என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    கருப்பு கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, சோடியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன. கருப்பு கொண்டைக்கடலை குருமா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையானப் பொருள்கள்:

    கருப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
    மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கு
    கொத்துமல்லி இலை - ஒரு கொத்து
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்

    அரைக்க:

    தேங்காய் - 3 துண்டுகள்
    கசகசா - 1/2 டீஸ்பூன்
    பொட்டுக்கடலை - 1/4 டீஸ்பூன்

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
    கிராம்பு - 1
    பிரிஞ்சி இலை - 1
    சீரகம் - கொஞ்சம்
    பெருஞ்சீரகம் - கொஞ்சம்
    முந்திரி - 5

    கருப்பு கொண்டைக்கடலை குருமா

    செய்முறை:

    கருப்பு கொண்டைக்கடலையை முதல் நாளிரவே ஊற வைத்து விடவும்.

    கடலையைக் கழுவிவிட்டு, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து, வேக வைத்து, நீரை வடித்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெறும் வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து சிறிது சுடு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும் .ஊறியதும் தேங்காய், பொட்டுக்கடலையுடன் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் வேக வைத்த கடலையை சேர்த்துக் கிளறிவிட்டு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கடலை மூழ்கும் அளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

    எல்லாம் நன்றாகக் கலந்து, சிறிது நேரம் கொதித்து, வாசனை வந்த பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்க் கலவையைக் குருமாவில் ஊற்றி கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

    கொதி வந்து பிறகு எலுமிச்சை சாறு, கொத்துமல்லி தூவிக் கிளறிவிட்டு அடுப்பை நிறுத்திவிடவும்.

    இப்போது அருமையான, கருப்பு கொண்டைக்கடலை குருமா தயார்.

    இது பூரி, சப்பாத்தி, நாண், சாதம் இவற்றிற்கு நல்ல பொருத்தமாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காளானில் உள்ள தாது உப்பும், புரதமும் வளரும் குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளுள் முக்கியமானவை. இன்று காளான் வைத்து பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டன் காளான் - 15,
    கடலை மாவு - அரை கப்,
    கார்ன்ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்,
    அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்,
    மைதா - 1 டேபிள் ஸ்பூன்,
    சீரகத்தூள், மிளகாய்த் தூள் - தலா 1 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    காளான் பஜ்ஜி

    செய்முறை :

    காளானை நன்றாக சுத்தம் செய்து இரண்டாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, கார்ன் ஃப்ளார், அரிசி மாவு, மைதா, சீரகத்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    இதில் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து கொள்ளுங்கள்.

    காளானை ஒவ்வொன்றாக அதில் நனைத்து எடுத்து, காயும் எண்ணெயில் பொரித்துப் பரிமாறுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் காளானை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான காளான் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிங்கப்பூரில் மிகவும் பிரபலமானது 'மீன் தலைக் கறி’ (Fish Head Curry). இந்த மீன் தலைக்கறியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் தலை - 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்ற வகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)
    வெண்டைக்காய் - கால் கிலோ
    கத்திரிக்காய் - கால் கிலோ
    நாட்டுத் தக்காளி் - கால் கிலோ
    சின்ன வெங்காயம் - கால் கிலோ
    புளி - 200 கிராம்
    மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்
    மல்லித் தூள் (தனியாத் தூள்) - 4 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 குழிக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    வெல்லம் - சிறிதளவு

    தாளிக்க:

    கடுகு - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    கறிவேப்பிலை- சிறிது

    மீன் தலைக் கறி

    செய்முறை:


    வெண்டைக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு முழுதாக அப்படியே வைக்கவும்.

    கத்தரிக்காய், நாட்டுத்தக்காளியை இரண்டாக வெட்டிக்கெள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

    புளியை கரைத்து கொள்ளவும்.

    மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள் தூள் தடவி ஊற விடவும்.

    அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.

    இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டுக் கிளறவும்.

    புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம் தான் வேக வேண்டும்.

    சூப்பரான மீன் தலைக் கறி ரெடி.

    இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அஹனி பிரியாணி என்கிற வெள்ளை பிரியாணி காயல்பட்டினத்தில் மிகவும் பிரபலமானது. அந்த ஊர் கல்யாண விருந்து மற்றும் சில முக்கிய விருந்துக்கு இந்த பிரியாணிதான் செய்வார்கள்..
    தேவையான பொருள்கள் :
     
    சிக்கன் - அரை கிலோ
    பிரியாணி அரிசி - 1/2 கிலோ
    பச்சைமிளகாய் - 15
    கொத்தமல்லி தழை - 1 கட்டு
    புதினா - 1/2 கட்டு
    வெங்காயம் - 6
    பிரியாணி இலை - 1
    உப்பு தேவைக்கு

    தாளிக்க :

    நெய் - 50 கிராம்
    தேங்காய் எண்ணெய் - 50 கிராம்
    இஞ்சி பூண்டு - 3 டீஸ்பூன்
    தயிர் - 3 டீஸ்பூன்
    ஏலக்காய் - 4
    பட்டை சிறிதளவு
    கிராம்பு - 2
    பிரியாணி இலை - 1
    கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
     
    அரைக்க தேவையான பொருள்கள் :

    முந்திரி - 25 கிராம்
    பாதம் - 25 கிராம்
    பிஸ்தா - 10 கிராம்
    கசகசா - 10

    அஹனி பிரியாணி

    செய்முறை :

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியினை 20 நிமிடம் ஊற வைக்கவும்.

    கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை நீட்டமாக மெலிதாக நறுக்கி வைக்கவும்.

    சிக்கனுடன் 2 ஸ்பூன் த‌யிர், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்க‌வும்.

    அடி க‌னமான‌ பாத்திர‌த்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்த‌ பின்பு தாளிக்க‌ வேண்டிய‌ பொருட்க‌ளை போட்டு தாளித்த பின்னர்
    வெங்காய‌ம், ப‌.மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும்.

    ந‌ன்றாக‌ வ‌த‌ங்கிய‌ பிற‌கு கலந்து வைத்து சிக்கனை போட‌வும்.
     
    இத‌னுட‌ன் அரைத்த‌ ந‌ட்ஸ் விழுது, உப்பு சேர்த்து ந‌ன்றாக‌ மூடிப்போட்டு 1/2 மணிநேரம் சிக்கனை வேக‌விட‌வும்.

    பிறகு அதில் 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிவந்த பின்பு ஊற வைத்த அரிசியினை சேர்க்கவும். நன்றாக கிளறி விடவும். மேலே கடைசியாக எலுமிச்சை பழத்தினை சுற்றிவரை பிழிந்துவிடவும்.

    பிரியாணி சட்டியினை மூடி போட்டு மேலே ஒரு அடிகனமான பாத்திரம் வைத்து ஆவி போகாமல் 10 நிமிடம் ஹை தணலிலும் அடுத்த 15 நிமிடங்கள் குறைந்த தணலிலும் வைத்து அடுப்பினை அணைக்கவும்.

    பிறகு 20-30 நிமிடம் கழித்து சூட சூட பரிமாறவும்.

    அஹனி பிரியாணி ரெடி.

    குறிப்பு :

    குறைந்த தணலில் அடுப்பில் சட்டியினை வைக்கும் பொழுது தோசை தவாவினை கீழே வைத்து மேலே சட்டியினை வைத்தால் அதிகம் கீழே அடிபிடிக்காது.

    பிரியாணி எடுக்கும் பொழுது மரக்கரண்டியினை பயன்படுத்தவும். மரக்கரண்டியால் பிரியாணி எடுக்கும்பொழுது பிரியாணி உடையாமல் வரும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் மிகவும் பிடிக்கும். இன்று வித்தியாசமான சிக்கன் முர்தபா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    கோதுமை - 3 கப்
    சிக்கன் - 200 கிராம்
    பட்டாணி - 100 கிராம்
    வெங்காயம் - கால் கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
    முட்டை - 8
    கோஸ் - 100 கிராம்
    கேரட் - 50 கிராம்
    கறிவேப்பிலை - 1 கொத்து
    கொத்தமல்லி இலை - 1 கொத்து
    மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 3 டீஸ்பூன்
    துருவிய தேங்காய் - 1 கப்
    உப்பு - தேவையான அளவு
     
    சிக்கன் முர்தபா

    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.

    கோஸ், கேரட், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் எண்ணெய், உப்பு, தண்ணீர் ஊற்றி ரொட்டி மாவு பதத்திற்கு பிரைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை 30 மணிநேரம் ஊற வைத்த பிறகு சப்பாத்திகளாக சுட்டு வைக்கவும்.
     
    கடாயில் சிக்கனை போட்டு அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மசாலா மற்றும் உப்பு போட்டு வேகும்வரை வரட்டவும்.
     
    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம், கோஸ், கேரட், பட்டாணி, கறிவேப்பிலை, உப்பு மற்றும் மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு வதக்கவும்.
     
    வெங்காயம் வதங்கிய பிறகு கொத்தமல்லி இலை, துருவிய தேங்காயை போட்டு தேங்காய் கொஞ்சம் கனிந்து சேர்ந்த பிறகு இறக்கவும்.
     
    அடுப்பில் ரொட்டி தவாவை வைத்து தவா கொஞ்சம் காய்ந்ததும், 2 டீஸ்பூன் முட்டையை சட்டியில் பரவலாக ஊற்றவும்.
     
    பிறகு அதன்மேல் தேய்த்து வைத்த ரொட்டியை போட்டு, முட்டை ரொட்டியுடன் நன்கு ஒட்டிய பிறகு, ரொட்டியை திருப்பி போடவும்.
     
    ரொட்டியின் முட்டை மேல் 2 ஸ்பூன் சிக்கன் கலவையை வைத்து சதுரமாக நான்கு பக்கமும் மடிக்க வேண்டும்.
     
    பிறகு முன்னும் பின்னும் எண்ணெய் ஊற்றி அழகாக சுட்டு எடுக்கவும்.

    சூப்பரான சிக்கன் முர்தபா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்த ஸ்நாக்ஸ் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சாக்லேட், தேங்காய் சேர்த்து சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தேங்காய் துருவல் - 200 கிராம்
    மேரி பிஸ்கட் ( Marie gold biscuits) - 10
    சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன்
    வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
    கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்
    பால் - அரை கப்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது)

    அலங்கரிக்க

    தேங்காய் துருவல் - தேவையான அளவு

    சாக்லேட் தேங்காய் பால்ஸ்

    செய்முறை


    மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

    இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.

    ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

    பிடித்து வைத்த உருண்டைகளை தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.

    இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும்.

    அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.

    இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பஜ்ஜி தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். மாலை நேரத்தில் டீ யுடன் சேர்த்து சாப்பிடலாம். இன்று குடைமிளகாயில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    கடலைமாவு - 1 கப்
    அரிசி மாவு - 3 மேஜைக்கரண்டி
    குடைமிளகாய் - 2
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    பெருங்காயம் - 1 சிட்டிகை
    மல்லித்தூள் - 1/4 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    சோடா உப்பு - 1 சிட்டிகை
    தண்ணிர் - 3/4 கப்
    கேசரி கலர் - 1 சிட்டிகை
    எண்ணெய் - பொரித்து எடுக்க

    குடைமிளகாய் பஜ்ஜி

    செய்முறை

    குடைமிளகாயை வேண்டிய வடிவில் வெட்டிக்கொள்ளவும்.

    முதலில் ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், பெருங்காயம், மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், உப்பு, சோடா உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் சிறிது கட்டியாக கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெட்டி வைத்த குடைமிளகாயை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூடான சுவையான குடைமிளகாய் பஜ்ஜியை சூடாக டீ, அல்லது காபி உடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் கீரை என்றால் சாப்பிடமாட்டார்கள். இவர்களுக்கு இந்த முறையில் கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    பசலைக்கீரை - 2 கட்டு,
    சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    பசலைக்கீரை பூரி

    செய்முறை:

    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கிய பிறகு ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சுவையான சத்தான பசலைக்கீரை பூரி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் குழந்தைகளின் வாய்க்கு சுவையாக வித்தியாசமாக ஏதேனும் செய்து கொடுக்க நினைத்தால், தக்காளி பாஸ்தா செய்து கொடுங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாஸ்தா - 3 கப்
    வெங்காயம் - 1
    கேரட் - 1
    தக்காளி - 2
    பூண்டு - 2-3 பற்கள்
    இஞ்சி - 1 இன்ச்
    பச்சை மிளகாய் - 1-2
    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிது

    தக்காளி பாஸ்தா

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, கேரட், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் பாஸ்தாவை சேர்த்து 4-5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து விட்டு, பின் குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.

    தக்காளி பச்சை வாசனை போனவுடன் அதில் சாம்பார் பொடி, தக்காளி சாஸ் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், தக்காளி பாஸ்தா ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கோதுமை மாவில் தட்டை செய்து கொடுக்கலாம். இன்று இந்த தட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
    வெண்ணெய் - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு

    கோதுமை தட்டை

    செய்முறை:

    கடலைப்பருப்பை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவை கொட்டி அதனுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், வெண்ணெய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

    அதனை சிறு உருண்டைகளாக்குங்கள்.

    உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி மெலிதாக தட்டைபோல் ஆக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த தட்டைகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    சுவையான கோதுமை தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வடஇந்திய உணவு வகைகளில் ஒன்றான ரகடா பேட்டீஸ் இனிப்பும் புளிப்புமான ஒரு சிற்றுண்டி. இன்று இந்த சிற்றுண்டியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பேட்டீஸ்:

    தேவையான பொருட்கள் :


    உருளை கிழங்கு - கால் கிலோ
    பிரட் - 3 ஸ்லைஸ்
    பூண்டு - சிறிதளவு
    சோள மாவு - 4 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்

    செய்முறை :


    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

    பிரட்டை மிக்சியில் போட்டு உதிர்த்து கொள்ளவும்.

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு நன்றாக மசித்த பின்னர் அதனுடன் உதிர்த்த பிரட், பொடியாக நறுக்கிய பூண்டு, சோள மாவு, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து உருண்டையாக உருட்டி வைக்கவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானவுடன் உருண்டைகளை தட்டையாக தட்டி எண்ணெய் தடவிய தவாவில் போட்டு வெந்தவுடன் திருப்பி போட்டு மொறு மொறுப்பாக சிவந்தவுடன் எடுத்து வைக்கவும். சூப்பரான பேட்டீஸ் தயார்.

    ரகடா பட்டீஸ்

    ரகடா :

    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - ஒரு கப்
    வெங்காயம் - ஒன்று (பெரியது)
    கரம்மசாலா தூள் - 2 ஸ்பூன்
    தக்காளி சாஸ் - தேவையான அளவு
    லெமன் ஜூஸ் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சர்க்கரை - அரை ஸ்பூன்
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 4 பல்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    செய்முறை :

    பட்டாணியை குக்கரில் போட்டு நன்றாக வேக வைத்து முக்கால் பாகத்தை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு சுருள வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கரம்மசாலா தூள், மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.

    மிக்சியில் இஞ்சி, பூண்டு, மீதமுள்ள வெங்காயம், மீதிமுள்ள பட்டாணி சேர்த்து அரைக்க வேண்டும்.

    அரைத்த விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அதனுடன் சர்க்கரை, தக்காளி சாஸ் சேர்த்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் இறக்கி விட வேண்டும்.

    இறுதியில் கிரேவியில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி விட்டால் ரகடா தயார்.

    பேட்டீஸ் மேல் ரகடாவை ஊற்றி அதன் மேல் ஓமப்பொடியை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ரகடா பேட்டீஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முட்டை சீஸ் மஃபினை ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    முட்டை - 6
    ஷ்ரெட்டடு சீஸ்(Shredded cheese) - 6 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    உப்பு, மிளகு - தேவையான அளவு
    குடை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு

    முட்டை சீஸ் மஃபின்

    செய்முறை :

    வெங்காயம், குடை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மைக்ரோவேவ் அவனை 180 - 200C’ல் முற்சூடு செய்யவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

    பின்னர் பொடியாக நறுக்கிய வெங்கயம், குடைமிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

    இப்பொழுது 6 மஃபின் மோள்டுகளில் எண்ணெய் தடவிய பின் இந்த கலவை ஊற்றி சிறிது சீஸை மேலே தூவி விடவேண்டும்.

    முற்சூடு செய்த அவனில் வைத்து 15 - 20 நிமிடம் பேக் செய்யவும்.

    சுவையான முட்டை சீஸ் மஃபின் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×