என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது.
    • இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் வேலை நாட்களில் மாலை 6 மணிக்கு மேலும், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கல்வித்துறைக்கும் புகார்கள் சென்றன.

    இதைத்தொடர்ந்து கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை யூனியன் பிரதேசத்தில் இயங்கும் சில தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்தும், வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை அளிக்கும் தினங்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களுக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

    எனவே பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதன்படி எந்த ஒரு தனியார் பள்ளியும் மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் மற்றும் பிற திறன் சார்ந்த வகுப்புகளை நடத்தக்கூடாது. அதேபோல் வார விடுமுறை, பொதுவிடுமுறை, அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களிலும் இத்தகைய வகுப்புகளை நடத்தக்கூடாது.

    இந்த விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். இதில் ஏதேனும் விதிமுறை மீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுச்சேரியை மையமாக வைத்து படம் தயாரிக்கும் பார்த்திபன்.
    • ‘54-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்பதுதான் புதிய படத்தின் தலைப்பு.

    சினிமா நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் புதுச்சேரி பொதுப்பணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரான லட்சுமி நாராயணனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடம் தனியாக பேசினார்கள்.

    புதுச்சேரியை மையமாக வைத்து நான் ஒரு படம் தயாரிக்கிறேன். அதற்கு அரசின் உதவியை கேட்பதற்காக அமைச்சரை சந்தித்தேன். அவரும் முடிந்த அளவு உதவுவதாக தெரிவித்தார்.

    வழக்கமாக திரைப்படங்களின் ஒரு சில காட்சிகள் புதுச்சேரியில் எடுக்கப்படும். ஆனால் இந்த படத்தில் 99 சதவீத காட்சிகள் இங்கு எடுக்கப்பட உள்ளது.

    '54-ம் பக்கத்தில் ஒரு மயிலிறகு' என்பதுதான் புதிய படத்தின் தலைப்பு. படத்தில் நான் தான் கதாநாயகன். இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை. படங்களுக்கு புதிய பெயர் வைக்காமல் பழைய பெயர் வைக்கும்போது எதிர்ப்புகள் வருகிறது. குறிப்பாக 'பராசக்தி' படம் என்றால் அது கலைஞர்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம், பெரியார் குறித்த சீமானின் விமர்சனங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பார்த்திபன் கூறியதாவது:-

    புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பு கிடையாது.

    விஜய் அவரது வேகத்தில் செல்லட்டும். அரசியலில் பெரிய இடத்துக்கு செல்ல தடை இல்லாமல் இருக்காது. ஆட்சியை பிடிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

    அதனால் தடைகளை தாண்டி செல்வதுதான் உண்மையான தலைவருக்கு அழகு. அதுபோல் விஜய்யும் தடையை தாண்டி செல்ல வேண்டும். ஆளுங்கட்சியை விமர்சனம் செய்தால்தான் அடுத்த இடத்துக்குவர முடியும்.

    எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள். அதை விடுத்து பாராட்டிக்கொண்டு இருந்தால் தலைவராக வரமுடியாது. இதனால் நான் விஜய்க்கு ஆதரவாக செல்கிறேன் என்று அர்த்தமல்ல.

    பெரியார் என்பது நமது பாரம்பரியத்தில் சமூகத்தில் நீக்கமுடியாத விஷயம். அதில் எதிர் கருத்து சொல்வதற்கு பின்னால் வேறு ஏதாவது அரசியல் இருக்கலாம். அது நமக்கு தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டல்.
    • போலீசார் வெடிமருத்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பொறையூர்பேட் புதுநகரை சேர்ந்தவர் குருபஞ்சராவ். இவரது மகன் யோகேஷ் என்ற யோகரத்தினம் (வயது 21).

    இவர் மீது கஞ்சா, அடிதடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி முகேஷிற்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

    சில வாரங்களுக்கு முன், கிராத்திற்கு செல்லும் சாலையில் முகேஷ் தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த யோகரத்தினத்தை நிறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த யோகரத்தினம் பட்டாசு வாங்கி வந்து யூடியூப் சேனல் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். அதனை தனது எதிரி ரவுடி முகேஷ், வீட்டின் சுவற்றில் வீசி வெடிக்க செய்து பரிசோதித்தார். பின்னர் தலைமறைவானார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் யோகரத்தினத்தை தேடி வந்தனர். பொறையூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த யோகரத்தினத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    யோகரத்தினத்திடம் இருந்து வெடிமருந்து, நூல் உருண்டை, கூழாங்கல், செல்போன் உட்பட பொருட்களை பறிமுதல் செய்து, வில்லியனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். யோகரத்தினம் மீது வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு.
    • விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே விசைப்படகில் மீன் பிடித்த காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.

    துப்பாக்கி சூட்டில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த செந்தமிழ் மற்றும் நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த பாபு என்ற 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களை 10-ந்தேதி வரை காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ பஞ்சாயத்து மற்றும் சிறைபிடிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் புதுச்சேரி வந்து முதலமைச்சர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோரை சந்தித்தனர்.

    அப்போது மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ரங்கசாமி காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் விரைவில் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். 

    • துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர்.
    • காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் புதுவை, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பிடித்துச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தவேல். அவருக்கு சொந்தமான விசைப்படகில் 13 மீனவர்கள் கடந்த 26-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    நேற்று முன்தினம் இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் திகைத்த நிலையில் நடுக்கடலில் வைத்து வானத்தை நோக்கியும், படகு மீதும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதனால் பயந்து போன மீனவர்கள் பாபு, செந்தமிழ் ஆகியோர் கடலுக்குள் குதித்து தப்ப முயன்றனர். இதில் அவர்கள் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தொடர்ந்து துப்பாக்கி முனையில் படகில் இருந்த11 மீனவர்கள், கடலில் தத்தளித்த 2 மீனவர்கள் என 13 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை விசைப்படகுடன் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    அவர்களில் காயமடைந்த பாபு, செந்தமிழ் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி காட்சிகள் வெளியானது.

    மீனவர்களின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
    • மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடிப்பதாக கூறி சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேதாரண்யம், ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு. இவருக்கு சொந்தமான படகில் 13 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரைக்கால் மீனவர்கள் 13 பேரையும் சிறை பிடித்தனர். அவர்களின் படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மீனவர்களை சிறை பிடித்தபோது 2 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் யாழ்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

    • துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன.

    புதுச்சேரி:

    நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை 13 பேரை சிறை பிடித்துள்ளது. இதில் 2 மீனவர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்காலை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 13 பேர் இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதில் கிளிஞ்சல் மேடு செந்தமிழன், நாகை நம்பியார் நகர் பாபு ஆகியோர் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு யாழ்ப்பாண மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டு நமது நாட்டுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுத உள்ளார். தொலைபேசி மூலமும் பேசி அவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பார்.

    துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சை அளிக்க புதுச்சேரிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பும் புரிதலும் இருக்க வேண்டும்.

    கடலில் எல்லை எங்குள்ளது என்று யாருக்கும் தெரியாது. மீன் வளர்ந்தது மேட் இன் இந்தியாவா? மேட் இன் இலங்கையா? என கூற முடியாது. கடலில் மீன் என்பது பொதுவான விஷயம்.

    இதனால் இலங்கை அரசு இலங்கை ராணுவம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். நாமும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்.

    நாமும் புரிதலோடு நடந்து கொள்ள வேண்டும். விட்டுக் கொடுப்பதும் புரிதலும் இலங்கை ராணுவத்திடம் இல்லை. அவசரப்படுகிறார்கள்.

    புதுச்சேரியை சேர்ந்த 20 படகுகள் இலங்கையில் உள்ளன. அவற்றையும் மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்

    தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை மீனவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் தான் இந்த முறை துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.
    • வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வில்லியனுார் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் சென்னை ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சென்னை அண்ணாநகரை சேர்ந்தவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் ஆடம்பரமாக திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 150 பவுன் நகை, ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க கடிகாரம், ரூ.1.30 லட்சம் செல்போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சீர் வரிசையாக வழங்கினர்.

    இந்நிலையில் திருமணம் முடிந்த சில வாரத்திலேயே சீர்வரிசையாக அணிந்து வந்த நகைகளை மாமியார் பெற்று கொண்டார். மேலும் சில மாதங்களில் பெண்ணிடம் கூடுதலாக 50 பவுன் நகை வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை செய்து வந்தார்.

    அதோடு பெண்ணின் பெற்றோர் வீட்டு சொத்தை தனது பெயரில் எழுதித் தர வேண்டும் என அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.

    இதற்கு மறுத்த அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டில் வளர்த்து வரும் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் காங்கோ சாம்பல் பறவையை கொத்த வைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவரின் பெற்றோர், உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்ற கொடுமை செய்து வந்ததால் அந்த பெண் புதுச்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் இதுகுறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.
    • டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார் மண்டபத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் புஷ் (வயது.29). வரி ஆலோசகராக உள்ளார்.

    இவர் கடந்த 6 ஆண்டுகளாக கரலாக்கட்டையை சுற்றும் பயிற்சியை செய்து வருகிறார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறார்.

    இந்த நிலையில் பாரம்பரிய கரலாக்கட்டை உடற்பயிற்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த விரும்பினார். இதற்காக இவர் 24 மணி நேரம் கரலாக்கட்டை சுற்றும் சாதனையில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சாதனை நிகழ்வு நடந்தது. இதில் 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 128 முறை கரலாக்கட்டையை ஜார்ஜ் புஷ் சுற்றினார். இதனை டேலண்ட்னா வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு அங்கீகரித்துள்ளது.

    • தியாகிகளை கவுரவிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
    • ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் குடியரசு தின விழாவை முன்னிட்டு தியாகிகளை கவுரவிக்கும் விழா மற்றும் தேநீர் விருந்து நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தியாகிகளுக்கு இனிப்பு மற்றும் பொன்னாடை வழங்கி கவுரவித்தார். இதில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாட்டின் விடுதலைக்கு போராடி தமது இன்னுயிர் நீத்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உரிய மரியாதை செலுத்த வேண்டும்.

    நம் நாட்டின் விடு தலையை பேணி காப்பதுடன், நமது நாட்டின் வளர்ச்சியை விடுதலை போராட்ட தியாகிகள் எண்ணத்தின்படி செயல்பட்டு வருகிறோம்.

    புதுவை மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைக ளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மேம்பட்டுள்ளது. உள் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இதற்காக கூடுதல் நிதி ஒதுக்கி அதிக கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாணவர் களுக்கும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை சிறந்த கல்வி வழங்கப்படுகிறது

    குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஏதேனும் பரிசு ஒன்று வழங்குவது வழக்கம். இந்தாண்டு தியாகிகளின் வங்கி கணக்கில் பரிசுப் பொருட்களுக்கு பதிலாக தலா ரூ.3 ஆயிரம் ரொக்கம் அவரவர் வங்கிக்கணக்கில் ஓரிரு நாளில் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.
    • மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் (82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடியான திகழ்ந்தவர் மருத்துவர் கே.எம்.செரியன்.

    இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவராவார் மருத்துவர் கே.எம்.செரியன்.

    சென்னை பெரம்பூரிலுள்ள ரெயில்வே மருத்துவமனையில் இந்தியாவில் முதல்முறையாக கரோனரி ஆர்டரி பைபாஸ் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தவராவார். மருத்துவர் செரியனின் மருத்துவ சேவையைப் பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே.எம்.செரியன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

    இதய அறுவை சிகிச்சை துறையில் மருத்துவர் செரியன் ஆற்றிய பங்களிப்புகள் தனி முத்திரையை பதித்துள்ளது. செரியனை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள் என்று புதுச்சேரி சபாநாயகர் செல்வம் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    AoH (Academic of Hypnosis) மற்றும் InSPA (Indian School Pysichology Association) இணைந்து புதுச்சேரி பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் 2 நாள் சர்வதேச மாநாட்டை நடத்தியது.

    இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது, புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று பேசினார். அவர் கூறிய கருத்து மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து புதுவை சபாநாயகர் மேலும் கூறியிருப்பதாவது:-

    தனியார் பள்ளி மாணவர்களின் மனநிலையே வித்தியாசமாக தான் இருக்கும். தனியார் பள்ளிகளின் பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் சைக்கோ போன்றுதான் இருப்பார்கள்.

    9 ம் வகுப்பு படிக்கும்போதே 10ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். 11ம் வகுப்பு படிக்கும்போதே 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை முடித்துவிடுவார்கள். அந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் மனநிலையை மாற்றிவிடுகின்றனர்.

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருந்தாலும், உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×