என் மலர்
புதுச்சேரி
- புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி.
- நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார்.
புதுச்சேரி:
புதுவை கடலூர் சாலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்கள் சங்கத்திற்கு 105 அறைகளுடன் கூடிய தனி கட்டிடம் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
இதில் கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு பேசியதாவது:-
புதுவை வக்கீல்களுக்கு அறைகளுடன் கூடிய கட்டிடம் கட்டித்தரும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இங்கு போதிய டாக்டர்களுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
இதை முதலமைச்சர் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வக்கீல்களுக்கு உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட வேண்டும். யோகா மையமும் அமைக்கப்பட வேண்டும். இவை அமைந்தால் மருத்துவ சிகிச்சை மையமே தேவைப்படாது.
இது நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கையாக அமையும். நமது பிரதமர் மோடி வழங்கப்படும் நீதி நாட்டின் வளர்ச்சிக்கு, நல்ல சமுதாயம் உருவாக உதவும் என கூறுவார். நல்ல சமுதாயம் உருவாக நீதித்துறையின் பங்கு அவசியம்.
நீதிமன்றங்களில் அந்தந்த தாய்மொழிகளில் வாதாடும்போது வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருவது எளிதாகும். தமிழில் வாதாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும் என பலமுறை வலியுறுத்தியுள்ளோம். வரும் காலத்தில் கோர்ட்டில் தாய்மொழியில் வாதாடும் வாய்ப்புகள் உருவாகும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- குமார்(36) மற்றும் சுந்தர்(36) என்பவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதனை பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.
- அதனை தொடர்ந்து, கையில்வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம்,கைகளில் வெட்டியுள்ளார்
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி இராயன்பாளையம் நேதாஜிநகரைச்சேர்ந்தவர் பாரதி(வயது32). பெயிண்டர் வேலை செய்துவரும் இவர், தனது , நண்பர் வினோத் என்பவருடன், கோட்டுச்சேரி சாராயக்க டையில் குடிக்க சென்றுள்ளனர். அப்போது, வட மட்டத்தைச்சேர்ந்த குமார்(36) மற்றும் சுந்தர்(36) என்பவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதனை பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார். மாலை 7 மணி சுமாருக்கு, வீட்டு வாசலில் நின்ற பாரதியை அழைத்து, நீ என்ன குமாருக்கு ஆதரவாக பேசுகிறாயா என கேட்டு சண்டை போட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, கையில்வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம்,கைகளில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த பாரதியின் மனைவி சசியையும் சுந்தர் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூற ப்படுகிறது. தொடர்ந்து, கணவன், மனைவி இருவரும் கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பாரதி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரை தேடிவருகின்றனர்.
- கடல்வாழ் உயிரினங்களான ஆமை, ஆக்டோபஸ் உருவ சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கானா மாநில அரசும் ரூ.25 லட்சம் செலவில் 100 சதுர அடியில் (3டி) முப்பரிமாணத்தில் செயற்கை காடு ஒன்று அமைக்கவுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் வன உயிரினங்களை காப்பதற்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இதையொட்டி ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புலிவேந்தலா பூங்காவில் பார்வையாளர்களை கவரும் வகையில் வன உயிரினங்களின் தத்ரூபமான சிலைகளை ஆந்திர அரசு அமைக்க உள்ளது.
இதற்காக புதுவை முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் இயங்கும் வைல்ட் லைப் ஆர்ட் கேலரி நிறுவனர் பூபேஷ் குப்தாவிடம் ரூ.40 லட்சம் செலவில் சிலை மற்றும் ஓவியங்கள் தயார் செய்து பூங்காவில் அமைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, கைவினை கிராமத்தில் பெரோசிமெண்ட், பைபரை கொண்டு புலி, மான், கரடி, குரங்கு, மயில் உள்ளிட்டவை அதன் நிஜ உருவ அமைப்பில் தத்ரூபமாக தயாராகியுள்ளது. மற்றும் செங்குத்தாக நிற்கும் பாறைதூணில் பச்சை கிளி, அணில், பச்சோந்தி, காட்டு முயல், மலை பாம்பு, உடும்பு, காட்டுப்பல்லி, மேலும் கடல்வாழ் உயிரினங்களான ஆமை, ஆக்டோபஸ் உருவ சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகிலேயே ஆந்திராவில் மட்டுமே தரையில் வாழும் 'ஜடன் கோர்சர்' பறவை சிலை, கடப்பா கல்லில் வரையப்பட்ட பறவைகள் ஓவியம் என 40 உயிரினங்களின் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தெலுங்கானா மாநில அரசும் ரூ.25 லட்சம் செலவில் 100 சதுர அடியில் (3டி) முப்பரிமாணத்தில் செயற்கை காடு ஒன்று அமைக்கவுள்ளது.
அதற்கான வன உயிரினங்களை தயார் செய்யும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு இதே போன்ற பணிகள் நடந்து வருகிறது.
- மனமகிழ்வு மன்றம் என்ற பெயரில் சூதாட்டம் விளையாடுவதாக காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது
- இந்த சோதனை யில், ஏராள மானோர் பணம் வைத்து சூதாட்டம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதியில் மனமகிழ்வு மன்றம் என்ற பெயரில் பதிவு செய்து விட்டு அரசால் தடை செய்யப்பட்ட விளையாடுவதாக காரைக்கால் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் காரைக்கால் நகர காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில், அந்த மன்றத்தை, நகர போலீசார் மற்றும் சிறப்பு அதி ரடி பிரிவு இ ன்ஸ்பெக்டர் பிரவி ன்குமார் தலைமை யிலான போ லீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை யில், அந்த இடத்தில் ஏராள மானோர் பணம் வைத்து சூதாட்டம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு இருந்த கண்ணன், குணசேகரன், சேகர், ரவி உள்ளிட்ட உ அந்த இடத்திலிருந்து ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான டோக்கன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.
- நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.
புதுச்சேரி:
தமிழகம்-தமிழ்நாடு இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.
ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா புதுவை கவர்னர் மாளிகையில் நடந்தது. ஆரோவில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து காணொலி காட்சி மூலம் விளக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பாரதியார் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டியது அவசியம். விடுதலை போராட்ட காலத்தில் புதுவை ஒரு தாயின் மடியைபோல பலரை அரவணைத்து, அரவிந்தர், பாரதியார், வாஞ்சிநாதன் போன்றோருக்கு புகலிடமாக இருந்தது.
ஆரோவில் நகரத்தில் 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3 ஆயிரம் குடும்பங்கள் மட்டுமே உள்ளது. இதையெல்லாம் சரிசெய்வதற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. கவர்னருக்கு அதிகாரம் இல்லை என கூறும் முதல்வர்கள், கவர்னரின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.
தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப்பெரிய சரித்திரம் இருக்கிறது. மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது.
அவ்வளவு எளிதாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது. நான் மக்களுக்காகத் தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன்.
தமிழகத்தில் ரூ.1000 அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுவையில் அதை முதலமைச்சருடன் சேர்ந்து வழங்க உள்ளோம்.
மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுவையில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆரோவில் மாணவிகள் கவர்னர் தமிழிசைக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆரோவில் அமைப்பின் செயலாளர் ஜெயந்தி ரவி தலைமையில் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
- 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன.
புதுச்சேரி:
காரைக்காலில் 4 நாட்கள் நடைபெறும் கார்னிவல் திருவிழா நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று, கபடி, கைபந்து, கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து கார்னிவெல்லின் ஒரு பகுதியாக மீனவ கிராமங்களுக்கிடையே படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காளி குப்பம், மண்டபத்தூர், கீழக்காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 படகுகள் பங்கேற்றன. இப்போட்டியை காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் தொடங்கி வைத்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட போட்டியில் முதல் இடத்தை காளிகுப்பம் மீனவர்களும், 2-ம் இடத்தை மண்டபத்தூர் மீனவர்களும், 3-ம் இடத்தை கீழக்காசாக்குடி மேடு மீனவர்களும் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற மீனவர்களுக்கு 18-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் முகமது மன்சூர் அறிவித்துள்ளார்.
- பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது.
- சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். இங்குள்ள சிறைவாசிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சியை 2 ஆண்டுகளாக சிறைத்துறை நிர்வாகம் அளித்து வருகிறது.
இதற்காக சிறை வளாகத்துக்குள்ளேயே 2½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக பயன்பாடின்றி புதர் மண்டி கிடந்த அந்த இடத்தை 2 வாரத்தில் விவசாய நிலமாக சிறைவாசிகள் உருவாக்கினர்.
அதே வேகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழச்செடிகள், 50 வகையான மூலிகை செடிகளையும் நட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர்.
சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தலைமையில் அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து காய்கறிகள் மரம் மற்றும் பழ வகைகள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பொங்கலை முன்னிட்டு சிறை தோட்டத்தில் மஞ்சள் கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அவை அறுவடை செய்யப்பட்டு சொசைட்டி மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. வெளிச்சந்தையில் ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு மஞ்சள் கிழங்கு சிறைவாசிகள் உருவாக்கிய ஒரு கிழக்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு உற்பத்தியாகும் மஞ்சள் அனைத்தையும் பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தெரிவித்தார்.
இங்கு சூரியகாந்தி, சாமந்தி, கோஸ், ஆந்திர கத்திரிக்காய் போன்றவையும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருக்கின்றன.
மேலும் தை பொங்கலையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
- துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது.
- வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் செயல்படும் ஒலாந்திரியா தொண்டு நிறுவனத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும்.
துத்திப்பட்டில் உள்ள ஒலாந்திரியா வேளாண் பண்ணையில் பொங்கல் விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
இவர்களை ஒலாந்திரியா இயக்குனர் செந்தில்குமரன், துணை இயக்குனர் சாந்தி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். சுற்றுலா பெண் பயணிகளில் சிலர் சேலை அணிந்திருந்தனர். வண்ண கோலமிட்டு, கரும்பு கொட்டகையில் விளக்கேற்றி வழிபட்டு மண் பானையில் வெளிநாட்டவர் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியபோது பொங்கலோ பொங்கல் என முழங்கினர்.
பின்னர், மாட்டு வண்டியில் ஊர்வலமாக கிராமத்தை வலம் வந்தனர். உள்ளூர் கலைஞர்கள் நடத்திய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடினர்.
+2
- வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
- சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.
வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.
சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.
- இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
- கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.
புதுச்சேரி:
பசிப்பிக் கடல் பகுதியில் வாழும் ஆலிவ்ரெட்லி மற்றும் சில வகை ஆமைகள், முட்டையிடுவதற்கு இந்திய பெருங்கடல் கரை பகுதியில் வரும். அவ்வாறு காரைக்கால் கடற்கரை ஓரம் உள்ள சவுக்கு தோப்பு மணல் பரப்பில் முட்டையிட வந்தபோது, படகில் மோதியோ, வலையில் சிக்கியோ இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தது. கடந்த சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி மற்றும் பிற வகை ஆமைகள், காரைக்கால் கடற்கரையில் இறந்த நிலையில் ஒதுங்கி கிடப்பதாகவும், இதனால் துர்நாற்றம் வீசுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் வந்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்பட்டு வரும் தன்னார்வலர்கள் அமைப்பினர், உடனடியாக கடற்கரைக்கு சென்று, இறந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளை கண்டறிந்து, கடற்கரையிலேயே குழி தோண்டி புதைத்து அப்புறப்படுத்தினர்.
- கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார்.
- கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், (வயது 50). லெனின் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வாணிதாசன் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார்.
அப்போது மளிகை கடைக்கு வந்த மர்ம நபர், முருகானந்தத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, கடையில் அரிசி, நெய் விற்பனை குறித்து கேட்டுக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார். கல்லா பெட்டியில் உள்ள பணக்கட்டை எடுத்துக்கொடு என்றார். அதற்கு கீர்த்தனா, முதலாளி சொல்லாமல் தர முடியாது என்றார்.
உடன் மர்ம நபர், செல்போன் இணைப்பில் இருந்த முருகானந்தத்திடம் அரிசிக்கு பதிலாக நெய் கேட்டால் மாற்றி தரமாட்டேன் என்கிறார். நீங்கள் கூறுங்கள் என்றபடி, போனை கடை ஊழியர் கீர்த்தனாவிடம் கொடுத்தார்.
செல்போனில் பேசிய முருகானந்தம், கீர்த்தனாவிடம் கொடுங்கள் எனக் கூறினார். அதன்பேரில் கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.
உடன் அந்த நபர் வேகமாக புறப்பட்டு சென்றார். முருகானந்தம் கடைக்கு வந்த பிறகே, மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- தங்கபிரகாசம் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி.
- ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நிரவி நடுகளம் பேட்டையை சேர்ந்த வர் தங்கபிரகாசம் (வயது45). கூலி தொழிலாளி. இவர் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி. கடந்த சில மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில் ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை. இதனால் ெரயில் தங்கபிரகாசம் மீது மோதியது. இதில் அதே இடத்தில் தங்கபிராசம் உயிர் இழந்தார். இது குறித்து, அவரது மகன் ஆல்பர்ராஜ் பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






