என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்த்திகை அமாவாசை"

    • ஆண்டுதோறும் கார்த்திகை மாத அமாவாசை இரவு சிவபெருமானை வழிபடும் சிறப்பு பூஜை நடத்தப்படும்.
    • ஏனாமில் உள்ள கிடிராஸ்வரர் கோவிலில் பூஜை செய்து 3 நாள் விரதம் இருந்த மக்கள் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையின் ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றையொட்டி இருக்கிறது.

    இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாத அமாவாசை இரவு சிவபெருமானை வழிபடும் சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டும் இதேபோல பூஜை நடத்தப்பட்டது. ராஜீவ் கடற்கரையில் கோதாவரி ஆற்று பகுதியில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி தீபம் ஏற்றி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

    முன்னதாக ஏனாமில் உள்ள கிடிராஸ்வரர் கோவிலில் பூஜை செய்து 3 நாள் விரதம் இருந்த மக்கள் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டனர்.

    ஆண்டுதோறும் விழாவை மக்கள் சாதி-மத பேதமின்றி ஒரே இடத்தில் கூடி வழிபடுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×