஒவ்வொரு வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு போன்றது. தங்கத்தேர் கோவிலில் வரும் போது தேர் போல வழிநடத்தி செல்வார் யானை லட்சுமி. யானை லட்சுமியின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

    • கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    • திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது.

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.

    லட்சுமி யானை நாள்தோறும் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. தொடர்ந்து பக்தர்களிடம் அமோக வரவேற்பை யானை லட்சுமி பெற்றுள்ளது. புத்துணர்ச்சி முகாமுக்கு செல்லும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு யானை லட்சுமி தொடர்ச்சியாக ஆசி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் யானை லட்சுமி இன்று காலை வழக்கம் போல் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் நடைபயிற்சிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.

    அப்போது திடீரென மயங்கி விழுந்த லட்சுமி, சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
    • தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச்சேரி கீழகாசா குடியைச்சேர்ந்தவர் ஜேம்ஸ்மேரி (வயது60). இவரது மகன் இருதயராஜ். இருதயராஜ் பந்தல்வேலை செய்துவருகிறார். கடந்த 26ந் தேதி ஜேம்ஸ்மேரி வசிக்கும் பகுதியில், செந்தில்கு மார் என்பவர் தனது மனைவி யுடன் சண்டை போட்டு க்கொண்டி ருந்தபோது, ஊர்க்கா ரர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். அந்த இடத்தில், ஜேம்ஸ்மேரியும் இருந்தார். கடந்த 27-ந் தேதி செந்தில்குமார் ஜேம்ஸ் மேரி வீட்டு வாசலுக்கு சென்று, எங்கள் குடும்ப பிரச்சனையில் ஏன் தலையிடுகிறீர்கள் என கேட்டு, கையில் வைத்திருந்த கட்டையால் ஜேம்ஸ்மேரியை தாக்கினார்.

    இதனை தடுக்கவந்த மகன் இருதயராஜையும் செந்தில்குமார் கட்டை மற்றும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த 2 பேரும் கோட்டுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி பெற்று, தொடர் சிகிசைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஜேம்ஸ்மேரி கொடுத்த புகாரின் பேரில், கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
    • ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு அத்திபடுகை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). இவர், காரைக்கால் பொதுப்ப ணித்துறையில், என்.எம்.ஆர். ஆக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு வேதிகா (5) ஹர்சிதா (1) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் நடராஜனின் மனைவி மீனா, தினசரி மது அருந்திவிட்டு வந்தால், எப்படி குடும்பம் நடத்துவது? இப்படியே நீ செய்தால் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்வேன் என கண்டி த்துள்ளார்.

    சம்ப வத்தன்று பகல் வழக்கம் போல், நடராஜன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி மீனா நடராஜனை கண்டி த்துள்ளார். அதை கண்டு கொள்ளாத நடராஜன் சாப்பி ட்டுவிட்டு உறங்கிவிட்டார்.மா லையில் நடரா ஜனுக்கு, மீனா டீ போட்டு கொடுத்து ள்ளார். அதை குடிக்க மறுத்து வெளியில் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறை உள் பக்கமாக தழ்பாழ்போ ட்டு இருந்தது. நடராஜன் கதவை தட்டினார் ஆனால் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நடராஜன் சப்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்த்தினர் ஓடிவந்தனர்.

    அவர்கள் உதவியுடன், மீனாவை மீட்டு திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்கர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, நடராஜன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார்.
    • முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதார்கொல்லை ஏரியில் மிதந்த, முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதா ர்கொல்லை முத்தாம் பள்ளம் பேட்டை ச்சேர்ந்தவர் நாரா யணசாமி (வயது70). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாராயணசாமி மனைவியுன் வசித்து வந்தார்.

    இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் நாராயணசாமி வீட்டுக்கு வராததால், உறவினர்கள் ஏரி மற்றும் அதன் சுற்று பகுதியில் தேடினர். நாராயணசாமி கிடைக்கவில்லை.

    இந்நிலையில், நாராயண சாமி ஏரியில் பிணமாக மிதப்ப தாக திரு.பட்டினம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார், நாராயணசாமி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்க்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 350 விசைப்படகுகளை கரையோற த்தில் நிறுத்தி வைப்பது வழக்கம்.
    • 3 விசைப்படகுகள் மூலம் சேதமடைந்த படகை மீட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் காரைக்கால்மேடு, கிளி ஞ்சல்மேடு, மண்டபத்தூர், கோட்டு ச்சேரிமேடு, கீழகாசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 350 விசைப்படகுகளை கரையோற த்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். துறைமுகத்தில் போதுமான இட வசதி இல்லாத காரணத்தால், சிலர் தங்கள் படகுகளை, அருகில் உள்ள அரசலாற்றில் பாதுகாப்பாக கட்டி வைத்திருந்தனர். 

    இதே போல் கீழகாசாக்குடி மேடு கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவருக்கு சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான விசைப்படகு துறை முகத்தை ஒட்டிய அரசலாற்றில் கட்டிவை த்திருந்தார். அமாவா சை யையொட்டி, கடல் சீற்றத்துடன் காண ப்பட்டதால், கடல் நீர் ஆறு வழியாக வேகமாக பாய்ந்ததால், ஆற்றில் கட்டிவைத்திருந்த விசைப்படகு, நீரில் சுமார் 500 மீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு, துறைமுகம் முகத்துவார பாராங்கல்லில் மோதி, கடற்கரையில் சேதமாகி தரை தட்டி நின்றது. விபரம் அறிந்த மீனவர்கள் 3 விசைப்படகுகள் மூலம் சேதமடைந்த படகை மீட்டனர்.

    • சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிதம்பரம், கடலூர், காரைக்கால் வியாபாரிகள் நாளொன்றுக்கு 2 ஆயிரம் அகல்விளக்குகளுக்கு ஆர்டர் தருகின்றனர்.
    • புதுவையில் மண் எடுக்க கட்டுப்பாடு உள்ளது. அதை தளர்த்தி தந்தால் உதவியாக இருக்கும்.

    புதுச்சேரி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 2668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும்.

    இதனையடுத்து புதுவை உட்பட தமிழகம் முழுவதும் பெண்கள் தங்கள் வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி வீட்டு வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம்.

    வீடுகளில் ஏற்றப்படும் கார்த்திகை திருவிழாவுக்கான அகல்விளக்கும் தயாரிக்கும் பணி புதுவையில் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

    கார்த்திகைக்காக அகல் விளக்குகள் இந்த முறை பல மாடல்களில் தயாராகின்றன. குறிப்பாக ஒத்தவிளக்கு, ஸ்டார் விளக்கு, லட்சுமி விளக்கு, யானை விளக்கு, மூன்றுமுகம் லட்சுமி விநாயகர் விளக்கு, 5 முகம் லட்சுமி விநாயகர் விளக்கு, குத்துவிளக்கு, சுத்துவிளக்கு என மும்முரமாக விளக்குகளை தயாரிக்கின்றனர்.

    கடந்த காலத்தில் ஒத்த விளக்கு டெரகோட்டா, கோல்டு கலரில் மட்டும் கிடைக்கும். இந்த முறை விளக்குகளை 9 வண்ணங்களில் வாங்கலாம். குறிப்பாக பச்சை, நீலம், சிவப்பு, ஆரஞ்சு, ரோஸ் என வண்ணங்களில் விளக்குகள் தயாராகி வருகின்றன. இதற்கு முக்கியக்காரணம் வெளிமாநிலங்களில் ஏற்பட்டுள்ள அதிக வரவேற்பால் ஆர்டர்கள் புதுவையில் குவிகிறது.

    முன்பு சக்கரத்தை வைத்து சுற்றி விளக்குகளை தயாரிப்பதை மாற்றி மோட்டார் மூலம் சுற்றி விரைவாக விளக்குகளை உருவாக்குகிறார்கள்.

    களிமண்ணை எடுத்து விளக்கு உருவாக்கி, அதற்கு டிசைன் செய்து 4 மணி நேரம் காயவைத்த பின்பு செங்கல் சூளையில் 2 நாட்கள் வைக்கிறார்கள். அதிலிருந்து சுட்டு எடுக்கப்பட்ட விளக்குகள் வலிமையாக இருக்க பெவிகால் கலந்த கலவையில் முக்கி எடுத்து 2 மணி நேரம் காய வைக்கிறார்கள்.

    அதன்பிறகு 9 வகை வர்ணம் பூசும் பணி தொடங்குகிறது. ஒவ்வொரு விளக்கையும் தனி பாக்கெட்டில் வைத்து 100 அகல்விளக்கு கொண்ட பாக்ஸ் உருவாக்கி வெளியூருக்கு அனுப்புகிறார்கள்.

    அகல்விளக்கு உற்பத்தி செய்யும் கலைஞர்கள் கூறியதாவது:-

    கொரோனா காலங்களில் குறைந்த அளவே விளக்கு விற்பனையானது. தற்போது விளக்குகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், கார்த்திகை தீபத்தை கொண்டாட 9 வர்ணங்களில் விளக்குகளைத் தயாரித்து வியாபாரிகளுக்கு அனுப்புகிறோம்.

    சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிதம்பரம், கடலூர், காரைக்கால் வியாபாரிகள் நாளொன்றுக்கு 2 ஆயிரம் அகல்விளக்குகளுக்கு ஆர்டர் தருகின்றனர். எங்களால் தற்போது ஆயிரம் விளக்குகள் தான் தரமுடிகிறது. விளக்கு செய்யும் பணியில் 15-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகிறோம்.

    30-ந் தேதிக்குள் முடித்து விடுவோம். சங்கராபரணி ஆற்று களிமண் எடுத்துதான் செய்கிறோம். அந்த மண்ணுக்கு நல்ல பொம்மைகளை வடிக்க முடியும். மண் பொம்மை செய்யும் போது வெடிக்காது. வளவளப்பாக இருக்கும். காலை முதல் மாலை வரை விளக்கு தயாரிப்பில் ஈடுபடுறோம்.

    தேவை அதிகமாக இருக்கிறது. வருங்காலத்தில் அதை ஈடு செய்வோம். குறிப்பாக 5 முகம் கொண்ட லட்சுமி விநாயகர் சிலை விளக்கு செய்வது கடினம். 4 நாட்களாவது ஆகும். சென்னைக்கு இவ்விளக்கு அதிகளவில் செல்கிறது. புதுவையில் மண் எடுக்க கட்டுப்பாடு உள்ளது. அதை தளர்த்தி தந்தால் உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆண்டுதோறும் கார்த்திகை மாத அமாவாசை இரவு சிவபெருமானை வழிபடும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
    • ஏனாமில் உள்ள கிடிராஸ்வரர் கோவிலில் பூஜை செய்து 3 நாள் விரதம் இருந்த மக்கள் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது.

    இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத அமாவாசை இரவு சிவபெருமானை வழிபடும் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டும் இதேபோல பூஜை நடத்தப்பட்டது. ராஜீவ் கடற்கரையில் கோதாவரி ஆற்று பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி தீபம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

    முன்னதாக ஏனாமில் உள்ள கிடிராஸ்வரர் கோவிலில் பூஜை செய்து 3 நாள் விரதம் இருந்த மக்கள் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டனர்.

    ஆண்டுதோறும் விழாவை மக்கள் சாதி-மத பேதமின்றி ஒரே இடத்தில் கூடி வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×