என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    ஆந்திரா ஸ்பெஷலான இந்த ரைஸ் பால்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - ஒரு கப்,
    எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,  
    இஞ்சி - சிறிய துண்டு,
    பச்சை மிளகாய் - 4,
    பெருங்காயம் - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை: 

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும்.

    பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

    பிசைந்த மாவை ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

    பின்னர், சீடை போல உருட்டி, வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சீடைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஆந்திரா ரைஸ் பால்ஸ் ரெடி.

    குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம். அதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்தால் 1 வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான வெரைட்டி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன்,
    சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    மாங்காய் தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை:

    அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும்.

    உருளைக்கிழங்கு பாதியளவு வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் கரம் மசாலாதூள், தனியாதூள், மிளகாய்தூள், சீரகத்தூள், மாங்காய் தூள் சேர்த்து நன்கு வதக்கி நெய், சாதம், கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    சூப்பரான உருளை மசாலா ரைஸ் ரெடி.

    குழந்தைகளுக்கு இதன் ருசி மிகவும் பிடிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஓர் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், கேழ்வரகு கொழுக்கட்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - ஒரு கப்
    பாசிப் பருப்பு - ஒரு கைப்பிடி
    தேங்காய்த் துருவல் - கால் கப்
    நாட்டுச் சர்க்கரை - கால் கப்
    ஏலக்காய் - 2
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    பாசிப்பருப்பை ஒரு வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் குக்கரில் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 1/2 கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மட்டனை எப்படி செய்தாலும் அது சுவை நிறைந்ததுதான். அந்த வகையில் சில்லி மட்டனை காரசாரமாக எப்படி செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் : அரை கிலோ
    வெங்காயம் - 4
    தக்காளி - 1
    தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்
    கரம் மசாலா பொடி - 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் சாஸ் - 1/2 டீஸ்பூன்
    கேசரி தூள் - ஒரு சிட்டிகை
    மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் பேஸ்ட் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மட்டன் வேக வைத்த நீர் - 1 கப்



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டனை நன்றாக கழுவி சதுர வடிவில் சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்துக் வேக வைத்து கொள்ளவும்.

    மட்டன் வெந்ததும் தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் உப்பு, தக்களி சாஸ், சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் சாஸ், சோயா சாஸ் என அனைத்து சாஸ் வகைகளையும் சேர்த்து நன்றாக கிளறவும்.

    அடுத்ததாக வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து எடுத்து வைத்துள்ள மட்டன் தண்ணீர், கேசரி தூள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு கொதிக்க விடுங்கள்.

    தண்ணீர் எல்லாம் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கிவிடுங்கள்.

    சுவையான சில்லி மட்டன் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். இன்று முட்டைகோஸ் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்
    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    காய்ந்த மிளகாய் - 4
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
    பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
    இஞ்சி - ஒரு டேபிள்ஸ்பூன்
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - சிறிதளவு.



    செய்முறை :

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பட்டை, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் மிளகு - சீரகத்தூள், வேர்க்கடலை போட்டுக் கிளறவும்.

    அடுத்து அதில் ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.

    அடுத்து துருவிய முட்டைகோஸ், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேகவிட்டு இறக்கவும்.

    முட்டைகோஸ் நன்றாக வெந்தும் இறக்கி வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சுவையான சத்தான முட்டைகோஸ் சாதம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோதுமை ரவையில் கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கோதுமை ரவையை வைத்து சூப்பரான கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பால் - 2 கப்
    தண்ணீர் - 2 கப்
    சர்க்கரை - 1 கப்
    ஏலக்காய்த் தூள் 1/2 தேக்கரண்டி
    நெய் - தேவையான அளவு
    முந்திரி பருப்பு - சிறிதளவு
    காய்ந்த திராட்சை - சிறிதளவு
    கேசரி பவுடர் - சிறிதளவு



    செய்முறை :

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் கோதுமை ரவையை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.

    கோதுமை ரவை நன்றாக வாசனை வந்தவுடன் அதில் பால் ஊற்றவும் அடுத்து தண்ணீர் கலந்து கிளறி குக்கரை மூடி 2 விசில் வைத்து வேகவிடவும்.

    பின்னர் சர்க்கரை சேர்த்து கிளறி சில நிமிடங்களுக்கு பிறகு கேசரி பவுடர் கலந்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து கேசரியுடன் சேர்த்து கலந்தால் கோதுமை ரவா கேசரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டு கொள்ள வேர்க்கடலை குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை வேர்க்கடலை - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி சாறு - 2 டீஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    பாவ் பாஜி மசாலா - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    சீரகம் - 1/4 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு


     
    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேர்க்கடலையை, இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சாற்றை விட்டு, ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

    பின் அதில் மல்லி தூள், மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்.

    அடுத்து அதில் வேக வைத்துள்ள வேர்க்கடலையை போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சுவையான வேர்க்கடலை குழம்பு ரெடி!!!

    சாதம், சப்பாத்தி, பாவ் பாஜி போன்றவற்றுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும். 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அவலில் புட்டு, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவல் வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாயாசம் செய்வது மிகவும் சுலபம்.
    தேவையான பொருட்கள் :

    கெட்டி அவல் - 1/2 கப்
    வெல்லம் - 1/4 கப்
    பால் - 2 கப்
    ஏலக்காய் - 1
    முந்திரிப்பருப்பு - 5
    நெய் - 2 தேக்கரண்டி
    உப்பு - ஒரு சிட்டிகை



    செய்முறை :

    வாணலியில், நெய் ஊற்றி, முதலில் முந்திரியை பொன்னிறமாக, மிதமான தீயில் வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.

    அதே நெய்யில் அவலை போட்டு பொரிந்து லேசாகும் வரை வறுக்கவும்.

    பாலை ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.

    பால் நன்றாக கொதித்து சுட்டி வரும் போது வறுத்த அவல், மற்றும் உப்பு சேர்த்து, மிதமான தீயில் பால் வற்றி, அவல் வேகும் வரை வைக்கவும்.

    1/2 கப் தண்ணீரில் வெல்லத்தை போட்டு சூடு செய்யவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி, வெந்த அவலில் சேர்த்து கலக்கவும்.

    ஏலக்காய், முந்திரி சேர்த்து கலந்து இறக்கவும்.

    வெல்லம் சேர்த்த பிறகு, 1 நிமிடத்தில் பாயசத்தை இறக்கிவிடவும். கொதிக்க வைக்க வேண்டாம்.

    சூப்பரான அவல் பாயாசம் ரெடி.

    கவனத்திற்கு

    அவல் நன்கு  வெந்தவுடன் தான் வெல்லம் சேர்க்கவேண்டும். வெல்லம் சேர்த்த பின் அவல் வேகாது. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஜவ்வரிசி, காய்கறிகள் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - ஒரு கப்
    உருளைக்கிழங்கு - 2
    பச்சை மிளகாய் - 5
    கேரட், கோஸ் - தலா ஒரு கைப்பிடி
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.

    இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஜவ்வரிசியை நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை ஊறவையுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசியை போட்டு அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், காய்கறித் துருவல், உப்பு, புதினா, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

    இந்தக் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து,வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்து வைத்த உருண்டைகளை போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஜவ்வரிசி போண்டா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இங்கு கடாய் சிக்கன் செய்வது எப்படி என்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை விடுமுறை நாட்களில் முயற்சித்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - அரை கிலோ
    வெங்காயம் - 3 (நறுக்கியது)
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    தக்காளி - 2 (நறுக்கியது)
    பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
    குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
    அரைத்த தக்காளி - 2 டேபிள் ஸ்பூன்
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    பட்டை - 1
    பச்சை ஏலக்காய் - 4
    கிராம்பு - 4
    பிரியாணி இலை - 1
    சீரகம் - 1 டீஸ்பூன்
    பிரஷ் க்ரீம் - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிது

    ஊற வைப்பதற்கு...

    தயிர் - 100 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
    மல்லி தூள் - 1 டீஸ்பூன்
    சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்



    செய்முறை:

    சிக்கனை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தும் சேர்த்து பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாய் மற்றும் தக்காளியை போட்டு உப்பு சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி இறக்கி ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மல்லி தூள், சீரகப் பொடி, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

    பின்னர் அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

    அடுத்து ஊற வைத்துள்ள சிக்கனை அத்துடன் சேர்த்து, தீயை அதிகரித்து 10 நிமிடம் பிரட்டி விட்டு வேக வைக்க வேண்டும்.

    சிக்கனில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், தீயை குறைத்து, அதில் கரம் மசாலா சேர்த்து கிளறிய பின்னர் வதக்கிய குடைமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, 1 கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.

    சிக்கனானது நன்கு வெந்ததும், வாணலியை இறக்கி, அதன் மேல் பிரஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்தால், கடாய் சிக்கன் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கை கொண்டு, அற்புதமான சுவையில் உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் செய்து, சாம்பார் சாதத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - 250 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
    எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு வெந்ததும் தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி, உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

    அடுத்து அதில் உப்பு சேர்த்து, தீயை குறைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.

    கடைசியாக மிளகுத் தூளைத் தூவி பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மிளகு ரோஸ்ட் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சூப்பரான இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
    தேங்காய் பால் - 2 டம்ளர்
    புளி - தேவைக்கேற்ப
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    சாம்பார் பொடி - தேவையான அளவு
    கடுகு, உளுந்து - சிறிதளவு
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    கருணைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர், புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

    கொதிக்கும் புளிக்கரைசலில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளையும் போட்டு நன்றாக வேகவிடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.

    சூப்பரான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×