என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    வீட்டிலேயே கேக் செய்வது மிகவும் எளிமையானது. இன்று கேழ்வரகு, சாக்லேட் சேர்த்து கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 35 கிராம்
    கோதுமை மாவு - 35 கிராம்
    வெண்ணெய் - 40 கிராம்
    சர்க்கரை - 65 கிராம்
    பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்
    கோக்கோ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்புத் தண்ணீர் - ஒன்றே கால் டீஸ்பூன்
    எண்ணெய் - ஒன்றே கால் டீஸ்பூன்
    சாக்லேட் எசென்ஸ் - 1 டீஸ்பூன்
    முட்டை - 1
    சாக்லேட் துகள்கள் - தேவையான அளவு

    ராகி சாக்லேட் கேக்

    செய்முறை:

    கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் மூன்றையும் சேர்த்துக் சலித்து வைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சர்க்கரையைத் சேர்த்து சிறிது நேரத்துக்கு நன்றாகக் கலக்கவும்.

    பின்னர் அதனுடன் முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்.

    இதனுடன் உப்புத் தண்ணீர் மற்றும் எண்ணெயைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அனைத்து நன்றாக கலந்தவுடன் சலித்த மாவுகளை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பொங்கி வரும் வரை கலக்கவும்.

    கடைசியாக சாக்லெட் எசென்ஸ் ஊற்றி கலக்கி விடவும்.

    எல்லாவற்றையும் ரெடி செய்தவுடன் கேக் செய்யும் பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சிறிது கோதுமை மாவு தூவி, பாத்திரம் முழுக்கப் பரப்பி விடவும்.

    அதன் மேல் கேக் மாவைக் கொட்டவும். கேக் பாத்திரத்தை லேசாக தரையில் தட்டி சமன்படுத்தவும்.

    இதை குக்க‌ரில் வைத்து 25-30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்து இறக்கி விடவும்.

    கேக் ஆறியதும் கிரீம் தடவி சாக்லெட் துகள் களைத் தூவி அழகுபடுத்தி பரிமாறவும்.

    சூப்பரான ராகி சாக்லேட் கேக் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பொடிமாஸ் தோசை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 3
    இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
    முட்டை - 4
    உப்பு - தேவைக்கேற்ப
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    தோசை மாவு (வீட்டில் தயாரித்த) - தேவைக்கேற்ப

    முட்டை பொடிமாஸ் தோசை

    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    இவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். முட்டையை நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். முட்டை பொடிமாஸ் தயார்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைக்கு மாவு எடுத்து முழு அளவில் ஊற்றாமல் சற்று சின்னதாக ஊற்றி, முட்டை பொடிமாஸை ஒரு கரண்டி அளவு போட்டு நன்றாக அமுக்கி விடுங்கள். தோசை மாவில் முட்டை பொடிமாஸ் நன்றாக அமுங்கி இருக்க வேண்டும். பின் தோசையை திருப்பி போட்டு நான்றாக வெந்ததும் எடுக்க வேண'டும். மூடி போட்டும் எடுக்கலாம். பின் சூடாக பரிமாறவும்..

    கார சட்னி, தக்காளி தொக்கு, சிக்கன், மட்டன் கிரேவி ஏதாவது ஒன்றுடன் தொட்டு சாப்பிடலாம்.

    குறிப்பு: இந்த தோசையை முட்டை பொடிமாஸுக்கு பதில், டார்க் சாக்லெட், கேரட், பீட்ரூட் ஆகியவைகளை கேரட் சீவியால் சீவி தோசைமேல் தூவியும் செய்யலாம் இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

    விஜயலெஷ்மி கமலகண்ணன்

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மலச்சிக்கல், செரிமானப் பிரச்சினைகளுக்கு கவுனி அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த அரிசியில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
        
    கவுனி அரிசி - ஒரு கிலோ
    பாகு  வெல்லம் - அரை கிலோ
    சர்க்கரை - ஒரு ஸ்பூன்
    ஏலக்காய் - 4
    தேவையான எண்ணெய் - பொரிப்பதற்கு

    கவுனி அரிசி

    செய்முறை

    கவுனி அரிசியை நன்றாக கழுவி 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    பின்னர் தண்ணீரை வடிகட்டி ஒரு துணியில் சிறிது ஈரப்பதம் இருக்கும் வரை ஆறவிட வேண்டும். அரிசியை மாவாக திரிக்க வேண்டும்.

    பாகு வெல்லத்தை பொடித்து கொள்ள வேண்டும்.

    ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி பாகு வெல்லத்தை சேர்த்து கம்பி பதத்திற்கு பாகு வெல்லத்தை எடுக்க வேண்டும்.

    அதன்பின் கவுனி அரிசி மாவில் சர்க்கரை, பொடித்த ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறிய பிறகு வட்ட வடிவில் கவுனி அரிசி மாவை தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான கவுனி அரிசி அதிரசம் தயார்.

    இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு சீஸ், உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் வைத்து சுவையான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 4
    கொத்தமல்லி - 1/2 கப்
    உருளைக் கிழங்கு - 250 கிராம்
    சீஸ் - 1 1/2 கப்
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/4 கப்
    எண்ணெய் - தேவையான அளவு

    மாவு பிசைய :

    மைதா - 2 கப்
    எண்ணெய் - 2 ஸ்பூன்

    உருளைக்கிழங்கு சீஸ் சமோசா

    செய்முறை :

    உருளைக் கிழங்கை குக்கரில் 2 விசில் விட்டு வேக விடவும்.

    கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சீஸை துருவிக்கொள்ளவும்.

    உருளைக் கிழங்கு வெந்ததும், தோலை உறித்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளுங்கள். பின் அதில் ப.மிளகாய், சீஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

    மாவு பிசைய அகலமாக பாத்திரத்தில் மைதா மாவைக் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்திக்கு பிசைவது போல் பிசையுங்கள். பிசைந்ததும் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசையுங்கள்.

    அடுத்ததாக உங்களுக்கு எந்த அளவிற்கு சமோசா வேண்டுமோ அந்த அளவிற்கு கொஞ்சம் மாவை எடுத்து உருண்டைகளாக பிடித்து வையுங்கள். இப்படி எல்லா மாவையும் உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது சப்பாத்தி திரட்டும் கல்லில் வைத்து சப்பாத்தி உருட்டுவது போல் திரட்டுங்கள்.

    திரட்டிய மாவை கையில் எடுத்து சமோசாவிற்கு முக்கோண வடிவில் பிடிப்பதுபோல் கையில் சுருடிக் கொள்ளுங்கள்.

    அதில் தற்போது தயாரித்து வைத்துள்ள சீஸ் உருளைக் கிழங்கு பூரணத்தை தேவையான அளவு வைத்து மேற்புறத்தை மூடுங்கள். மாவை வாய் திறக்காதவாறு நன்கு அழுத்தி மூடுங்கள்.

    இப்படி ஒவ்வொரு மாவாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் பொரிப்பதற்கு தோவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சமோசா அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

    சுவையான உருளைக்கிழங்கு சீஸ் சமோசா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இறால் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் 500 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - துண்டு ஒன்று,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு
    பூண்டு - 5 பல்,
    முட்டை - ஒன்று,
    சோளமாவு - ஒரு ஸ்பூன்,
    மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்,
    பிரெட் தூள் - தேவையான அளவு
    கரம் மசாலா - அரை ஸ்பூன்,
    சாட் மசாலா - அரை ஸ்பூன்,
    மிளகு தூள் - அரை ஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.

    இறால் கட்லெட்

    செய்முறை :

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி இறாலை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டி விடவும்.

    வடிகட்டிய இறாலை மிகவும் சிறியதாக பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

    இந்த இறாலுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து அதனுடன் கரம் மசாலா, சாட் மசாலா, மிளகு தூள் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.

    அதில் பிரட் தூள், சோளமாவு மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்ந்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கெட்டியாக வடை செய்கிற மாதிரி செய்து நடுவில் முந்திரி பருப்பு வைத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி 35 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்தால் சுவையான இறால் கட்லெட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் வெந்தயக்கீரை கார குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெந்தயக் கீரை - 1/2 கப்
    சின்ன வெங்காயம் - 20
    பூண்டு - 10 பல்
    புளி - தேவையான அளவு
    சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
    சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    பெருஞ்சீரகம் தூள் - 1/2 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1/4 தேக்கரண்டி
    வெல்லம் - ஒரு சிறிய துண்டு

    வெந்தயக்கீரை கார குழம்பு

    செய்முறை  :


    வெந்தயக் கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும்.

    பின் சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கிவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சாம்பார் தூள், சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பெருஞ் சீரகம் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

    கடைசியாக வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

    மேலே நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.

    சூப்பரான வெந்தயக்கீரை கார குழம்பு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிக்கன், மட்டனை விட மீனில் செய்யும் கபாப் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    வெங்காயம் - 1
    வினிகர் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்
    சோள மாவு - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    மீன் கபாப்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    பின்பு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான மீன் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா - 150 கிராம்
    பட்டர் - 200 கிராம்
    முட்டை - 200 கிராம் (3or4)
    சர்க்கரை - 200 கிராம்
    கொக்கோ பவுடர் - 50 கிராம்
    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
    வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
    ஸ்பைசஸ் - 1 டீஸ்பூன் (விருப்பப் பட்டால்)
    (ஜாதிக்காய், ஏலம், பட்டை மிக்ஸ்)
    நட்ஸ்(வால் நட்ஸ், முந்திரி பருப்பு) - 25 கிராம்
    ஃப்ரூட்ஸ் - 25 கிராம்
    (டூட்டி ஃப்ரூடி, உலர் திராட்சை, ட்ரை மிக்ஸ்ட் ஃப்ரூட்)
    பாதாம் எசன்ஸ் - 2 ட்ராப் (விருப்பப்பட்டால்)
    ஆரஞ்சு ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்
    ஒயின் - 2 டீஸ்பூன்( விருப்பப்பட்டால்)
    தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
    க்ளிசெரின் - 1 டீஸ்பூன்

    சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக்

    செய்முறை :

    மைதா மாவு, பேக்கிங் பவுடர், ஸ்பைசஸ், சாக்லேட் பவுடர் எல்லாம் சேர்த்து மும்முறை சலித்து தனியே வைத்துக் கொள்ளவும்.

    சர்க்கரையை பொடித்து வைக்கவும்.

    பேக்கிங் டிரேயில் பட்டர் பேப்பர் போட்டு, எண்ணெய் தடவி மாவு தூவி தட்டி ரெடி பண்ணிக் கொள்ளவும்.

    நட்ஸ் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக திரித்து கொள்ளவும்.

    ஃப்ரூட்ஸ்சையும், நட்ஸ்சையும் ஒரு டேபிள் ஸ்பூன் மாவில் மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும்.

    பட்டரை பீட்டரால் சேர்த்து அடிக்கவும்.

    அடுத்து பொடித்த சர்க்கரையை போட்டு அடிக்கவும்.

    (fluffy) முட்டையையும், பட்டர் சர்க்கரை கலவையுடன் சேர்த்து அடித்து கொள்ளவும்,

    தயிர் சேர்க்கவும், வெனிலா எசன்ஸ், பாதாம் எசன்ஸ் சேர்க்கவும், கிளிசரின் சேர்க்கவும். நன்றாக மிக்ஸ் செய்யவும்.

    பின்பு சலித்த மாவை பட்டர், சர்க்கரை, முட்டை கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சேர்த்து பிரட்டவும்(fold in one direction). அடுத்து ஃப்ரூட்ஸ், நட்ஸ் கலந்த மாவை போட்டு கலந்து கொள்ளவும். இப்பொழுது கேக் மாவு ரெடியாகி விட்டது.

    சூடு செய்த ஒவனில் பேக்கிங் ட்ரேயில் கேக் மாவை விட்டு 170 - 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். கேக் நன்றாக ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும். சுவையான ரிச் சாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் ரெடி.

    குறிப்பு:


    நட்ஸ், ஃப்ரூட் சேர்க்காமலும் ப்லைன் சாக்லேட் கேக் செய்யலாம். தயிர், கிளிசரின், எஸன்ஸ், ஸ்பைசஸ் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    காடை முட்டை - 20
    எண்ணெய் - தேவையான அளவு
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
    இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
    கரம்மசாலா தூள் - 1 மேஜைக்கரண்டி
    நீர் - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
    காடை முட்டை


    செய்முறை :

    தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடை முட்டையை வேக வைத்து கொள்ளவும். அவற்றை குளிர்ந்த நீரில் கழுவி அதன் ஓடுகளை உடைத்து தனியே வைக்கவும்

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகத்தை போட்டு தாளித்த பின் வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

    மசாலா வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் வரை நன்கு கிளறவும்

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் காடை முட்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

    குழம்பு திக்கான பதம் வந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    காடை முட்டை குழம்பு ரெடி!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறுதானியங்களில் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் உடலுக்கு நன்மை பயப்பதோடு உடல் எடை கூடுவதையும் தடுக்கும். இன்று தீபாவளி ஸ்பெஷல் தினை முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தினை - 2 கப் (வறுத்தது)
    பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
    ஓமம் - 1 தேக்கரண்டி
    கருப்பு எள் - 1 தேக்கரண்டி
    காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    முறுக்கு

    செய்முறை

    தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.

    பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.

    வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.

    சூப்பரான தினை முறுக்கு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீபாவளிக்கு மட்டும்தான் பலவகையான இனிப்புகளை செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வோம். இன்று நெய் பால் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நெய் - 3 தேக்கரண்டி
    எழுமிச்சைசாறு - 2 தேக்கரண்டி
    சர்க்கரை - ¾ கப்
    பால் - 1½ லிட்டர்
    அலங்கரிக்க - பாதாம், பிஸ்தா

    நெய் பால் கேக்

    செய்முறை:

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு நான்ஸ்டிக் ஸ்டிக் கடாயில் ஒன்றரை லிட்டர் பாலை ஊற்றி அதை மிதமான சூட்டில் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் அடிப்பிடிக்காமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரட்டுப்பால் போல் பாலானது திரண்டு வரும். அதில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து மறுபடியும் கிளற வேண்டும். இப்பொழுது முக்கால் கப் சர்க்கரையை சிறிது சிறிதாக கலந்து கிளற வேண்டும்.

    பால் திரட்டானது சர்க்கரை சேர்த்தவுடன் இளகி மறுபடியும் கெட்டியாகும் வரை கிளற வேண்டும். இப்பொழுது நெய்யையும் ஊற்றி கிளற, கிளற நன்கு திரண்டு வரும். பின்பு ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்தப்பால் திரட்டை அதில் கொட்டி சமப்படுத்தி வைக்க வேண்டும்.

    இந்த கலவையை அறை வெப்பத்திலேயே நன்கு ஆறவிட்டு விட வேண்டும். நன்கு ஆறிய பின்பு இவற்றை வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டு அதன் மேல் பாதாம், பிஸ்தா வைத்து அலங்கரிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் டீ, காபியுடன் சாப்பிட கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா அருமையாக இருக்கும். இன்று இந்த பக்கோடாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1 கப்,
    வேர்க்கடலை - 1/4 கப்,
    மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
    முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

    கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா

    செய்முறை :

    முருங்கைக்கீரை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×