search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gathering of devotees"

    • பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
    • நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.

    புதுச்சேரி:

    கோடை விடுமுறையை யொட்டி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கி ழமை தோறும் ஆயிரக்கணக் கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்த சாமி தரிசனம் செய்வது வழக்கம். வருகிற டிசம்பர் 20-ந்தேதி மாலை 5.20-க்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற வுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் பள்ளி களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தாலும் சனிக்கிழமை என்பதாலும், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர்.  நேற்று அதிகாலை 4.30 மணி முதல் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும் திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயில் அதிக மாக உள்ளதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். பாதுகாப்பு பணியில், கோவில் ஊழி யர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    ×