என் மலர்
புதுச்சேரி

ஆரோவில் 55-ம் ஆண்டு விழா நாளை தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது
- ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர்.
- 8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது.
அன்னையின் முயற்சியால் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தாமரை மொட்டு வடிவில் சலவை கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகள், இந்தியாவின் 25 மாநிலங்களின் மண் இடப்பட்டது. சர்வதேச நகரில் 50 ஆயிம் பேர் வசிக்க திட்டமிட்டு பணிகள் நடந்தது. நகரின் மையத்தில் ஆரோவில் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன.
இந்த மைய பகுதியை பேரமைதி என அழைக்கின்றனர். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர்.
ஆரோவில் சர்வதேச நகரின் 55-ம் ஆண்டுவிழாவை கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்தநாள் முதல் ஆரோவில் தினமான 28-ந் தேதி வரை தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடக்கிறது.
8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
இதனால் ஆரோவில் சர்வதேச நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆரோவில் உதயதினமான 28-ந் தேதி போன்பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஆசிரம பக்தர்கள் ஈடுபட உள்ளனர். நாள்தோறும் பல்வேறு விவாதம், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






