என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வட மாநில ஸ்பெஷலான கட்டா மிட்டா முரப்பாவை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முரப்பாவை நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்

    புளிப்பான மாங்காய் பெரியது - 1 கிலோ
    தண்ணீர் - 2 லிட்டர்
    சிட்ரிக் அமிலம் - 1 1/2 டீஸ்பூன்.
    சர்க்கரை - 1 1/2 கிலோ,



    செய்முறை :

    மாங்காயை தோல் சீவி விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ஒரு நாள் காய வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், சிட்ரிக் அமிலம் மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

    பின் இந்த மாங்காய் துண்டுகளை அதில் போட்டு 1/4 மணிநேரம் வேகவிடவும். சிறிது நேரமாகி வெந்து பாகும் மாங்காயும் சேர்ந்து முரப்பா பதமாக கெட்டியாக வந்து, சீனி தேன் மாதிரி வந்ததும் இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் நிரப்பவும்.

    இதனை ஒரு வாரம் கழித்து உபயோகிக்கவும்.

    புளிப்பும், இனிப்புமாக இருக்கும்.

    சிட்ரிக் அமிலத்தை கடைசியில் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    எலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும். இன்று எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலுமிச்சை - 1
    புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
    தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஜூஸ் ஜாரில் புதினா இலைகள், உப்பு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடித்து பருகவும்.

    இந்த ஜூஸ் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சப்பாத்தி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி அருமையாக இருக்கும். இன்று இந்த கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - 3
    உருளைக்கிழங்கு - 2
    தக்காளி - 1
    பூண்டு - 10 பல்
    இஞ்சி - சிறிதளவு
    பட்டை - சிறிதளவு
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    குடைமிளகாய், தக்காளியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக்கவும்.

    தக்காளி, பூண்டு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த விழுதை கொட்டி கிளறவும்.

    அடுத்து குடைமிளகாய், வேகவைத்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

    கிரேவி பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம்.

    உருளைக்கிழங்கு - குடைமிளகாய் கிரேவி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்துதர விரும்பினால் வெஜிடபிள் லாலிபாப் செய்து கொடுக்கலாம். இன்று இந்த லாலிபாப் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2,
    கேரட் - 1,
    பீட்ரூட் - 1,
    முட்டைக்கோஸ் - 100 கிராம்,
    பச்சைப்பட்டாணி - கால் கப்
    பன்னீர் - 4 சிறிய துண்டுகள்,
    கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.



    செய்முறை

    அனைத்து காய்கறிகளையும் நன்றாக வேக வைத்து சற்று ஆறியதும் மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்த காய்கறிகயை போட்டு அதனுடன் கரம் மசாலா, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மாவு போல் பிசைந்து கொள்ளுங்கள்.

    இந்த மசாலாவை சிறிய வட்டமாகத் தட்டி அதன் உள்ளே ஒரு பன்னீர் துண்டு வைத்து பந்தைப்போல் உருட்டி, அதில் லாலிபாப் ஸ்டிக் சொருகி வைக்கவும். இவ்வாறு மசாலா அனைத்திலும் செய்யவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் லாலிபாப் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    நாண், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் - பன்னீர் சப்ஜி. இன்று இந்த சப்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்
    தேவையான பொருட்கள் :

    பாலக்கீரை - ஒரு சிறிய கட்டு
    வேகவைத்த பச்சைப்பட்டாணி - 1 கப்
    மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    பன்னீர் - 100 கிராம்
    வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
    வெங்காயம், தக்காளி பெரியது - தலா 1
    முழு முந்திரிப்பருப்பு - 6
    கரம் மசாலாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    சீரகம், எண்ணெய், வெண்ணெய் - தாளிக்க



    செய்முறை :

    முந்திரியை ஊறவைத்து அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.

    பாலக்கீரையை சூடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்த பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பன்னீரையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுத்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய், வெண்ணெய் போட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் பொடித்த சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த் தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த முந்திரி விழுது, பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கொதி வந்ததும் இறக்கி விடவும்.

    சூப்பரான பாலக் - பன்னீர் சப்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 10
    தேங்காய்ப் பால் - 1 கப்
    பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
    தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)



    செய்முறை :

    மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

    இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

    தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

    சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    சூடான சாதம், தோசையுடன் சாப்பிட வெண்டைக்காய் குழம்பு அருமையாக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு வெண்டைக்காய் - 1/4 கிலோ,
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    காய்ந்த மிளகாய் - 2,
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    தக்காளி - 1,
    குழம்பு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், உப்பு,
    நல்லெண்ணெய் - தேவைக்கு,
    வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை - சிறிது.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு வதக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

    தக்காளி மசிய வதங்கியதும் புளிக் கரைசல், உப்பு, குழம்பு மிளகாய் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    அடுத்து வதக்கிய வெண்டைக்காயை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான வெண்டைக்காய் குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் தக்காளி பன்னீர். இன்று இந்த தக்காளி பன்னீரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - கால் கிலோ
    பச்சை மிளகாய் - 2
    தக்காளி - கால் கிலோ
    வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    சர்க்கரை - அரை தேக்கரண்டி



    செய்முறை :

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளியை போட்டு வேக வைத்து எடுத்து அதன் தோலை நீக்கி மசித்து விடவும்.

    பன்னீரை சிறிய துண்டுகளாக நறுக்கி வாணலியில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவேண்டும்.

    வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் மசித்த தக்காளி விழுதினை ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி கெட்சப், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    அதில் பொரித்து வைத்திருக்கும் பன்னீரை போட்டு ஒரு முறை பிரட்டி இறக்கவும்.

    சுவையான தக்காளி பன்னீர் ரெடி.

    தக்காளி கலவையை அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது. பன்னீரை அதிக தீயில் வறுக்கக் கூடாது

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு வித்தியாசமான, சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் எக் ஃபிங்கர்ஸ் செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 3
    சோள மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா தூள் - டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
    உப்பு - சுவைக்கு



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடி சமமான பாத்திரத்தில் இந்த முட்டை கலவையை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து கொள்ளவும்.

    வெந்ததும் அதை நீளமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சோள மாவு, கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மசாலா திக்காக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் வெட்டி வைத்துள் முட்டை துண்டுகளை மசாலாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான எக் ஃபிங்கர்ஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சப்பாத்தி, சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட முட்டை சால்னா அருமையாக இருக்கும். இன்று இந்த சால்னாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 4
    தக்காளி - 2
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    பச்சை மிளகாய் - 1
    புளி - பெரிய நெல்லி அளவு
    தேங்காய்ப்பால் - 1 கப்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    பூண்டு - 15 பல்
    மஞ்சள் தூள் - தேவைக்கு
    தனி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மிளகாய்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - தேவைக்கு
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை சிறிது தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து வெந்தயத்தை போட்டு லேசாக வறுத்த பின்னர் நல்லெண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள் சேர்க்கவும்

    அடுத்து தக்காளியை சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்.

    பின்னர் புளிக்கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும்.

    பின்னர் தேங்காய் பால் தேவைக்கு சேர்க்கவும்.

    குழம்பு நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் முட்டையை தனித்தனியாக பவுலில் உடைத்து ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு விட்டு கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.5 லிருந்து பத்து நிமிடம் மூடி போட்டு சிம்மில் வைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    சுவையான முட்டை சால்னா ரெடி.

    பின் குறிப்பு: தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடும்போது தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கலாம். முட்டையை ஊற்றிய பிறகு அதிக நேரம் அடுப்பில் வைத்தால் கிரேவி வற்றிவிடும். அதனால் சிறிது நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூழ்களின் தன்மை மாறுபடும். இன்று ஒடியல் கூழை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாக காயவைத்து கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவை (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகையாகும்.

    தேவையான பொருட்கள் :

    ஒடியல் மா - 1/2 கிலோ
    மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
    நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
    இறால் - 1/4 கிலோ
    சின்ன சின்ன கணவாய்கள், நெத்தலி மீன் கருவாடு - 100 கிராம்
    காராமணி - 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
    பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
    ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
    அரிசி - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 10 இரண்டாக பிளந்தது
    செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
    பழப்புளி - 100 கிராம்
    உப்பு - சுவைக்கேற்ப



    செய்முறை :

    காராமணியை நன்றாக ஊறடிவைத்து கொள்ளவும்.

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன், நண்டு, கருவாடு, இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒடியல் மாவை ஒரு சிறு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2 மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும்.

    காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

    பழப்புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.

    இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.)

    அதனுள் கழுவிய அரிசி, ஊறவைத்த காராமணி, பலாக்கொட்டைகள், மீன் துண்டுகள், மீன் தலைகள், நண்டு, இறால், நெத்திலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.

    அனைத்தும் நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.

    சூப்பரான யாழ்ப்பாணத்து ஒடியல் கூழ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று கோஸ் சேர்த்து வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உளுத்தம்பருப்பு - 1 கப்,
    பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்,
    இஞ்சி - 1 துண்டு,
    பச்சை மிளகாய் - 2,
    கறிவேப்பிலை - சிறிது,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கேற்ப,
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை:

    உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.

    ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து கொள்ளவும்.

    அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான கோஸ் வடை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×