என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தீபாவளி ஸ்பெஷல்: தினை முறுக்கு
Byமாலை மலர்26 Oct 2019 7:58 AM GMT (Updated: 26 Oct 2019 7:58 AM GMT)
சிறுதானியங்களில் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் உடலுக்கு நன்மை பயப்பதோடு உடல் எடை கூடுவதையும் தடுக்கும். இன்று தீபாவளி ஸ்பெஷல் தினை முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தினை - 2 கப் (வறுத்தது)
பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - 1 தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
செய்முறை
தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.
வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.
தினை - 2 கப் (வறுத்தது)
பொட்டுக்கடலை - 2/3 கப் (வறுத்தது)
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - ¼ தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
கருப்பு எள் - 1 தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய் - ¼ கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
தினையையும், பொட்டுக்கடலையையும் தனித்தனியாக வாணலியில் இட்டு வறுத்தெடுத்துப் பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இரண்டையும் கலந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், கருப்பு எள் இவற்றையும் சேர்த்து கலக்கி அவற்றுடன் காய்ச்சிய வெண்ணையையும் சேர்த்து மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீர் கலந்து முறுக்கு மாவை மிகவும் கெட்டியாகவோ அல்லது மிகவும் தளர்வாகவோ இல்லாத பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரித்தெடுக்கலாம்.
வெண்ணெய் மற்றும் பொட்டுக்கடலை மாவு அதிகமானால் முறுக்கு சரியாக வராமல் பிரிந்து போகக்கூடும். அதுபோன்ற சமையங்களில் அதிகப்படியாக வைத்திருக்கும் தினை மாவைக் கலந்து கொண்டால் முறுக்கு மொறு மொறுப்பாக வரும்.
சூப்பரான தினை முறுக்கு ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X