search icon
என் மலர்tooltip icon

    பீகார்

    • கடந்த முறை பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் தலா 17 இடங்களில் போட்டி.
    • இந்த முறை பா.ஜனதா அதே 17 இடங்களில் போட்டியிடுகிறது. நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரு இடம் குறைக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுடன் தேசிய கட்சிகள் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள விரும்பும்.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பா.ஜனதாவுடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வராக இருந்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ் குமார், 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 40 இடங்களை கொண்ட பீகாரில் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவுக்கு 17 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16 இடங்களும், சிராக் பஸ்வானின் (மறைந்த ராம் விலாஸ் பஸ்வான்) எல்ஜேபி கட்சிக்கு ஐந்து இடங்களும், உபேந்த்ரா குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மஞ்ஜி ஆகியோருக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பீகாரில் நிதிஷ் குமார் கட்சி பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் போட்டியிட்டதில்லை. முதன்முறையாக ஒரு இடம் குறைவாக பெற்றுள்ளது. இதன்மூலம் அரசியல் களத்தை பா.ஜனதா மாற்றி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ல் பாஜனதா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. சிராக் பஸ்வானின் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது
    • பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்றும் இறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு பீகாரில் 8 எம்.பி. தொகுதியும், உத்தர பிரதேசத்தில் 2 தொகுதியும் தருவதாக கூறியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இந்த கட்சிக்கு 6 இடங்கள் மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

    • பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக 6 தொகுதிகள்தான் தருவோம் என்கிறது பா.ஜனதா.
    • சிராக் பஸ்வானுக்கு 8 தொகுதிகளுடன், உ.பி.யில் 2 தொகுதிகள் கொடுக்க முன்வரும் இந்தியா கூட்டணி.

    பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் கட்சி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம் பிடித்திருந்தன. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியிருந்தது.

    இந்த முறையும் இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பிரிந்து பசுபதி பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

    2019-ல் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு இடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வாக் அதே ஆறு தொகுதிகளை கேட்கிறார். அதேவேளையில் பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக ஆறு தொகுதிகள் தருகிறோம். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு தனியாக ஆறு இடங்கள் தர முடியாது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணி அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து, கடந்த முறை லோக் ஜன சக்தி போட்டியிட்ட அதே ஆறு இடங்களை தருகிறோம். மேலும் கூடுதலாக இரண்டு தொகுதிகள் வழங்குகிறோம். அத்துடன் உத்தர பிரதேசத்தில் இரண்டு இடங்கள் தருகிறோம் எனத் தெரிவித்து, சிராக் பஸ்வானை இந்தியா கூட்டணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறது.

    பசுபதி பராஸ்க்கு பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. அரசில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும், சிராஜ் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளம் மற்றம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும், பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசவில்லை. அவர் ஏற்கனவே பிரதமர் மோடியை ராமர் என்றும், தன்னை ஹனுமான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    2020-ல் பா.ஜனதா உடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிராக் பஸ்வான் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.

    மேலும் சிராக் பஸ்வான்- பசுபதி பராஸ் இடையே ஹஜிபுர் தொகுதியை பெறுவதில் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆக மொத்தத்தில் பா.ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிராக் பஸ்வான் இந்தியா கூட்டணி வந்தால் அது சாதகமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    • ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது.
    • அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பீகாரில் இதற்கு முன்னதாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஷ்டிரிய ஜனதாதள கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என விமர்சித்திருந்தார்.

    இது தொடர்பாக அக்கூட்டத்தில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ், "நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் கிடையாது. ஆனால் எனக்கு நல்ல குடும்பம் உள்ளது. எனது உடல்நிலை பாதிக்கப்பட்ட பொழுது எனது மகள் ரோஷினி அவரது கிட்னியை எனக்கு தானமாக கொடுத்தார் என்று பேசினார்.

    பீகார் பல சிறந்த ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. இதே காந்தி மைதானத்தில், நாட்டின் பெரிய தலைவர்கள் பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்தியுள்ளனர். பீகார் என்ன முடிவு எடுக்கிறதோ அதையே நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாளை கூட அதுதான் நடக்கப்போகிறது

    மேலும், பிரதமர் மோடி இந்து கிடையாது. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்.

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்து வருகின்றனர்.

    • தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.
    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது

    பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மத்தியப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளி வைத்து விட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "15 மணி நேரம் தொடர் மழை, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லட்சக் கணக்கான மக்கள், குறுகிய நேரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் என அனைத்தையும் மீறி, உங்கள் அளப்பரிய அன்பினாலும், தளராத ஆதரவினாலும், அபரிமிதமான ஒத்துழைப்பினாலும் இந்த சாதனைப் பேரணி நிறைவு பெற்றது" என தெரிவித்துள்ளார்.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    • பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

    பாட்னா:

    பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

    சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

    பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

    இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

    வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    • 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.
    • மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க. உள்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற புதிய அமைப்பை உருவாக்கின.

    பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகியதால் அந்த கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு செய்வதிலும் இந்தியா கூட்டணியில் சலசலப்பு காணப்படுகிறது.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய 4 நகரங்களில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். ஆனால் அவர்களால் பொதுவான குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்க இயலவில்லை.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் முக்கிய நகரங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு ஆலோசனை நடந்து வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பு முதல் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. அதுபோல முதல் பிரமாண்ட கூட்டத்தையும் அந்த நகரிலேயே நடத்த தீர்மானித்துள்ளனர். வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். லாலு பிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

    தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்று தெரிகிறது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 20 கட்சி தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார்கள்.

    இதன் தொடர்ச்சியாக மற்ற நகரங்களிலும் இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    • பீகாரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர்.

    தேவ்காளி என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. அதன்பின் ஜீப்பும், பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதின.

    இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகாரில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம்
    • சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தில் தனது பையிலிருந்த ₹35 காணாமல் போனதால், 122 மாணவர்களை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று சத்தியம் செய்ய வைத்த ஆசிரியர் நீட்டூ குமாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆசிரியரின் இச்செயலை பொறுத்துக்கொள்ளாத மாணவர்களின் பெற்றோர் புகாரளித்த நிலையில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    கடந்த புதன்கிழமை (பிப் 21) பள்ளிக்கு வந்த ஆசிரியர் நீட்டூ குமாரி, தனது பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை கொண்டு வரச் சொல்லி ஒரு மாணவருக்கு சொல்லியுள்ளார். பின்னர் அவர் தனது பையிலிருந்த 35 ரூபாய் காணாமல் போனதை கண்டுபிடித்துள்ளார்.

    பின்னர் ஒவ்வொரு மாணவர்களிடமும் அவர் பணம் காணாமல் போனதை பற்றி விசாரித்துள்ளார். அதில் மாணவர்கள் சொன்ன பதிலால் திருப்தியடையாத ஆசிரியர், மாணவர்களை பக்கத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் திருடவில்லை என்று சத்தியம் செய்ய வைத்துள்ளார். சத்தியம் செய்தும் ஆசிரியருக்கு பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×