என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை பூரி
Byமாலை மலர்13 Nov 2019 8:38 AM GMT (Updated: 13 Nov 2019 8:38 AM GMT)
குழந்தைகள் கீரை என்றால் சாப்பிடமாட்டார்கள். இவர்களுக்கு இந்த முறையில் கீரையை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
பசலைக்கீரை - 2 கட்டு,
சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
செய்முறை:
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கிய பிறகு ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிறகு மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
கோதுமை மாவு - 2 கப்,
பசலைக்கீரை - 2 கட்டு,
சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள், சர்க்கரை - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பசலைக்கீரையை போட்டு சிறிது நேரம் வதக்கிய பிறகு ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த கீரை விழுது, சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சர்க்கரை, மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து) மிருதுவான பூரி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிறகு மாவை சிறு சிறு பூரிகளாக தேய்த்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்த பூரிகளை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான சத்தான பசலைக்கீரை பூரி ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X