என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது.
    • சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 496 மதுக்கடைகள், 95 சாராய கடைகள், 74 கள்ளுக்கடைகள் உள்ளது.

    தற்போது மக்கள் எதிர்ப்பையும் மீறி அதிக அளவில் மது கடைகளும், ரெஸ்ட்ரோ பார்களும் திறக்கப்பட்டுள்ளன.

    இந்த மதுபான கடைகளில் 30-க்கும் மேற்பட்ட பீர்வகைகள், 100-க்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள், 200-க்கும் மேற்பட்ட பிராந்தி வகைகள், 30-க்கும் மேற்பட்ட ஒயின்வகைகள், 100-க்கும் மேற்பட்ட ஓட்கா என சுமார் 1500-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா காலத்தின்போது மதுபானங்களுக்கு 20 சதவீத சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இதனால் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளது.

    புதுவையில் உள்ள 4 பிராந்தியங்களின் அருகில் உள்ள மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளை விட பல முன்னணி நிறுவனங்களின் மது வகைகள் இங்கு கிடைப்பதால் மதுபானங்கள் விற்பனை மூலம் கலால்துறைக்கு ஆண்டுதோறும் வருவாய் உயர்ந்து வருகின்றது. இந்த ஆண்டு ரூ.1,393 கோடி மது விற்பனை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது.

    இதுபற்றி கலால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

    கடந்த 2017-2018ல் ரூ.769.96 கோடியாக இருந்த மதுபான வருவாய் ஆண்டுதோறும் உயர்ந்தது. கொரோனா காலத்தில் வருவாய் குறைந்தது. தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 2021-ல் ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை தொட்டது. தற்போது முதன் முறையாக கலால்துறை வருவாய் ரூ. 1,393 கோடியாக உயர்ந்துள்ளது.

    இது கடந்த நிதியாண்டை விட ரூ.321 கோடி அதிகமாகும். இதில் சாராயக்கடைகள் மூலம் ரூ.100 கோடியும் கள்ளுக்கடைகள் மூலம் ரூ.1 கோடியும் கிடைத்து உள்ளது.

    • ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில் ஈடுபட்ட 10 பேர் கைது.
    • ஜெரோம், புவனேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில், காரைக்கால் நகர போலீசார், கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்ளிட்ட 10 பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர்.

    னேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது. மற்ற 2 பேருக்கு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது. இந்த 4 பேரும், தினசரி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போடவேண்டும் என அந்த நிபந்தனை ஜாமினில் குறிப்பிடபட்டுள்ளது.

    • தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது.
    • நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டம் திருதெளிச்சேரி எனும் தலத்தெருவில், பழமை வாய்ந்த தங்கமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ விலில் ஆண்டுதோறும் சித்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொ டங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று மாலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்ன தாக சந்தன காப்பு அல ங்காரத்தில் அருள்பாலித்த மூலவர் தங்க மாரிய ம்மனுக்கும் உற்சவருக்கும் மகா தீபாரா தனை காட்டப்பட்டது. தீக்குளி அருகே தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி க்கடனை செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுவினர்கள், ஊர் பொது நல சங்கம் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

    • 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
    • புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர்.

    புதுச்சேரி:

    18-ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் நில பிரபுக்கள், ஜமீன்தார்கள், தொழிலதிபர்கள் தங்களிடம் வேலைபார்க்கும் தொழிலாளர்களை நசுக்கி பிழிந்து வந்தனர்.

    1986-ம் ஆண்டு மே 4-ந்தேதி அமெரிக்காவில் சிகாகோ நகரில் ரொட்டி தயாரிப்பு நிறுவன தொழிலாளர்கள் அதிக பணி நேர வேலை, குறைந்த கூலி ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 8 தொழிலாளர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். சிலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அன்று தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த தகவல் 6 மாதத்திற்கு பிறகு ஜெர்மனில் இருந்த காரல்மார்க்சை சென்றடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

    இதையடுத்து பல நாடுகள் மே 1-ந்தேதியை தொழிலாளர் தினமாக கடைபிடிக்க தொடங்கியது. 1917-ல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது.

    இதனால் தொழிலாளர்கள் பல நாடுகளில் தங்கள் உரிமைக்காக குரல் எழுப்பி போராட தொடங்கினர். 1923-ம் ஆண்டு மே 1-ந் தேதி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் சிந்தனைசிற்பி சிங்காரவேலர் முதல்முறையாக தொழிலாளர் தினத்தை கொண்டாடினார்.

    இதன் தாக்கம் புதுவையிலும் எதிரொலித்தது. அப்போது புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்கள்தான் பெருமளவில் இருந்தனர். ஆங்கிலோ பிரெஞ்சு டெக்ஸ்டைல்ஸ், சவானா, கெப்ளே என 3 பஞ்சாலைகள் இயங்கி வந்தது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

    இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் 12 மணி நேர வேலைக்கு நிர்பந்திக்கப்பட்டனர். 1936-ம் ஆண்டு கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவர் வ.சுப்பையா தலைமையில் 8 மணி நேர வேலை உரிமைக்காக பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் வலுத்தது.

    போராட்டத்தை அடக்க 1936-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி பிரெஞ்சு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    இதனால் 1937 ஏப்ரல் 6-ந்தேதி பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்காக சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் நகல் புதுவைக்கு கிடைத்தது. அது பிரெஞ்சு மொழியில் இருந்ததால் மொழி பெயர்ப்பு செய்து, தமிழிலில் பாரதிதாசன் வெளியிட்டார். தொழிலாளர்கள் உயிரை இழந்து 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த போராட்டத்தின் நினைவாக மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இன்று 138-வது மே தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுவையிலும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு, சீருடை, நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

    • என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு.
    • ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.

    புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.

    பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.

    ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.

    ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும்போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை ரோஜா ஆந்திராவில் நடிகர் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான்.
    • கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்வது அழகிய கடற்கரை சாலைதான். பழைய சாராய ஆலையிலிருந்து டூப்ளே சிலை வரையிலான 1 1/2 கி.மீ. அழகிய கடற்கரை சாலை புரமனேடு பீச் என அழைக்கப்படுகிறது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம், பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடம், கார்கில் நினைவிடம், அம்பேத்கர் மணிமண்டபம், காந்தி சிலை, நேரு திடல், சுங்கத்துறை அலுவலகம் என அழகிய கட்டிடங்கள், நினைவிடங்கள் உள்ளது.

    இந்த கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகன போக்குவரத்து இல்லாத கடற்கரை சாலையில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்து தருவதுதான் ஹேப்பி ஸ்ட்ரீட்டின் நோக்கமாகும்.

    ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோர் இந்த சாலையை பயன்படுத்தலாம். நடனம், நாட்டியம், ஓவியம், வேடிக்கை, விளையாட்டு என எதில் தனி திறமை இருந்தாலும், குழு திறமை இருந்தாலும் மக்கள் முன்பு வெளிப்படுத்தலாம்.

    பொதுமக்கள் பாதிக்காத வகையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கி தரப்படும். அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். வெளி நாடுகளில் உள்ளதுபோல புதுவை கடற்கரை சாலையை ஹேப்பி ஸ்ட்ரீட்டாக மாற்ற சுற்றுலாத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
    • மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கோடை விடுமுறை என்பதாலும் தொழிலாளர் தினத்தையொட்டி தொடர் விடுமுறை என்பதாலும் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    இன்று அதிகாலை முதலே புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.

    சூரிய உதயத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென மழை பெய்தது. 10 நிமிடம் நீடித்த மழை சுற்றுலா பயணிகளிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மழையில் நனைந்த சுற்றுலா பயணிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கடலில் இறங்கி குளித்தனர். கடற்கரை சாலையில் கடலில் குளிக்காதீர்கள் என்ற எச்சரிக்கையையும் மீறி குடும்பத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.

    புதுவை நோணாங்குப்பம் படகு குழாமில் படகில் சவாரி செய்து பாரடைஸ் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி சென்றனர்.

    இதேபோல் புதுவையின் சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா, ஊசுட்டேரி மற்றும் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    மதிய வேளையில் பிரபல உணவகங்களில் மேஜையை பிடிக்க வரிசையில் நின்றனர்.

    • புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே 15 ஏக்கர் அரசு இடம் உள்ளது.
    • புதுச்சேரி அரசு 12 ஆண்டுகளுக்கு பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே, 5 ஏக்கர் இடத்தில், புதிய சட்டசபை கட்டிடம் விரைவில் கட்டப்படும் எனசபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்தார். காரைக்கால் மாவட்டத்திற்கு வந்த புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே 15 ஏக்கர் அரசு இடம் உள்ளது. அதில் 5 ஏக்கர் இடத்தில் ரூ.450 கோடி செலவில், புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்படும். இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒரு சில தினங்களில் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்க உள்ளது. புதுச்சேரி அரசு 12 ஆண்டுகளுக்கு பின் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. இதனை அனைத்துதரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர். அதேபோல், கவர்னர், முதல் அமைச்சர் ஒருங்கிணைந்து முடிவெடுத்து பெண்களுக்கு 2 மணி நேரம் பணி நேரம் குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.

    புதுச்சேரி:

    கோடை விடுமுறையை யொட்டி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற டிசம்பர் 20-ந்தேதி மாலை 5.20-க்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற வுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் பள்ளி களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தாலும் சனிக்கிழமை என்பதாலும், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.  நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும் திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயில் அதிக மாக உள்ளதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    • எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம்.
    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசு - கலை, பண்பாட்டுத்துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்த நாள் விழா மற்றும் புதுவை கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை பாவேந்தர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    10 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் கலைமாமணி விருது வழங்கும் விழாவை அரசு நடத்துகிறது. தமிழ் உணர்வு தான் பாரதிதாசனின் உயிராக இருந்துள்ளது. அதனால்தான் பாரதியின் நண்பனாக அவர் இருந்தார்.

    தமிழகத்தின் தெருக்களில் தமிழ் தான் இல்லை என பல ஆண்டுகளுக்கு முன்பே பாரதிதாசன் பாடியுள்ளார்.

    புதுவையில் கூட தமிழை நாம் இன்னும் விளையாட வைக்க வேண்டும். பலகைகள் எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வியாபாரிகளிடமும் அனைவரிடத்திலும் ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தாக ஒலிப்பது புதுவையில் மட்டும்தான்.

    இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்தே அரசியல் நடக்கிறது. ஆனால் எந்த அரசியலும் இல்லாமல் இங்கு பாரதிதாசனின் தமிழ்த்தாய் வாழ்த்தை உணர்வுபூர்வமாக பாடுகிறோம். பாரதிதாசனுக்கு புதுவை பெருமை சேர்க்கிறது.

    இவ்வாறு தமிழிசை பேசினார்.

    • கருப்புசாமி மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார்.
    • யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு என உணர்ந்தனர்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் சன்னதி எதிரே, சாமி தரிசனம் செய்த பெண்ணிடம், 6 1/2 பவுன் தங்க நகை திருடிய மர்ம நபரை பிடித்து தங்க நகையை மீட்டுத்தருமாறு, பெண்ணின் கணவர், திருநள்ளாறில் போலீசில் புகார் அளித்துள்ளார். மதுரை தூநேரி அழகர் கோவில் மெயின் சாலையைச்சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் மதுரையில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கருப்புசாமியை காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரரை தரிசனம் செய்துவந்தால், நேரம் நல்லா இருக்கும் என ஜோதிடர் கூறியதை அடுத்து, கருப்புசாமி, தனது மனைவி உமாதேவியுடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சனீஸ்வரரை, அவரது சன்னதி எதிரே நின்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பும்போது, உமாதேவியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் தங்க நகையை காணவில்லை. கூட்டத்தை விலக்கி பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை. தொடர்ந்து, உமாதேவி திருநள்ளாறு போலீசில் புகார் கொடுக்க கணவரிடம் கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர், உயிருக்கு வந்த ஆபத்து தங்க செயினுடன் போய்விட்டது. சனியும் விலகிவிட்டது. அதனால், புகார் தராமல் வீட்டுக்கு போங்க என கூறியதாக கூறப்படுகிறது. அதனை நம்பி தம்பதியினர் புகார் தராமல் ஊர் திரும்பிவிட்டனர். ஊர் சென்றதும், யாரோ சொன்னதை கேட்டு புகார் தராமல் வந்தது தவறு. புகார் தந்தால்தான் நகை கிடைக்கும் என உமாதேவி கணவரிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காரைக்கால் திருநள்ளாறு வந்த கருப்புசாமி, கடந்த டிசம்பர் மாதம் சனீஸ்வரர் சன்னதி முன்பு நடந்ததை கூறி, கோவில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபரை பிடித்து, தங்க நகையை மீட்டுதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

    • கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
    • நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை மஞ்சினி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி என்ற டெல்லி கோபி.

    சென்னையில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களது விவாகரத்து வழக்கு புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. கோபி மகன் சென்னையில் படித்தபோது உடன்படித்த கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்த திருமணத்திற்கு பெண்ணின் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் திருமணம் செய்து கொண்ட இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 13-ந்தேதி கோபி விவகாரத்து வழக்கிற்காக புதுவைக்கு வந்தார்.

    விசாரணை முடிந்து புதுவை கருவடிக்குப்பம் சிவாஜி சிலை பஸ் நிறுத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல் வடபழனி போலீசார் எனக்கூறி கோபியை கடத்தி சென்றனர்.

    சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே வந்தபோது காரில் அவரை தாக்கி மகன்-மருமகள் எங்கே? என கேட்டனர். மேலும் மற்றொரு காரில் இருந்து வந்த ஒருவர் துப்பாக்கி முனையில் கோபியை மிரட்டினார். கோபி தொடர்ந்து சத்தம் போட்டதால் கானாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே கோபியை கீழே இறக்கிவிட்டு சென்றனர்.

    இதுகுறித்து கோபி கானாத்தூர் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் நடந்த இடம் புதுவை என்பதால் அங்கு புகார் அளிக்குமாறு கானாத்தூர் போலீசார் கூறி புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை

    இதனால், காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார். பின்னர் நிருபர்களிடம் கோபி கூறியதாவது:-

    எனது மகனையும், மருமகளையும் ஆணவக் கொலை செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பெண்ணின் தந்தை, நண்பர் ஆகியோர் கூட்டு சதி செய்து போலீஸ் என கூறி என்னை கடத்தி சென்றனர். நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகன், மருமகள் எங்கே உள்ளனர் என்றும் செல்போன் நம்பரை கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடத்தல் சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் மற்றும் கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடத்தல் கும்பலுக்கு ஆதரவாக போலீசார் செயல்படு கின்றனர்.

    இது தொடர்பாக கோர்ட்டையும் நாட உள்ளேன். கானாத்தூரில் கடத்தல் கும்பல் என்னை விடுவித்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் என்னிடம் இருக்கிறது. எனக்கும் என் குடும்பத்திற்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×