என் மலர்
ஆந்திர பிரதேசம்
- முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம்.
- 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர்.
திருப்பதி:
திருப்பதி மாவட்டம், சந்திரகிரி மண்டலம், கொத்தகனாம்பட்லா கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வீடுகள், கொட்டகைகள், வைக்கோல் போர் உள்ளிட்டவை திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவம் ஆந்திரா தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிராமத்தில் சிலர் ஏன் இப்படி நடக்கிறது என்று புரியாமல் அமானுஷ்ய வழிபாடுகள் செய்தனர். அந்த கிராமத்தை துரதிஷ்டம் பிடித்துள்ளதாகவும், கெங்கையம்மன் திருவிழா நடைபெறாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் வதந்திகள் பரவியது. இதனால் கிராம மக்கள் நடுங்கினர். சிலர் ஊரை விட்டு தற்காலிகமாக வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி, கலெக்டர் வெங்கடரமண ரெட்டி, அதிகாரிகள், எஸ்.வி.பல்கலைக்கழக வேதியியல், இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கிராமத்திற்கு வந்தனர். பயப்பட வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உண்மையான காரணத்தை கண்டறியும் வகையில், கிராமங்களில் உள்ள 18 இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை போலீசார் இறுதியாக கண்டுபிடித்தனர். அதே கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஒரு மாதமாக 8 வீடுகள் மற்றும் 3 கொட்டகை, வைக்கோல் போர்களுக்கு தீ வைத்தது தெரிய வந்தது.
தாயின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பழிவாங்கும் எண்ணத்தில் கொட்டகைகள் வைக்கோல் போர், போன்றவற்றுக்கு தீ வைத்துள்ளார். தற்போது இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.32,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து சந்திரகிரி இன்ஸ்பெக்டர் ஓபுலேசு ஆகியோர் கூறியதாவது:-
முதலில் செய்வினை செய்யும் மந்திரவாதிகளை சந்தேகித்தோம். பின்னர் ஜாலியாக சுற்றித்திரிபவர்களை, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த இளைஞர்களை பிடித்து தங்களது பாணியில் விசாரணை செய்தோம். பின்னர் அவர்களை அனுப்பி வைத்து, அவர்களின் நடத்தையை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். கிராமம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இருப்பினும், 4 நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை, மகளிர் போலீசார் கண்காணித்து வந்தனர். ஒரு பெண் போலீஸ்காரர் இளம்பெண் வீட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து வந்தார். தீ விபத்து நடந்த நான்கைந்து இடங்களில் ஒரே மாதிரியான தீப்பெட்டிகள் இருந்தன.
இளம்பெண்ணின் வீட்டில் உள்ள தீப்பெட்டியுடன் பொருந்தியதால் இளம்பெண்ணை பிடித்து விசாரணை செய்ததில் தனது தாயின் நடத்தை சரியில்லாததால் அவரை மாற்றவே கிராமத்தில் தீ வைத்ததாக இளம்பெண் ஒப்புக்கொண்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
- உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் ராய் சோட்டி, பசவலாவாண்ட்ல பள்ளியை சேர்ந்தவர் உத்தண்ணா (வயது 40).
இவர் ஏற்கனவே வழக்கு ஒன்றில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் வெளியே வந்தார். அங்குள்ள ஒரு வீட்டில் பெற்றோர் வேலைக்கு சென்றதால் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
இதனை அறிந்த உத்தண்ணா அவரது வீட்டிள் நுழைந்தார். சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி கத்தி கூச்சலிட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உத்தண்ணா சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதை கண்டு ஆத்திரம் அடைந்தனர்.
பொதுமக்கள் உத்தண்ணாவை மடக்கி பிடிக்க முயன்றனர். அவர்களை தாக்கி விட்டு உத்தண்ணா தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விரட்டிச் சென்ற பொதுமக்கள் முத்தண்ணா மீது சரமாலியாக கற்களை வீசி தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராய் சோட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உத்தண்ணா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- நேற்று 84,539 பேர் சாமி தரிசனம் செய்தனர். 39,812 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள மலைப்பகுதி மிகவும் புனிதமான தலமாக கருதப்படுகிறது.
இதனால் மலை மீது பீடி, சிகரெட், மது, மாமிசம் மற்றும் வாகனங்களில் வேற்று மதம் சார்ந்த ஸ்டிக்கர்கள், சாமி படங்கள், கட்சி கொடி, பேனர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள் மலை அடிவாரத்தில் சோதனை செய்யப்படுகிறது.
தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை ஏழுமலையான் கோவில் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து மதுபாட்டில்களை விஜிலென்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜசேகர் என்பவரை கைது செய்தனர்.
தேவஸ்தான வருவாய்த்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த ஒருவர் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று 5 வாலிபர்கள் ஒரு காரில் திருமலைக்கு வந்தனர். அவர்களது காரில் முன் பகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடி கட்டப்பட்டு இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் கொடியை அகற்றாமல் திருமலைக்கு காரை அனுமதித்தனர்.
திருப்பதியில் கடந்த மாதம் பயங்கரவாதி புகுந்ததாக மிரட்டல் விடுத்தனர். பாதுகாப்பை மீறி கோவிலில் செல்போனை கொண்டு சென்று வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
தற்போது மது சிக்கியதன் மூலம் திருப்பதி மலையில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புனித தன்மை கொண்ட திருமலையில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 84,539 பேர் சாமி தரிசனம் செய்தனர். 39,812 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் வசூலானது. ரூ.300 டிக்கெட் தரிசனத்தில் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்றவர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர். நேரடியாக இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
- கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா ஜெகநாதபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
கோவில் நிர்வாகிகள் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 3 கிலோ எடையுள்ள தங்க சரிகை புடவை கொண்டு அலங்காரம் செய்ய முடிவு செய்தனர்.
இதையடுத்து 3 கிலோ தங்கத்தால் ரூ.2 கோடி மதிப்பிலான தங்க புடவை தயார் செய்யப்பட்டது. நேற்று கோவிலில் தங்கத்திலான புடவையால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.
இதை அறிந்த சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அங்கு நடந்த பூஜையில் அம்மனை தரிசித்து சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில சட்டப்பேரவை துணைத்தலைவர் கொலகட்லா வீரபத்ரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- வியாழக்கிழமை திருப்பாவாடை சேவை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது.
- நேரில் வரும் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இடைவேளை தரிசனம் வழங்கப்படும்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கியதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட 30 மணியில் இருந்து 40 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் இன்னும் அதிகமாகிறது.
இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி ெவளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதம் 30-ந்தேதி வரை சாமி தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசன சேவைகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமை காலை சேவைக்கான விருப்ப ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, 20 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
வியாழக்கிழமை திருப்பாவாடை சேவை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. இது, 30 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனங்களுக்கு பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரும் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இடைவேளை தரிசனம் வழங்கப்படும். இதனால் தினமும் 3 மணி நேரம் மிச்சமாகும்.
இந்த முடிவுகள் பல மணி நேரம் கிலோ மீட்டர் கணக்கில் தரிசன வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழி வகுக்கும். இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.
இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.
பக்தர்கள் இதைக் கவனித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப்பட்டது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது.
- பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.
- கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி மண்டலத்தில் கொத்தாசனம்பட்லா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
மேலும் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு அருகில் வைக்கோல்களை தனியாக அடுக்கி வைத்துள்ளனர்.
பகலில் வீடுகளை பூட்டிவிட்டு விவசாய நிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்ட வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பல வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல்களும் பற்றி எரிந்தன. ஆனால் இவற்றிற்கு யாரும் தீ வைத்ததாக தெரியவில்லை. திடீர் திடீரென வீடுகளில் தீ பற்றி எரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
கிராமத்தில் சாமி குத்தம் காரணமாக தீ பற்றி எரிவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து அங்குள்ள கோவிலில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். மேலும் வீடுகளிலும் விளக்கேற்றி பரிகார பூஜை செய்தனர்.
அதற்கு பிறகும் பூட்டிய வீடுகள் தீ பிடித்து எரிந்தது.
இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மாவட்ட வருவாய் அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தனர்.
அதனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வகத்தின் அறிக்கை வந்தவுடன் தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என திருப்பதி கலெக்டர் கூறினார்.
இதுகுறித்து சந்திரகிரி செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி எம்.எல்.ஏ கூறுகையில், தீ விபத்துகளின் மாதிரிகளை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளோம். காரணம் விரைவில் தெரியவரும். அடுத்து என்ன செய்வது என்று பார்ப்போம். ஆங்காங்கே எரியும் தீ பற்றி வரும் கட்டுக்கதைகள், வதந்திகளை நம்பாதீர்கள், அதற்கான காரணங்கள் விரைவில் தெரிய வரும், வேறு கிராமத்தில் இப்படி நடக்காமல் கவனமாக இருப்போம்.
மாவட்ட வருவாய் அலுவலர் கனக நரசா ரெட்டி, சுற்றுச்சூழல் பேராசிரியர் தாமோதர், தீயணைப்பு அலுவலர் ரமணய்யா, போலீஸ் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி தீ விபத்து எரிவது குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பதி:
பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர்.
பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள் ஜி.என் சி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.
நேற்று திருப்பதி மலையில் தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
தன்னுடன் வந்தவர்களின் குழந்தையுடன் ஆதியா சென்று இருக்கலாம் என திருமலை முழுவதும் தேடிப் பார்த்தனர். இரவு வரை தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் சிறுமி மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியை எங்காவது பார்த்தால் உடனடியாக தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
- கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.
- ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.
தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான கோபால், எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்தார்.
கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.
பெங்களூரு சென்று கலர் பிரிண்டர், தடிமனான வெற்று பாண்ட் பேப்பர்கள், கலர்கள், பச்சை கலர் நெயில் பாலிஷ் வாங்கி வந்தார். 6 மாதங்கள் வீட்டில் ரகசியமாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை அச்சடித்து வந்தார். ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு இழைக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசினார்.
அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்தார். கோபால் வழக்கமாக வார சந்தைகளில் டீ விற்பதால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீது கடைக்காரர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபால் வீட்டில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை சந்தைகளில் புழக்கத்தில் விடுவதை தொடர்ந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊரில் உள்ள காய்கறி கடையில் ரூ.500 கொடுத்து ரூ.50 மதிப்புள்ள காய்கறிகளை வாங்கினார்.
கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தார். அது போலி ரூபாய் நோட்டு என தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோபாலை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் வெற்று வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர்.
கோபால் கடந்த 6 மாதங்களாக எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார் எவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
- இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
- 25-ந்தேதி அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி 25-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இன்று (சனிக்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம், 22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
25-ந்தேதி காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடக்கிறது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
- பிரம்மோற்சவ விழா 26-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
- ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
அதையொட்டி 25-ந்தேதி மாலை அங்குரார்பணம், 26-ந்தேதி கொடியேற்றம், 30-ந்தேதி கருட வாகன வீதிஉலா, ஜூன் 2-ந்தேதி தேரோட்டம், 3-ந்தேதி சக்கர ஸ்நானம் ஆகியவை நடக்கிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பக்தி கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
- தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
- இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகள் பக்தர்கள் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர்.
பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்தவதற்காக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. சிபாரிசு கடித தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தரிசன நேரம் பாதியாக குறைந்துள்ளது. இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்று ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 3 மணி நேரத்திலும், இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 81,833 பேர் தரிசனம் செய்தனர். 33,860 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






