என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு தீவிரம் காட்டியது. இதுதொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

    இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே திட்டமிட்டபடி அதே நாளில் பட்டமளிப்பு விழாவினை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • திரு.பட்டினம் பட்டினச்சேரி ரயில் பாதை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக திரு. பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.
    • அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்,

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் காலனி புதுதெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரேமகுமாரி (வயது 54). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் பருகம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பிரேமகுமாரியின் வீட்டின் கேட்டை உடைப்பது போல் சத்தம்கேட்டது. அக்கம் பக்கதினர் வெளியே வந்து பார்த்தபோது 2 வாலிபர்கள் கையில் இரும்பு பைப்புகளுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 வாலிப ர்களையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

    வீட்டின் உரிமையாளர் பிரேமகுமாரிக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரேமகுமாரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு மட்டும் உடைத்திருந்ததுஇ.தற்கிடையில் பொதுமக்கள் திருவெண்ணை நல்லூர்போலீசாருக்கு தகவல் தெரிவி த்தனர். அதன்பேரில் திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொது மக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். திருவெண்ணை நல்லூர் காந்திகுப்பம் காலனியை சேர்ந்த கலியன் மகன் ஜெகதீஸ்வரன் (21), சரவணம்பாக்கம் காலனியை சேர்ந்த ரகு மகன் உதயா (26) என தெரியவந்தது. மேலும் 2 பேரும் வீட்டின் பூட்டை உடைத்து திருடமுயற்சி செய்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்இதையடுத்து அவர்களி டமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    • புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
    • பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாகநியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும்

    புதுச்சேரி:

    புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளரை மாற்றக்கோரி, காரைக்காலில் பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காரைக்கால் பொதுப்பணித்துறை அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளர் கோபால்சாமி தலைமை தாங்கினார். காரைக்கால் அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணைத் தலைவர் தமிழ்வாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பணி ஓய்வு பெற்று, துறைக்கு தொடர்பில்லாதவர் பொதுப்பணித்துறை சிறப்பு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்யவேண்டும். புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் செயல்பாடுகள் திருப்தியி ல்லாததால் அவரை பணியிடமாற்றம் செய்யவேண்டும்.காலியாக உள்ள கண்காணிப்புப் பொறி யாளர், செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் பணியடங்களை நிரப்ப வேண்டும். காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வரைவாளர் பதவிகளை தகுதி வாய்ந்த வரைவாளர், மேற்பார்வையாளர், பணி உதவியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அனைத்துப் பிரிவு பொறியாளர்களின் பணி நிரந்தரம், முதிர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    • கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    பாகூர்:

    புதுவை தவளக்குப்பத்தை அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 41). தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் கடந்த ஆண்டு தானம்பாளையம் பகுதியில் புதியமனை வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி 2 மகள்கள் உள்ளனர்.

    இவரது சொந்த ஊரான நல்லவாடு பகுதியில் அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை நடந்து வருகிறது. இதனால் வியாபாரம் முடிந்து தினமும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் திருவிழாவுக்கு சென்று வந்தார்.

    அதுபோல் நேற்று கோவிலில் முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றதால் மாலை 6.00 மணி அளவில் வீட்டை பூட்டிக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நல்லவாடு கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமியை தரிசித்து விட்டு இரவு 8.30 மணி அளவில் சத்தியமூர்த்தி வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுகிட்டார்.

    2 பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், தாலி சரடு என சுமார் 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.

    கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு 2 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. யாரோ மர்ம நபர்கள் தொடர்ந்து நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு சத்தியமூர்த்தி புகார் செய்தார். தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், தவளக் குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திரு முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி தூவி விட்டு மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    புதிய மனைப்பிரிவில் வீடு இருந்ததால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லாத நிலையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்

    தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • 28 வயது மதிக்கத்தக்க பெண், அவரது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். .
    • முருகேசன் (35) என்பவர், அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போன் மூலம் விடியோ எடுத்ததாக கூறிப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் சேத்திலால் நகரைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண், அவரது வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். வீட்டை ஒட்டி குடியிருக்கும் முருகேசன் (35) என்பவர், அந்தப் பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போன் மூலம் விடியோ எடுத்ததாக கூறிப்படுகிறது.

    இது குறித்து, அப்பெண், கணவரிடம் நடந்ததை கூறினார். பெண்ணின் கணவர் நண்பர்களின் உதவியுடன் முருகேசனின் செல்போனில் இருந்து விடியோவை கைப்பற்றினார். விடியோ எடுத்த முருகேசனை காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை.
    • பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள்.

    புதுச்சேரி:

    அழிவின் விளிம்பிலிருந்து அன்னை தமிழைக் காப்பதற்காக டாக்டர் ராமதாஸ் 8 நாள் தமிழைத்தேடி என்ற விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

    இந்த பயணத்தின் 3-ம் நாள் பரப்புரை கூட்டம் புதுவை கம்பன் கலையரங்கில் இன்று காலை நடைபெற்றது. பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் பா.ம.க. கவுரவ தலைவருமான ஜி.கே. மணி தலைமை தாங்கினார். புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து முன்னிலை வகித்தார், பொறுப்பாளரும் பா.ம.க. மாநில அமைப்பாளருமான கணபதி வரவேற்றார்.

    சென்னையை விட புதுவையில் தமிழ் சங்கங்கள் அதிகம், அதற்காக புதுவை தமிழ் அறிஞர்களை பாராட்டுகிறேன். புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல்களை படிக்கும்போது நமக்கு உத்வேகம் வரும், அதுபோல் பாரதியார் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களது பொய் வழக்குகளால் அவர் 10 ஆண்டு காலம் புதுவையில் தங்கியிருந்தார்.

    அப்போதுதான் குயில்பாட்டு, பெண் விடுதலை பாடல்கள் ஆகியவற்றை பாடினார். பாரதியார் சுதந்திர பற்றை வளர்த்தார்.

    பாரதிதாசன் தமிழ் பற்றை வளர்த்தார். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் பிற மொழிகலப்பு குறைவு தனித்தமிழ் இயக்கங்கள் தோன்றிய முன்னோடியான இடம் புதுவை. அதனால் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு தமிழை மீட்க அறிஞர்கள் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் தமிழ் கட்டாய பாடமாக இயற்றப்பட்டு அமலுக்கு வரவே இல்லை. அதே நிலை தான் புதுவையிலும் உள்ளது.

    திரைப்படங்களிலும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் தான் பயன்படுத்தப்படுகிறது, முழுமையான தமிழ் வசனங்களுடன் திரைப்படங்கள் வர வேண்டும். தமிழை வளர்க்க நாங்கள் பாடுபட்டதை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும், தமிழ் இசையை வளர்க்கவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

    பிரான்ஸ் நாட்டிற்குள் ஒரே ஒரு ஆங்கில சொல் நுழைந்துவிட்டது. பிரெஞ்ச் இளைஞர்கள் கொதித்து போனார்கள் அந்த சால் தேங்க்யூ அதற்கு பதிலாக மெர்சி என கூறி நன்றியை தெரிவிக்கின்றனர். தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கருப்பு மையை கையில் எடுங்கள், ஆனால் அதற்கு 15 நாட்களுக்கு முன்பே அதை தெரிவித்துவிடுங்கள்.

    பெயர் பலகையில் எப்படி எழுத வேண்டும் என வழிகாட்டுங்கள் அதற்கு பிறகும் தமிழ் இல்லை என்றால், நானும் உங்களோடு சேர்ந்து கருப்பு மை பூச வருகிறேன், பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசுங்கள். இதை உங்கள் வீடுகளில் இருந்தே தொடங்குங்கள். நாம் பிற மொழிக்கு எதிரி அல்ல. தமிழை மீட்போம்.

    பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் வடிவேலு, ஜெயக்குமார், மதியழகன், பிரபாகரன் தேவமணி, புதுவை தமிழ் சங்க துணைத்தலைவர் ஆதிகேசவன், புதுவை தமிழ் இலக்கிய ஆய்வுக் கழக நிறுவனர் வேல்முருகன், தமிழர் தேசிய முன்னனி துரை மாலிறையன், தனித்தமிழ் கழக சீனு அரிமாப் பாண்டியன், தனித்தமிழியக்கம் தமிழ்மல்லன், தமிழர் தேசிய முன்னனி தமிழ்மணி, இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் பூங்கொடி பராங்குசம் , பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி கலைமாமணி ராசன் பாவலர் பயிற்சி பட்டறை இலக்கியன், என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட ஏராளமான தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

    • விஜயசென் (வயது 22), அவரது நண்பர்பைசல் ரஹ்மான் (19) கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸாருக்கு தகவல் வந்தது,
    • 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் எம்.ஜி.ஆர் நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காரைக்கால் நகர போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் எம்.ஜி.ஆர் நகருக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தனர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.

    மேலும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காரைக்காலை அடுத்த கிளிஞ்சல்மேடு சுனாமி நகரை சேர்ந்த விஜயசென் (வயது 22), அவரது நண்பர் அம்மன் கோவில்பத்து, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பைசல் ரஹ்மான் (19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, 2 பேரையும் கைது செய்து போலீசார், அவர்களிடமிருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார்.
    • சமீப காலமாக நடராஜன் அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நடராஜன் (வயது 72). இவர் வில்லியனூர் கிழக்கு மாடவீதியில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் அவர் வீட்டில் தனி அறையில் மின் விசிறி கொக்கியில் வேட்டியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். உடலைப்பார்த்து அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    வில்லியனூர் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடராஜன் குடும்ப பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சரிவர யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தற்கொலை முடிவை மேற்கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    நடராஜன் 1991, 1996-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் உழவர்கரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து தலைராகவும் பதவி வகித்தார். புதுவை மாநில அ.தி.மு.க. மாநில செயலாளராகவும் பதவி வகித்து உள்ளார்.

    சமீப காலமாக அவர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டாமல் சொந்த வேலைகளை கவனித்து வந்தார். அவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், சரவணன், முருகமணி ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி, கலைவாணி, ஜானகி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.

    • மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றார்.
    • விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு காஞ்சிபுரம் கோவில்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது தந்தை துரைசாமி(வயது53). விவசாயியான துரைசாமி, நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த நெடுங்காடு கீழ்பொன் பேத்தியைச்சேர்ந்த சுப்பிரமணியனின் 17 வயது மகன் மோதினார். இதில், துரைசாமி மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்தார். தகவல் அறிந்த வேல்முருகன், தந்தையை காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர், சிறுவனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து, விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர்.
    • 8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.

    அன்னையின் முயற்சியால் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    தாமரை மொட்டு வடிவில் சலவை கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகள், இந்தியாவின் 25 மாநிலங்களின் மண் இடப்பட்டது. சர்வதேச நகரில் 50 ஆயிம் பேர் வசிக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது. நகரின் மையத்தில் ஆரோவில் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன.

    இந்த மைய பகுதியை பேரமைதி என அழைக்கின்றனர். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர்.

    ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்தநாள் முதல் ஆரோவில் தினமான 28-ந் தேதி வரை தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடக்கிறது.

    8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    இதனால் ஆரோவில் சர்வதேச நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆரோவில் உதயதினமான 28-ந் தேதி போன்பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஆசிரம பக்தர்கள் ஈடுபட உள்ளனர். நாள்தோறும் பல்வேறு விவாதம், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார்.
    • பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு கோவில்களிலும் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் யாரேனும் மாணவியை கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மாணவி சுண்ணாம்பாற்று பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த மாணவியை மீட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல் தெரிய வந்தது. அதில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர் பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து பாபு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் சந்திப்பில் நின்றிருந்த பாபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார். மேலும் பாபுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பஸ்சில் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை பாபு 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    மேலும் இதுபோல் பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவநாதன் பின்பக்கமாக சென்று பெண்ணை கட்டியணைத்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.

    மதகடிப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண். கணவரை இழந்த இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    அவருக்கு கணவரின் சகோதரர் உதவி செய்து வந்தார். இதற்கிடையே கணவரின் சகோதரரை சந்திக்க அவரது நண்பரான எம்.என்.குப்பத்தை சேர்ந்த தேவநாதன்(27) என்பவர் அடிக்கடி வருவார்.

    அப்போது நண்பரின் தம்பி மனைவியை தவறான கண்ணோட்டத்தில் தேவநாதன் பார்த்து வந்தார். ஒருமுறை அந்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு தேவநாதன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பெண் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் தேவநாதன் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த பெண் தனது கணவரின் சகோதரர் இங்கு இல்லை என தெரிவித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தேவநாதன் பின்பக்கமாக சென்று அந்த பெண்ணை கட்டியணைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். இதையடுத்து தேவநாதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    இதையடுத்து அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.

    ×