என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. இன்று பாகற்காயை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பாகற்காய் - 1
    தேங்காய் துருவல் - 2 டேபிள் டீஸ்பூன்
    மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    வரமிளகாய் - 6
    புளி - 1 எலுமிச்சை அளவு
    வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு....

    எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1/4 டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
    கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை



    செய்முறை :

    பாகற்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்னர் துண்டுகளாக்கி அதில் உள்ள விதைகயை நீக்கி விட வேண்டும்.

    மல்லி, வரமிளகாய், சீரகத்தை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    சுத்தம் செய்த பாகற்காயில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்த பின் பாகற்காயில் இருந்து நீர் வெளியேற்றியிருக்கும். அந்த நீரை வெளியேற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்கு பிரட்டி விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்திருக்கும்.

    புளியை நீரில் நன்றாக கரைத்து கொள்ளவும்.

    மிக்ஸியில் வறுத்த மல்லி, சீரகம், வர மிளகாய், உப்பு, புளி மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த,
    பாகற்காயை போட்டு வதக்கவும்.

    பாகற்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் அரைத்த விழுதை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    தொக்கு நிறமானது அடர் சிவப்பு நிறத்தில் மாறியதும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பாகற்காய் தொக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் குல்ஃபியை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 2 கப்
    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    சாக்லேட் - 1 கப் (துருவியது)
    சர்க்கரை - அரை கப்
    பிஸ்தா, பாதாம் - நறுக்கியது சிறிதளவு



    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும், அத்துடன், பால் பவுடர் சேர்த்து கரண்டியில் கலந்து கொண்டே இருக்கவும்.

    பிறகு, ஒரு அடிகனமான வாய் அகண்ட வாணலியை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

    பால் அடிப்பிடிக்காத வகையில் கிளறிக்கொண்டே இருக்கவும்.

    பால் சுண்டி சற்று கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்..

    சர்க்கரை நன்றாக கரைந்ததும், அதில் பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.

    அத்துடன், சாக்லேட் சேர்த்து அது நன்றாக கரையும் வரை கிளறி சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்.

    இதனை ஒரு பேனில் ஊற்றி, 1 மணிநேரம் பிரிட்ஜில வைக்கவும்.

    பின்னர், இதனை எடுத்து மிக்சியில் போட்டு ஒருமுறை நன்கு அடித்து இந்த கூழை குல்பி மோல்டில் ஊற்றி, அதன் நடுவே குச்சியை வைத்து, மீண்டும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து சுமார் 5 மணி நேரம் கழித்து எடுக்கவும்.

    அவ்ளோதாங்க.. சுவையான சாக்லேட் குல்ஃபி சுவைக்க ரெடி..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹாட் சாக்லேட்டை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று எளியமுறையில் ஹாட் சாக்லேட்டை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    கோகோ பவுடர் - 1 டீஸ்பூன்
    இலவங்கப்பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கேற்ப
    உருகிய சாக்லேட்  - 2 டீஸ்பூன்
    துருவிய சாக்லேட் - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து குறைவான தீயில் பால் ஊற்றி சர்க்கரை போட்டு கரையும் வரை கிளறி விடவும்.

    ஒரு கிளாஸில் கோகோ, உருகிய சாக்லேட் சேர்த்து நன்கு கலக்கவும்.

    1 டீஸ்பூன் சூடான பாலை சாக்லேட்டில் கலந்து நன்கு ஸ்மூத்தாக கலந்து விடவும். அதன் மேலாக நுரை வர பாலை காய்ச்சி அதில் ஊற்ற வேண்டும்.

    இறுதியாக, இலவங்கப்பட்டை பவுடர், துருவிய சாக்லேட் போட்டு சூடான ஹாட் சாக்லேட்டை பரிமாறவும்..

    சூடான ஹாட் சாக்லேட் ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். நாளை சன்டே ஸ்பெஷலாக காராசாரமான முறையில் மீன் வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    முள் இல்லாத மீன் - அரை கிலோ
    தேங்காய் எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    அரைப்பதற்கு...

    சின்ன வெங்காயம் - 10
    இஞ்சி - 2 இன்ச்
    பூண்டு - 6 பற்கள்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - சிறிது
    தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்றாக பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால்,

    சன்டே ஸ்பெஷல் ஸ்பைசி மீன் வறுவல் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வயிற்று உப்பிசத்துக்கும், நெஞ்சு எரிச்சலுக்கும் இஞ்சி மிட்டாய் நல்லது. இந்த இஞ்சி மிட்டாயை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    இளசான இஞ்சி - 200 கிராம்
    சுத்தமான பாகு வெல்லம் - 300 கிராம்
    கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்



    செய்முறை

    இஞ்சியைத் தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளுங்கள்.

    வெல்லத்துடன் சிறிது தண்ணீர் ஊற்றிக் காய்ச்சுங்கள்.

    இளம் பாகு பதம் வந்ததும் இஞ்சி விழுது சேர்த்து, சிறிது நேரம் கிளறுங்கள்.

    கோதுமை மாவில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கிளறுங்கள்.

    நெய், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்துக் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி, துண்டுகள் போடுங்கள்.

    இப்போது சூப்பரான இஞ்சி மிட்டாய் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் டீ, காபியுடன் சாப்பிட காலிஃபிளவர் வடை சூப்பராக இருக்கும். இன்று இந்த வடையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    காலிஃபிளவர் - ஒரு கப்
    கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்
    கசகசா - கால் டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - ஒன்று



    செய்முறை

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காலிஃபிளவரை நன்றாக சுத்தம் செய்து பூக்களாக வெட்டி வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதில் பொடியாக நறுக்கிய காலிஃபிளவர் போட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    இன்னொரு கிண்ணத்தில் வடிகட்டிய காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், பச்சை மிளகாய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் காலிஃபிளவர் மசாலாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    சூப்பரான காலிஃபிளவர் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    தக்காளிப்பழம் - 2,
    மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.

    அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

    சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாங்காய் சீசன் தொடங்கி விட்டது. இன்று மாங்காயை வைத்து புளிப்பான, காரசாரமான துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாங்காய்  - 1,
    காய்ந்த மிளகாய் - 8,
    பச்சை மிளகாய் - 2,
    உ.பருப்பு - 1 கைப்பிடி,
    க.பருப்பு - 2 ஸ்பூன்,
    பெருங்காயம்   சிறு துண்டு,

    தாளிக்க

    எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை.



    செய்முறை

    மாங்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும உ.பருப்பு, க.பருப்பு இவைகளை பொன்னிறமாக வறுக்கவும்.

    பின்பு துருவிய மாங்காய், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.

    சூடு ஆறியவுடன் மிக்சியில் போட்டு மாங்காய் கலவையை அரைத்த பின்னர் பருப்பு கலவையை சேர்த்து கரகரப்பாய் அரைத்து எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் கலந்து பரிமாறவும்.

    சுவையான மாங்காய் துவையல் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நண்டில் சூப், வறுவல், கிரேவி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று நண்டை வைத்து சுவையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நண்டு - 400 கிராம்
    தக்காளி - 2
    பாசுமதி அரிசி - 300 கிராம்
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன்
    புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    தேங்காய் பால் - கால் கப்
    தயிர் - 4 ஸ்பூன்
    கரம் மசாலா - அரை ஸ்பூன்
    பட்டை - 2
    ஏலக்காய் -5
    அன்னாசிப்பூ - 2
    மல்லித்தூள் - 1 ஸ்பூன்
    எலுமிச்சை - 1
    நெய், எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, பட்டை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கலர் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, ப.மிளகாய், கொத்தமல்லி சேர்த்து வதக்கியதும்

    பின்னர் தயிர், மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள், கரம்மசாலா சேர்த்து கிளறி சுத்தம் செய்த நண்டை சேர்த்து கிளறி, போதுமான அளவு தேங்காய் பால் ஊற்றி, அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பத்து நிமிடங்கள் நண்டை வேக விடவும்.

    நண்டு நன்றாக வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள சாதத்துடன் மசாலா கலவையை சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் தம் கட்டி இறக்கினால் சுவையான நண்டு பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    அசைவ உணவுகளில் இறால் மிகவும் சுவையானது. இன்று உங்களுக்காக எளிய முறையில் இறால் சேமியா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சேமியா - 2 கப்
    இறால் - 1 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
    கொத்தமல்லி புதினா - தேவையான அளவு
    பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை - 1
    தயிர் - 1 கப்
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    நெய் - 1 மேசைக்கரண்டி
    எலுமிச்சம்பழம் - 1

    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நன்றாக கழுவிய இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா பவுடர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள, தயிர் சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சேமியாவை போட்டு முக்கால் பாகம் வேக வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூண்டு இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

    பூண்டு இஞ்சி பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளிவை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து புதினா, கொத்தமல்லி மற்றும் சீரக பவுடர் சேர்த்து வதக்கவும்.

    பின்னர் ஊறவைத்த இறாலை சேர்த்து வதக்கி, இறாலில் உள்ள தண்ணீர் வற்றி வேகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் முக்கால் பாகம் வேகவைத்த சேமியாவை இறாலுடன் சேர்த்து கிளறவும்.

    நன்கு உதிரியாக வரும் பருவத்தில் இறக்கி பரிமாறவும்.

    சுவையான சேமியா இறால் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம் பழம் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - இரண்டரை கப்,
    வெண்ணெய் - ஒன்றேகால் கப்,
    பால் - ஒன்றரை கப்,
    கண்டன்ஸ்டு பால் - 1 டின் (400 மிலி),
    பேரீச்சம்பழம் (பொடியாக நறுக்கியது) - அரை கப்,
    ஆப்ப சோடா - 1 டீஸ்பூன் (தலைதட்டி),
    பேக்கிங்சோடா - 2 டீஸ்பூன் (தலை தட்டி),
    வெனிலா எசன்ஸ் - 1 டேபிள்ஸ்பூன்,
    பொடித்த சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    2 டீஸ்பூன் மைதாவை தனியே எடுத்து வைத்துவிடுங்கள்.

    பின்னர் மீதி இருக்கும் மைதாவுடன் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தில் 2 டீஸ்பூன் மைதா சேர்த்து பிசறி வையுங்கள்.

    சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு குழையுங்கள்.

    பின்னர் கண்டன்ஸ்டு பால் சேருங்கள்.

    அத்துடன் பாலையும் மைதா, எசன்ஸையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

    கடைசியில் பேரீச்சம் பழம் சேர்த்து கலந்து, வெண்ணெய் தடவி, மைதா தூவிய ஒரு ட்ரேயில் ஊற்றி 180 டிகிரி சென்டிகிரேடில் பேக் செய்யுங்கள்.

    இப்போது சூப்பரான பேரீச்சம்பழ கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பல்வேறு வகையான வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கத்தரிக்காயை வைத்து சூப்பரான காரசாரமான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - ஒரு கப்
    பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - ஒரு கப்
    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
    புளித்தண்ணீர் - 2 கப்
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    தக்காளிச் சாறு - கால் கப்
    கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
    நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    அரைக்க :

    காய்ந்த மிளகாய் - 5
    தனியா - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    சின்னவெங்காயம், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பார்க்க பூப்போல இருக்கும்.

    பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி அரிசியை சில நிமிடங்கள் வறுத்துக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை போட்டு வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துகொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

    புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போட்டுக் கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிட்டு, வெந்ததும் புதினா, கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×