search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் வீட்டில் மின்சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது
    X

    காரைக்காலில் வீட்டில் மின்சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது

    • காரைக்காலில் வீட்டில் மின்சாதன பொருட்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • வீரபிரபுவை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவைச்சேர்ந்தவர் புவனேந்திரன். இவர், காரைக்கால் எஸ்.எஸ்.கார்டன் ஏவி.நகரில் புதிய வீடு கட்டும் சிவில் காண்டிராக்டர் எடிசன் என்பவரிடம் கட்டிட ஆசாரி மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். தினசரி வேலை முடிந்தவுடன், ஆசாரி வேலை தொடர்பான எலெக்டிரிக்கல்ஸ் பொருட்களை, கட்டிடத்தின் உள்ளேயே வைத்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம் போல், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கட்டர், கிரைண்டிங் மிஷன் உள்ளிட்ட எலெக்டி ரிக்கல்ஸ் பொருட்களை வைத்துவிட்டு சென்றுள்ளார். மறுநாள் வந்து பார்த்தபோது, அவை அனைத்தும் திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர், எடிசனிடம் இதைபற்றி கூறினார். அவர் அருகில் உள்ள வீடுகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தபோது, காரைக்கால் அம்முகுட்டி சந்தில் வசிக்கும் வீரபிரபு(வயது33) என்பவர் மோட்டார் சைக்களில் வந்து மேற்கண்ட வீட்டில் எலெக்ட்ரிக்கல்ஸ் பொருட்களை திருடி ச்செல்வது தெரியவந்தது. தொடர்ந்து, இது குறித்து, புவனேந்திரன் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவுச் செய்து, வீரபிரபுவை கைது செய்து, பொருட்களை மீட்டனர்.

    Next Story
    ×