என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு கிரில் சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மைக்ரோவேவ் ஓவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1/2 கிலோ
    மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    முட்டை - 1
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - சிறிதளவு

    மைக்ரோவேவ் ஓவனில் கிரில் சிக்கன் செய்வது எப்படி?

    செய்முறை:


    சிக்கனை நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி சூடு பண்ணவும்.

    இப்போது சிக்கனுடன் எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்ககூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைக்கவும்.

    பிறகு அதை வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும்.

    மிகவும் சுவையான கிரில் சிக்கன்  ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் ஸ்வீட் கார்லிக் சிக்கன் இருக்கும். இன்று இதன் செய்முறையை அறிந்து கொள்ளலாம்.
    தேவையான பொருட்கள்

    சிக்கன் - 1 கிலோ (எலும்பு நீக்கியது)
    கோதுமை மாவு - 1/2 கப்
    பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
    மிளகு - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    பட்டர் - 1 மேசைக்கரண்டி
    பூண்டு இஞ்சி விழுது - 2 மேசைக்கரண்டி
    சோயா சோஸ் - கால் கப்
    தேன் - 5 மேசைக்கரண்டி
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    பிரவுண் சுகர் - 1 மேசைக்கரண்டி
    எள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு

    சூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன்

    செய்முறை

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    எள்ளை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பூண்டு விழுது, மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பட்டர் போட்டு சூடானதும் பூண்டு, இஞ்சி, சோயா சோஸ், தேன், பிரவுண் சுகர், சேர்த்து நன்கு சூடாக்கிய பின் பொரித்த இறைச்சி துண்டுகளை போடவும்.

    கடைசியாக வறுத்த எள் கொஞ்சம் தூவவும்.

    அடுப்பில் இருந்து இறக்கி வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்லிக் சிக்கன் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதத்திற்கு சைடிஷ்ஷாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிட சுவையாக இருக்கும் இந்த மீல் மேக்கர் கட்லெட். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மீல் மேக்கர் - 100 கிராம்
    பொட்டுக் கடலை மாவு - அரை கப்
    பெரிய வெங்காயம் - 1
    கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
    கறி மசாலா - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    சோம்பு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூம் - கால் தேக்கரண்டி
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - தேவையான அளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    மீல் மேக்கர் கட்லெட்

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் மீல் மேக்கரை அரைமணிநேரம் ஊறவைத்த பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், கறிமசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் அரைத்த மீல் மேக்கரை போட்டு கட்லெட் மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.

    வித்தியாசமான மீல் மேக்கர் கட்லெட் தயார்..!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் 65 அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    வெண்டைக்காய் - 250 கிராம்
    இஞ்சி - 1/2 துண்டு
    பூண்டு - 7 பற்கள்
    பச்சை மிளகாய் - 5
    கடலைமாவு - 1/4 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    வெண்டைக்காய் 65

    செய்முறை

    மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பௌலில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின் அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்த வைத்துள்ள வெண்டைக்காயை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.

    பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

    பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

    அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
     
    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - முக்கால் கிலோ
    முருங்கைக்காய் - 2
    பெரிய வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 10
    முழு மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கசகசா - ஒரு டீஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    சோம்பு - அரை டீஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    முருங்கைக்காய் மட்டன் மசாலா

    செய்முறை :

    மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    முருங்கைக்காயை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.

    காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.

    அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக விட்டு இறக்கவும்.

    அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

    மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    பின் தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

    மட்டனுடன் மசாலா கலவை நன்கு சேர்ந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.

    முருங்கைக்காய் மட்டன் மசாலா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு கீரை வைத்து சமோசா செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு - ஒரு கப்
    நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கப்
    நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - 2
    மிளகு தூள் - ஒரு சிட்டிகை
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    பேஸ்ட் செய்ய கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

    பொன்னாங்கண்ணி கீரை

    செய்முறை :


    அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து வதக்க வேண்டும்.

    அதன்பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இந்த கலவையை தனியாக வைக்கவும்.

    ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவை போட்டு சிறிது தண்ணீரை ஊற்றி பேஸ்ட் ஆக செய்ய வேண்டும்.

    ஒரு கிண்ணத்தில் ஒரு கப் கோதுமை மாவை போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு அந்த மாவை வட்ட வடிவமாக திரட்ட வேண்டும். அதை கூம்பு ( cone)வடிவில் கத்தியால் செய்ய வேண்டும்.

    அந்த கூம்பு வடிவில் உட்பகுதியில் சிறிதளவு பொன்னாங்கண்ணி கீரையை வைக்க வேண்டும்.

    கூம்பின் அனைத்து மூலைகளிலும் கோதுமை பேஸ்ட்டை தடவ வேண்டும்

    அதன்பிறகு கூம்பின் மேல் பகுதியை முட வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பொன்னாங்கண்ணி சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூடான சுவையான பொன்னாங்கண்ணி சமோசா தயார்.

    - இந்துமதி

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சூடான சாதத்துடன் சாப்பிட ஹைதராபாத் கத்தரிக்காய் கறி அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    விதையில்லாத சிறிய கத்திரிக்காய் - 15
    பழுத்த தக்காளி - 1,
    பெரிய வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - 5
    கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    பட்டை - 1 துண்டு
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    கசகசா - ஒன்றரை தேக்கரண்டி
    முந்திரிப் பருப்பு - 10
    வேர்க்கடலை, எள் - தலா ஒரு தேக்கரண்டி
    கொப்பரைத் தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
    கெட்டியான பால் - ஒன்றரை கப்
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    ஹைதராபாத் கத்தரிக்காய் கறி

    செய்முறை

    கத்தரிக்காயின் காம்பை எடுக்காமல் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, எள், கொப்பரைத்தேங்காய் துருவலை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு தக்காளி சாறு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயை போட்டு வதக்கி தனியாக வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கத்திரிக்காய் சேர்த்துக் கிளறவும்.

    கத்திரிக்காய் கலவையில் பாலைச் சேர்த்து வேக விடவும்.

    உப்பு சேர்த்து, கரைத்து வைத்துள்ள தக்காளி மசாலா கலவையை ஊற்றி நன்றாகக் கொதித்து, குழம்பு பதம் வந்ததும் இறக்கவும்.

    சுவையான ஐதராபாத் கத்தரிக்காய் கறி தயார்!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். இன்று தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையான நத்தை கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    நத்தை - அரை கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    ப.மிளகாய் - 3
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    கரம் மசாலா - அரை  டீஸ்பூன்,
    மிளகாய்த் தூள் - 1  டீஸ்பூன்,
    கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
    தேங்காய் விழுது - கால் கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    நத்தை கிரேவி

    செய்முறை :

    நம்மூரில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நத்தை சாப்பிடும் வழக்கம் அதிகம். வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.

    கறி நன்கு வெந்த வாசம் வந்ததும் அடுப்பை அணைத்து குழம்பை இறக்கி அதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தளை தூவி இறக்கவும்.

    இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள், மட்டன் சேர்த்து செய்யும் இந்த மட்டன் தால்சா அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - கால் கிலோ,
    துவரம் பருப்பு - கால் கிலோ,
    மிளகாய் தூள் - 4 டீஸ்பூன்,
    மல்லி தூள் - 2 டீஸ்பூன்,
    கரம் மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சம் பழ அளவு,
    பூண்டு - 20 பல்,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
    தேங்காய் - அரை மூடி,
    வாழைக்காய், கெட்டியான மாங்காய், கத்திரிக்காய், தக்காளி - தலா ஒன்று,
    பெரிய முருங்கைக்காய் - 2,
    சின்ன வெங்காயம் - 4,
    பட்டை - 2
    கிராம்பு - 3,
    பச்சை மிளகாய் - 4,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி  - சிறிதளவு,
    நெய் - 50 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    மட்டன் தால்சா

    செய்முறை:

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும்.

    கழுவிய மட்டனை குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

    துவரம் பருப்பைக் கழுவி, 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக விட்டு எடுத்து வைக்கவும்.

    (வாழைக்காயையும், மாங்காவையும் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு 2 கப் தண்ணீர், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு வேக விடவும்.

    இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் உரித்து, மிளகு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

    தேங்காயைத் துருவி, தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

    புளியைத் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுக்கவும்.

    ஒரு பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி... காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை கொத்தமல்லி, தக்காளியை போட்டு குழைய வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் வெந்த துவரம் பருப்பு, வேக வைத்த மட்டன், காய்கறியை ஒவ்வொன்றாக எடுத்து இதில் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கி விடவும்.

    இத்துடன், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

    நன்றாக கொதித்ததும், புளிக்கரைசலை ஊற்றவும்.

    மீண்டும் கொதி வந்ததும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து, தேங்காய் விழுதை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கலக்கி விட்டு, எல்லாம் சேர்த்து கொதித்ததும் அடிபிடிக்காமல் கிளறி, இறக்கவும்.

    சூப்பரான மட்டன் தால்சா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    விரால் மீன் - 1/4 கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    புளி - சிறிதளவு
    தேங்காய்ப் பால் - கால் கப்
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    பூண்டு - 10 பல்
    வறுத்துப் பொடித்த வெந்தயம் - 1 டீஸ்பூன்
    சீரகம் -  1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    விரால் மீன் குழம்பு

    செய்முறை :

    விரால் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    வெங்காயம், பூண்டு, தக்காளி, கொத்தமல்லியை, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    புளியை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். புளி நன்றாக ஊறியதும் அதனை தனியாக கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளி மற்றும் சிறியத் துண்டுகளாக நறுக்கிய பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து புளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

    குழம்பு நன்றாக கொதித்த பிறகு விரால் மீன் துண்டுகளை சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

    அதன் பின்னர் தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்.

    இப்போது சுவையான கிராமத்து விரால் மீன் குழம்பு தயார்.

    குறிப்பு: பொதுவாக மீன் குழம்பு 2-வது நாள்தான் சுவையாக இருக்கும். மீன் நன்றாக குழம்பில் ஊறி 2-வது நாள் சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். கிராமத்துவாசிகள் பொதுவாக முதல்நாள் மாலையே மீன் குழம்பை வைத்துவிட்டு மறுநாள் காலைதான் சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மூன்று வகையான பருப்புகளை வைத்து செய்யும் பாயாசம் மிகவும் அருமையாக இருக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - 100 கிராம்
    கடலைப்பருப்பு - 50 கிராம்
    துவரம்பருப்பு - 50 கிராம்
    வெல்லம் - 200 கிராம்
    தேங்காய்த் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய் - 3
    முந்திரி, திராட்சை - தேவையான அளவு
    நெய் - 2 டீஸ்பூன்
    பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்.

    முப்பருப்புப் பாயாசம்

    செய்முறை:

    பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவலை இறுதியாகச் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து வைக்கவும்.

    பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து தேவையான தண்ணீர்விட்டு குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்து வைக்கவும்.

    வெல்லத்தைப் பொடித்துச் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டி வைக்கவும்.

    பிறகு வேகவைத்த பருப்புக் கலவையை அடுப்பில் ஏற்றி தேங்காய் - அரிசிக் கலவை மற்றும் வெல்லக் கரைசல் சேர்த்து நன்கு கரண்டியால் கலக்கி ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

    கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

    விருப்பப்பட்டால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.

    சூப்பரான முப்பருப்புப் பாயாசம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பால் பவுடர், தேங்காய் சேர்த்து லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் பவுடர் - 2 கப்,
    பால் - 1/4 கப்,
    சர்க்கரை - 1/4 கப்,
    ட்ரை தேங்காய் பொடி - சிறிதளவு,
    முந்திரி, ஏலக்காய் - விருப்பப்படி,
    நெய் - 2 டீஸ்பூன்.

    மில்க் பவுடர் தேங்காய் லட்டு

    செய்முறை :

    முதலில் கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

    அதே வாணலியில் 1/4 கப் பால், 1/4 கப் சர்க்கரை சேர்த்து ஏலக்காய் பொடி போட்டு 2 கப் பால் பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.

    வறுத்த முந்திரி மற்றும் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும்.

    நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

    மேலும் உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் மேலும் சுவையாக இருக்கும்.

    சுவையான மில்க் பவுடர் தேங்காய் லட்டு ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×