என் மலர்
புதுச்சேரி
- சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி
- வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி எம்.எஸ்.பி லட்சுமி நகரைச்சேர்ந்தவர் சுரேஷ். ,இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி மாலை ரேவதி, தனது 2 குழந்தைகளுடன் கடைவீதிக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டு வாசல் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு ரேவதி அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ, அலமாரி உள்ளிட்டவை உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து, கோட்டுச்சேரி ேபாலீஸ் நிலையத்தில் ரேவதி புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, வீட்டு கதவை உடைத்து தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், திருட்டு நடந்த வீட்டின் அருகே, கோட்டுச்சேரி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். பின்னர், அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரித்தபோது, திருப்பூர் மாவட்டம் எடுவபாலயம் பகுதியைச்சேர்ந்த ஜீவானந்தம்(வயது34) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுரேஷ் வீட்டு கதவை உடைத்து, 40 பவுன் தங்க நகைகளை, கேரளா, சந்திரப்புரத்தைச்சேர்ந்த நண்பர் சம்சுதின் பாபு(32) என்பவரோடு சேர்ந்து கொள்ளையடித்ததையும்,
- காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்
- 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவிற்கு, காரைக்காலைச் சேர்ந்த 35 வயதுபெண்கடந்த 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், நல்வழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் ஆகியோர் அறிவித்து இருந்தனர். இந்த சூழலில் காரைக்கால் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த 84 வயது முதியவர் நேற்று கொரோனாவிற்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்று ஏற்பட்டு, தஞ்சாவூர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர், குணமாகிவிட்டதாக எண்ணி, ஆஸ்பத்திரி யிலிருந்து வீட்டுதனி மையில் இருந்த நிலையில், அந்த முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுவை மாநிலத்திலேயே காரைக்காலில் மட்டும் கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்றால்2 பேர் உயிரிழந்த தால்காரைக்கால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நலவழித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
- தகராறை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலை மிரட்டல் விட்டனர்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். அவர் சிகிச்சைகாக புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரைப் பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் புதுவையில் மதுபாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மது குடிக்க முடிவு செய்தனர்.
முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கு ஏறி பார் ஊழியர்கள் மற்றும் அருகில் மது அருந்தியவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதனை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலைமிரட்டல் விட்டனர்.
தகவல் அறிந்த புதுவை ரோந்து போலீசார் அங்கு சென்றனர். அவர்களையும், தமிழக வாலிபர்கள் தாக்கினர்.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் ஆர்.சி காலனி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 30), அதே பகுதியை சேர்ந்த ஜீவஜோதி (27), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (25), புவனகிரி அடுத்த கரைமேடு பின்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி (27), சவுந்தரராஜன் (24), அருள்பாண்டி (20), அருளரசன் (22), வேல்முருகன் (23) என்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக பார் ஊழியர் மூலகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.
- காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 30). இவர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பழனி திருநள்ளாறு அருகே வந்தபோது எதிரே வந்த சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பழனி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பழனி லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த பழனியின் உடலை கைப்பற்றிய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மரிய கிறிஸ்டின் பால் தலைமை யிலான போலீசார் பிரேத பரிசோதனைக்காக காரைக் கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பழனிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடைபட்ட நிலையில் பழனி உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
- போலீசார் விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
- தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட மேலவாஞ்சூர் பகுதியில், திரு.பட்டினம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது, காரில் இருந்த வாலிபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.
தொடர்ந்து காரை சோதனை செய்த பொழுது, ஏராளமான சாராய பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது37), சத்யராஜ் (27) என்பதும், 2 பேரும் காரைக்காலில் இருந்து தமிழக பகுதிக்கு சாராயத்தை கடத்திச் சென்று விற்க முயன்றதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்து, மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
- இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் நூற்றுக்கணக்கான மதுபார்கள் ஏற்கனவே இயங்கி வருகிறது.
தற்போது ரெஸ்டோபார் எனப்படும் நடன அரங்கத்துடன் கூடிய மதுபார்களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இந்த மதுபார்கள் நகர், புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே புதிது, புதிதாக முளைத்து வருகிறது. குடியிருப்புகள், கோவில், பள்ளி அருகே ரெஸ்டோ பார் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் அரசின் வருவாயை பெருக்கும் வகையில் ரெஸ்டோ பாருக்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
வார இறுதியில் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் ஒரு தரப்பினர் ரெஸ்டோ பாருக்காகவே வருகை தருகின்றனர். சென்னை, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு, நடனமாடுவதை விரும்புகின்றனர்.
அதோடு நள்ளிரவு வரை ரெஸ்டோ பார் திறந்து செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் நள்ளிரவுக்கு மேல் மதுஅருந்தி கொண்டாடி விட்டு, நள்ளிரவு, அதி காலைக்கு மேல்தான் விடுதிகளுக்கு திரும்புகின்றனர்.
புதுவையில் இருசக்கர வாகனங்களும் அதிகளவு வாடகைக்கு விடப்படுவதால், இதுபோன்ற ரெஸ்டோ பார் செல்பவர்கள், கார்கள், மோட்டார் சைக்கிளில் நள்ளிரவில் செல்கின்றனர்.
அப்போது ஒரு சில இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஏற்கனவே புதுவையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் புதுவை இளைஞர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
சமீபகாலமாக ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்றுகூடி சாலையில் செல்லும் பொதுமக்களை தாக்கி, மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவத்தில்தான் லப்போர்த் வீதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற என்ஜினீயரை தாக்க முயன்றபோது பலியாகியுள்ளார். இது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மக்களுக்கு பிரெஞ்சு காலத்தில் இருந்தே மது அருந்தும் பழக்கம், பார்ட்டி கொண்டாடும் பழக்கம் உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு இடையூ றாகவோ, பொது இடங்களில் அருவருக்கத்தக்க வகையிலோ நடப்பதோ கிடையாது.
ஆனால் புதிய ரெஸ்டோ பார் கலாச்சாரம் சாலையின் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடுவது, பொது மக்களை அச்சுறுத்துவது போன்ற சம்பவங்களை அதிகரிக்க செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. குரல் கொடுத்துள்ளது. ரெஸ்டோ பார் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் புதுவை அரசுக்கு வருவாயா? வருங்காலமா? என்ற நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.
- பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்
- மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
தொடர் விடுமுறை காரணமாக, காரைக்கால் மாவட்ட ஆன்மீக தலங்கள், கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. இவர்களில் பலர் பூங்கா, கடற்கரை மணலில் பொழுதை போக்கினாலும், சிலர், கடலின் ஆழம் தெரியாமல் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். அண்மைக்காலமாக, காரைக்கால் கடலில் குளித்து, கடல் அலையில் சிக்கி பலர் இறந்துள்ளனர். இதன்காரணமாக, கடலில் குளிப்பதை போலீசார் அனுமதிப்பதில்லை. மதிய வேளையில், போலீசாருக்கு தெரியாமல் வெயிலின் தாக்கத்தை தணிக்க பலர் கடலில் இறங்கி குளித்து வருகின்றனர். நேற்று மாலை திரளான மக்கள் கூட்டம் கடலில் இறங்கி குளிப்பதை பார்த்த போலீசார், அவர்களிடம் கடலின் ஆழம் குறித்து எடுத்துகூறி,குளிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தினர். போலீசாரின் அறி வுறுத்தலை பெரிதுபடுத்தாத சிலர், போலீசார் இல்லாத இடமாக பார்த்து குளிக்கத் தொடங்கினர்.
இதனால், பொறுமை இழந்த போலீசார், கடலில் இறங்கி, குளிப்பவர்களை அப்புறப்படுத்தினர். கடல் ஆழம் என்றால் குறிப்பிட்ட தூரம் தடுப்பு வேலி அமைத்து, ஆழம் இல்லாத கரையில் குளிக்க போலீசார் அனுமதிக்கவேண்டும். வெயில் காலம் என்பதால் கடல் குளியல் அவசியம். இதை நடைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
- காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
- புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2006-ம் ஆண்டு துறைமுகம் அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
காரைக்கால் துறைமுகத்திற்காக 600 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கி தந்தது. துறைமுகத்தின் வருவாயில் ரூ.100-க்கு ரூ.2.6 சதவீதம் அரசுக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது.
மார்க் என்ற தனியார் நிறுவனம் புதுவை அரசுடன் ஒப்பந்தம் செய்து துறைமுகத்தை 2009-ல் தொடங்கியது. கடந்த 14 ஆண்டாக மார்க் நிறுவனம் துறைமுகத்தை நடத்தி வந்தது.
காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.9.5 கோடி வீதம் 14 ஆண்டுகளில் மொத்தம் ரூ.133.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தனியாருக்கு துறைமுகத்தை வழங்கும்போதே அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரசின் ஈவுத்தொகையை கூடுதலாக பெற வேண்டும் என்றும், அப்பகுதி இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.
இந்த விவகாரம் அவ்வப்போது சட்டசபையிலும் எதிரொலித்து வந்தது. இதனிடையே காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படு வதால் அப்பகுதியில் மக்கள் காற்று மாசுபாடால் பாதிக்கப்படுவதாக புகாரும் எழுந்தது.
மேலும் காரைக்கால் துறைமுகத்தை இறக்குமதி, ஏற்றுமதியை கண்காணிக்க சரியான அமைப்புகள் இல்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்தது. காரைக் கால் துறைமுகம் கடத்தல் கேந்திரமாக மாறிவிட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இதனிடையே காரைக்கால் மார்க் துறைமுக நிறுவனம் தொழில் நஷ்டம் காரணமாக நலிவடைந்து விட்டதாக அறிவித்தது. இதனால் துறைமுகத்தை விற்பனை செய்ய தொழில் தாவா தீர்ப்பாயத்தை அணுகியது.
இந்த தீர்ப்பாயம் மார்க் நிறுவனம் வங்கிகளில் பெற்ற கடனை ஈடுசெய்யும் வகையில் துறைமுகத்தை தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
காரைக்கால் துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்துவதற்காக முன்வந்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் போடப்பட உள்ளது. இந்த புதிய ஒப்பந்தத்தில் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.
புதிய ஒப்பந்தத்தில் புதுவை அரசுக்கு 10 சதவீத ஈவுத்தொகை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் பெரும் பகுதியை வழங்க வேண்டும். காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி வழங்க வேண்டும் என்பது உட்பட முக்கிய விதிகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த விதிமுறைகளோடு புதிய ஒப்பந்தந்தை நிறைவேற்ற தலைமை செயலருக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார்.
- சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம்.
- ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்க்கலாம்.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் விதவிதமான மதுக்கடைகள், மது அருந்தும் வசதியுடன் பார்கள் உள்ளன.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை புதுவை கடற்கரைகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து அதிகளவில் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
குறிப்பாக மது பிரியர்கள் விதவிதமான பீர்களை வாங்கி குடித்து பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்தக்கட்டமாக உணவு சாப்பிடும் ரெஸ்ட்டாரண்டுகள் பாரம்பரிய வீடுகள் அனைத்திலும் சுற்றுலா என்ற பெயரில் ரெஸ்டோபார்கள் திறக்க அரசு தாராளமாக அனுமதி அளித்து வருகிறது.
அதற்கு மேல் இப்போது மது பிரியர்களுக்காக சென்னையில் இருந்து புதுவைக்கு தனியாக வருகிற 22-ந் தேதி முதல் பீர் பஸ் இயக்கப்பட உள்ளது. இதனை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.
ஒரு நபருக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும், பல விதமான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டே புதுவையை சுற்றி பார்த்து விட்டு அன்றைய தினமே சென்னைக்கு திரும்பி விடலாம். இதற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நிறுவன ஏற்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:-
பீர் பஸ் என்று அழைப்பதால் பஸ்சில் குடிப்பது என்று யாரும் நினைத்து கொள்ள வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதி இல்லை.
எனவே புதுவையில் அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் பஸ் நிறுத்தப்படும். அந்த இடத்தில் பீர் அருந்த அனுமதிக்கப்படும்.
சென்னையில் இருந்து 40 சுற்றுலா பயணிகள் புதுவைக்கு அழைத்து செல்லப்பட்டு அன்றைய தினமே மீண்டும் சென்னை திரும்பலாம். அன்றாட வேலைகளில் மூழ்கி கிடப்பவர்கள், வார விடுமுறையில் ரிலாக்சாக உற்சாகப்படுத்தி புதுப்பித்து கொள்ள இந்த சுற்றுலா உதவும் என்றனர்.
- கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது.
- ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
போலீஸ், எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.
வரும் 20-ந் தேதியுடன் முடிகிறது. கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.
கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
- மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
- முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி:
காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரமோற்சவ விழாவில் தேர்த்திருவிழா, தெப்ப த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரமோத்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 26ந்தேதி நடைபெற்றது. தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடை பெற்றது. தொடர்ந்து, நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதில், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரிய தலைவர் வக்கில் வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி, உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறவுள்ளது.
- 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
- டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த அம்பகரத்துாரில் டாக்டர் ஞானமணி (வயது 35) மற்றும் தனியார் லேப் உரிமையாளர் பஷீர் (36) ஆகியோர் இணைந்து கிளினிக் வைத்து நடத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 2 பேருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதில் டாக்டர் ஞானமணி அம்பகரத்துார் பகுதியிலேயே தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இதனால் இவர்களுக்கு இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பஷீர் உள்ளிட்ட 31 பேர் ஞானமணி கிளினிக்கில் புகுந்து டாக்டரை சரமாரியாக தாக்கி, கிளினிக்கையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த டாக்டர் ஞானமணி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அம்பகரத்துார் போலீசார் 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






