என் மலர்
பீகார்
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார்.
- 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இதற்கிடையே ஆர்ஜேடியின் கோட்டையாகக் கருதப்படும் ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் இறுதிக் கட்டம் வரை நடந்த பரபரப்பான போட்டியில், ஆர்ஜேடி தலைவரும் மகாகத்பந்தன் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் சுமார் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆரம்பத்தில் முன்னிலை வகித்த தேஜஸ்வி யாதவ், ஒரு கட்டத்தில் பின்தங்கினார். கடைசி கட்டம் வரை பரபரப்பான போட்டியைக் கண்ட ரகோபூர், இறுதியாக தேஜஸ்வி யாதவை வெற்றியாளராக முடிசூட்டியது.
முன்னதாக, இந்த சட்டமன்றத் தொகுதியை அவரது தந்தை லாலு பிரசாத் யாதவ் மற்றும் தாய் ராப்ரி தேவி ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
அதன் பிறகு, தேஜஸ்வி யாதவ் 2015 முதல் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2020 சட்டமன்றத் தேர்தலில், அவர் இந்தத் தொகுதியில் இருந்து 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை பாஜக தனது வேட்பாளராக சதீஷ் குமார் யாதவை நிறுத்தியது. முன்னதாக 2010 ஆம் ஆண்டு ஜேடியு வேட்பாளராகப் போட்டியிட்ட சதீஷ் குமார் யாதவ், ராப்ரி தேவியை தோற்கடித்திருந்தார்.
- பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
- ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
மாலை 5.30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக 26 இடங்களிலும், ஜேடியு 12 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.
ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் மிகப்பெரிய தோல்விக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) மற்றும் பாஜக தான் காரணம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் எஸ்.ஐ.ஆர் ஒரு பெரிய தேர்தல் சதி என்றும், பாஜக அதைப் பயன்படுத்தி ஒரு பெரிய அரசியல் மோசடியைச் செய்ததாகவும் அகிலேஷ் குற்றம் சாட்டினார்.
மேலும், பீகாரில் செயல்படுத்தப்பட்ட SIR விளையாட்டை மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசம் தொடங்கி வேறு எந்த மாநிலத்திற்கும் கொண்டு வர முடியாது.
ஏனென்றால் இந்தத் தேர்தல் சதி இப்போது அதிகமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல், அவர்கள் இந்த விளையாட்டை மீண்டும் விளையாட நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
CCTV போல நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பாஜகவின் நோக்கங்களை நாம் அம்பலப்படுத்த வேண்டும். பாஜக ஒரு அரசியல் கட்சி அல்ல, அது ஒரு மோசடி" என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- மொகமா தொகுதியில் வாக்கு சேகரித்த ஜன் சுராஜ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
- விசாரணையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் படுகொலை செய்யப்பட்டார். விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றுள்ளது. கொலை வழக்கு பதியப்பட்டாலும் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
- களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை
- காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது.
243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு கடந்த நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் மதிய நிலவரப்படி முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு இடம்பெற்ற பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரம் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் தருவாயில் உள்ளது.
குறிப்பாக 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மதியம் 1 மணி நிலவரப்படி, 4-5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை தேர்தல் படுதோல்வியாக அமைந்துள்ளது.
வாக்காளர் அதிகார யாத்திரை, வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள், வாக்காளர் பட்டியல் திருத்த எதிர்ப்பு என பல விஷயங்களை பீகாரில் ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் முன்னெடுத்தபோதும் அது அக்கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
வாக்கு திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் களத்தில் சிறிதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
இந்த விவகாரங்கள் எடுபடவில்லை என்று களத்தில் தெளிவாக தெரிந்தபோதும் தலைமை அதைக் கண்டுகொள்ளவில்லை என்று அக்கட்சியினரே தெரிவிக்கின்றனர்.
அதுவும் ராகுல் காந்தி மக்கள் அதிகார பயணம் மூலம் பிரசாரம் மேற்கொண்ட அனைத்து தொகுத்திகளிலும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி காட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.

காங்கிரசின் இந்த தோல்வி குறித்து அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். குறிப்பாக கட்சித் தலைவர்கள் இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) மற்றும் சிறுபான்மையினர் நோக்கி தனது கவனத்தை திருப்பி கையில் எடுத்த சமூக நீதிக் கொள்கை காங்கிரசின் பாரம்பரியமான உயர் வகுப்பு வாக்குகளை மேலும் விலக்கி உள்ளது.
பிறப்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (EBS) பிரிவினர், மற்றும் பீகார் பெண்களின் வாக்குகளும் காங்கிரசுக்கு கிடைக்காதது, அம்மக்கள் முதல்வர் நிதிஷ் குமாரின் கண்கவர் திட்டங்களில் திருப்தியடைந்ததையே காட்டுகிறது.
பாஜக, ஜேடியு மற்றும் லோக் ஜனசக்தி கட்சி போன்ற என்டிஏ கூட்டணி கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு தாவிய பலரை உடனடியாக வேட்பாளராக்கியது கட்சிக்கு பின்னடைவைவாக அமைந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் போட்டியிட்ட 61 சீட்களில் 10 தொகுதிகளில் கட்சி தாவியவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ஒருபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ கடுமையாக எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், அதனுடன் தொடர்புடைய தலைவர்களுக்கு சீட் வழங்கியது காங்கிரஸின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியது என கூறப்படுகிறது.
அதேநேரம் பிரசார களத்தை பொறுத்தவரை ராகுலும் தேஜஸ்வியும் ஒரே மேடையில் ஓரிரு முறை மட்டுமே தோன்றினர். இது இரண்டு கட்சியின் இணக்கம் மற்றும் நிலைத்தன்மை குறித்த பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

அதேநேரம் மாநிலத்தின் நீண்ட கால முதல்வரான நிதிஷ் குமார் மற்றும் ஸ்திரமான தேசியா தலைமை பிம்பம் கொண்ட பிரதமர் மோடி பீகார் மக்களுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைத்துள்ளனர்.
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட பிரமாண்டமான திட்டங்களை தேஜஸ்வி அறிவித்தபோதும் அவற்றின் சாத்தியம் குறித்த சந்தேகங்களும் நிலவின.
ஆர்ஜேடிக்கு இந்த தேர்தல் மாநில அளவில் தோல்வியை தந்திருந்தாலும், தேசிய கட்சியான காங்கிரசுக்கு இந்த ஒற்றை இலக்க வெற்றி முன்னெப்போதும் இல்லாத பின்னடைவியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்ததில் காங்கிரஸ் தலைவர்கள் பல பல சிக்கல்களை அடையாளம் கண்டாலும், இந்த படுதோல்வி யாரும் எதிர்ப்பாராத அடியாகவே அமைந்துள்ளது.
- கடந்த 2020 தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
- இந்த தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 207 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கடந்த தேர்தலை விட நிதிஷ் குமார் கட்சி (ஐக்கிய ஜனத தளம்) இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
கிசான்கஞ்ச் தொகுதியில் முகமது கம்ருல் ஹோடா 19ஆவது சுற்றுக்குப் பிறகு 24,058 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். பாகல்பூர் தொகுதியில் 15 சுற்றுக்குப் பிறகு அஜீத் சர்மா 4797 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
குதும்பா தொகுதியில் பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பின்தங்கிய நிலையில் உள்ளார்.
- 1995 ஆம் ஆண்டு 4 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
- 2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.
பீகாரில் கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போது 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
பொதுவாக தேர்தலின்போது வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறும். இதனால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயமும் ஏற்படும். வாக்குச்சாவடிகளில் இயந்திரம் வேலை செய்யவில்லை. வாக்கு அளிக்க அனுமதிக்கவில்லை. கள்ள ஓட்டு செலுத்திவிட்டனர் என குற்றச்சாட்டு எழும். இதனால் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்படும்.
ஆனால் பீகாரில் முதன்முறையாக வாக்குப்பதிவின்போது வன்முறையால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு என்பது இல்லை.
கடந்த 1985 சட்டசபை தேர்தலின்போது 63 பேர் உயிரிழந்துள்ளனர். 156 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடபப்ட்டது.
1990 தேர்தலின்போது வாக்குப்பதிவு வன்முறை தொடர்பாக 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
1995ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறை வெடித்ததாலும், வாக்காளர் பட்டியலில் முறைகேடு காரணமாகவும் டி.என். சேஷன் நான்கு முறை தேர்தலை ஒத்திவைத்தார்.
2005ஆம் ஆண்டு 660 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடைபெற்றது.
- ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
- ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது.
பீகாரில் சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 11ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெற்றது. சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) பாஜக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகியவை இடம் பெற்றிருந்தன.
அதேபோல் மகாபந்தன் இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் , காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இதனால் இந்த தேர்தல் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையான இடத்தை பிடித்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 42 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், கட்சி 23 இடங்களில் முன்னிலை வகித்து, என்டிஏ கூட்டணிக்கு பக்கபலமாக இருந்துள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி கடந்த 2020 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற தற்போதைய தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி முக்கிய வளர்ச்சியை பெற்றுள்ளது.
மொத்தத்தில், என்டிஏ கூட்டணி ஒரு வலுவான வெற்றியை நோக்கிய நிலையில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பெரிய அளவில் கை கொடுத்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோல், இந்த கூட்டணி பலத்தால் சிராக் பஸ்வான் மாபெறும் வெற்றிப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது.
- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
பீகாரில் இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 130-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் 10 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.
- தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது.
- காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறு 46 மையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் என்.டி.ஏ. கூட்டணி 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகிக்கிறார்.
+3
- மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.
வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.
- பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
- 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது.
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.
மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.
பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இன்று பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.
மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
- நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.






